Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீச்சல் தடாகத்தில் இருந்து வெளிநாட்டவர் சடலமாக மீட்பு By T. SARANYA 18 OCT, 2022 | 02:27 PM வாதுவையில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் இருநு்து வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரே இன்று (18) காலை இவ்வாறு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வருகை தந்த 43 வயதான குறித்த வெளிநாட்டவர் இன்று காலை நீச்சல் தடாகத்தில் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesa…

  2. இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது- உலக வங்கி அதிகாரி By RAJEEBAN 18 OCT, 2022 | 02:53 PM இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கொவிட்பெருந்தொற்று நிலைமை உருவாகும் வரை இலங்கை மோசமான வறுமையை இல்லாதொழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ப…

  3. யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை! வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின்…

  4. திலினி பிரியமாலியிடம் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்! நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரிடம் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுவரை கிடைத்த தகவலின்படி, அவர் ஏமாற்றிய தொகை 300 முதல் 500 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் நடிகைகள், பலம் வாய்ந்த வர்த்தகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் திலினியின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. திலினி பிரியமாலி, பாதுகாப்புப் படை…

  5. இலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்..! சீனக் கப்பலொன்று நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். இதேவேளை, கப்பலில் தீப்பற்றியதையடுத்து சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில…

  6. இலங்கை அரச தொலைகாட்சி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் மின்சாரம் துண்டிப்பு! இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று ( திங்கட்கிழமை) காலை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் ரூபா வரையில் மின்கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், அதனை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை…

  7. நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1305437

  8. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சபையின் உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள், தமிழ் கட்சிகள் மற்றும் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த…

  9. நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ரணில் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைத்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்துள்ளனர். எனினும் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அதனை நான்கரை வருடங்களாக அதிகரித்ததாகவும் அது குறித்து 22ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்க…

  10. யாழில் வேலை வாய்ப்புக்காக 19ஆயிரம் இளையோர் காத்திருப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க,மகேசன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சனையானது தேசிய மட்ட வேலையில பிரச்சினைகளை பார்க்க அதிக உயர்வாக காணப்படுகின்றது, 21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலை யற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப…

  11. தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்! தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (திங்கட்கிழமை) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அதன் போது, நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார். கோமகன் விளக்கமளிக்கையில், 10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்க…

  12. 32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள் By T. SARANYA 17 OCT, 2022 | 01:26 PM அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின் தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர். சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) சர்வதேச உணவு தினமாகும். சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உண…

  13. நாட்டில் இரு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் ! 17 OCT, 2022 | 01:15 PM இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பூச்சியியல் திணைக்களத்தினால் இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ) மற்றும் குலெக்ஸ் நியாயின்ஃபுலா (Culex niyainfula ) ஆகிய இரு நுளம்பு இனங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்தார். பொதுவாக தாய்லாந்து மற்றும் இந்தியாவில் காணப்படும் குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ), இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம…

  14. இலங்கை கடன் நெருக்கடி: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் வங்கதேசம் - கை கொடுக்குமா சீனா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHEHAN SEMASINGHE/TWITTER படக்குறிப்பு, ஷேஹான் சேமசிங்க இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வில்லியம் ருஸ், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர் இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை வ…

  15. வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 40 பேர் பாதிப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 02:43 PM (கே.பி.சதீஸ்) வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று (17) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 32 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்படைந்தவர்களில் 12 மாணவர்கள் …

  16. எரிபொருள் விலைகள் குறைப்பு ! By DIGITAL DESK 5 17 OCT, 2022 | 02:55 PM எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த விலை திருத்தங்கள் இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட…

  17. இந்த ஆண்டு ஆடம்பரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தாதீர்கள் – கார்டினல் கோரிக்கை இந்த வருடத்தில் நத்தார் பண்டிகையை எளிமையாக கொண்டாடுமாறும், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் கத்தோலிக்கர்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகை பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பதாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். “நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்துமஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்கள…

    • 0 replies
    • 154 views
  18. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் இடம்பிடிப்பு களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஜானக டி சில்வா, களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சித்த மருத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியருமான நிலாந்தி டி சில்வா, பொது சுகாதார பீடத்தின் பேராசிரியை அனுராதனி கஸ்தூரிரத்ன, பேராசிரியர் அசித டி சில்வா ஆகியோர் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர். எல்சேவியர் வழங்கிய ஸ்கோபஸ் தரவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு இந்த பகுப்பாய்…

  19. ராஜபக்ஷர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் மொட்டு கட்சியை கட்டியெழுப்ப தட்டு தடுமாறுகின்றனர் என புசல்லாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமை இயற்கையாக ஏற்பட்டதல்ல. நாட்டிற்கு தலைமை தாங்கியவர்களால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளாலும் தவறான வழிமுறைகளாலும் ஏற்பட்டதாகும். இந்நிலைமையில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கும் என கூறப்படுகின்றது. அதற்கும் நாம் பல தியாகங்களோடு செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதி…

    • 0 replies
    • 262 views
  20. லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை! பொருளாதார நெருக்கடியை போக்க அரசாங்கம் உடனடியாக செயற்படாவிட்டால் லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ரீடிங் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன தெரிவித்துள்ளார். லெபனான் மற்றும் இலங்கையின் நிலைமையை ஒப்பிட்டு அவர் எழுதிய நீண்ட கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கட்டுரையில், ”லெபனானின் வங்கி அமைப்பு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. காரணம், வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகையை செலுத்த முடியாமல் திணறுகின்றன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கவும், வங்கி ஊழியர்களை …

  21. ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள்? ரஷ்யா - இலங்கைக்கு நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப் பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் பிரதிப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேம நலன்கள் குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்) https://tamil.adaderana.lk/news.php?nid=166714

  22. வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 11:44 AM (எம்.செல்வராஜா) சீரற்ற காலநிலையினால் பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை மற்றும் கடுங்காற்று ஆகியவற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாவதுடன், அம்மன் ஆலயம் ஒன்றும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. அத்துடன் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதுடன், பகுதியளவில் வீடுகளும், சேதமடைந்துள்ளன. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவட்டத்தின்…

  23. சிறந்த இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தெரிவு By T. SARANYA 17 OCT, 2022 | 12:05 PM வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியனகே அணிவித்ததோ…

  24. தனியாக வசித்து வந்த பெண்ணை கொலைசெய்து பொருட்கள் கொள்ளை : கண்டியில் பதிவாகிய 3 ஆவது கொள்ளைச் சம்பவம் By DIGITAL DESK 5 17 OCT, 2022 | 12:34 PM (எம்.வை.எம்.சியாம்) பேராதனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அங்கிருந்து நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை நண்பகல் வீட்டில் தனித்து வந்த பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பேராதனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதெனிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தி…

  25. புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் - மனித உரிமை கண்காணிப்பகம் By Rajeeban 17 Oct, 2022 | 10:15 AM அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்;வு முகாம்களில் பொதுமக்களை தடுத்துவைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கும் நகல்சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணி;ப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திற்கு செப்டம்பர் 23 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் போதைப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.