Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் ப…

  2. நாட்டின் இருப்புக்கு பாதுகாப்புத் மூலோபாய திறன்கள் முக்கியமாகின்றது - ஜனாதிபதி By T. SARANYA 12 NOV, 2022 | 03:43 PM ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. எனவே முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். …

  3. சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் - சாலிய பீரிஸ் By RAJEEBAN 10 OCT, 2022 | 11:20 AM சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள் தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இழப்பீடுகளை செலுத்தினர்,தங…

  4. சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்க…

  5. மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது. இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மினசார சபை ஊழியர் ஒருவர், 2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஸ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவராக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பது …

  6. அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கடமை வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வரவேண்டும் என்று தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு தமிழ் மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவது கடமையெனவும் தெரிவித்தார். எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், இன்று (13…

  7. 2 பிள்ளைகளின் தாய் கொலை : 7 மாதங்களின் பின் கைதான ஹோட்டல் உரிமையாளர்! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 10:51 AM இரண்டு பிள்ளைகளின் தாயான துஷாரி தில்ஹானி என்பவர் 7 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் மலசலகூட குழியில் வீசப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிரிஇப்பன்ஆர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் என தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்துக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்…

  8. தேசிய அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தல் : பொலிஸாரின் அறிவிப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 10:58 AM தலங்கம பொலிஸாரால் ஒருவர் சனிக்கிழமையன்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தடுத்து வைத்தமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை தெளிவுபடுத்தி பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான வழமையான சோதனை நடவடிக்கைகளின் போது, தலங்கம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சந்தே…

  9. யாழில் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 04:05 PM சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன. அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு வைத்தி…

  10. வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பணம் By VISHNU 13 NOV, 2022 | 08:09 PM நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , ஜனாதிபதி சட்டத்தரணியும் கொழும்பு தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் , முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் , முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் , சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும…

  11. சம்பந்தன் உட்பட, அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் பதவி விலக வேண்டும் – வினோரதராதலிங்கம் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்கள் என்பதனால் அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் தலைவர்கள் உண்மையான அக்கறையுடன் செய்யப்படுவதில்லை என்றும் இவர்கள் ஒருபோதும் ஒன்றிணைய மாட்டார்கள் என்றும் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்தார். மேலும் தமிழ்த்…

  12. விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு எரிபொருளை வழங்க சீனா இணக்கம்! விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 7.5 மில்லியன் லிட்டர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த எரிபொருள் இருப்புக்கள் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருப்புக்களை அறுவடைக்கு முன்னதாக வழங்க முடியாத போதிலும் அறுவடையின்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் இருப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவினால் வழங்கப்படவுள்ளது. https://at…

  13. போலி பற்றுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து அனுப்பபட்ட 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை மோசடி செய்தவர் கைது By VISHNU 13 NOV, 2022 | 04:22 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வழிவிழந்த சிறுவர்களை பராமரிப்பதற்காக இல்லம் அமைக்கப்பட்…

  14. சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்காது : அடுத்த 3 மாதங்கள் கடினமானதாக காணப்படும் - ஹிருணிக்கா By NANTHINI 13 NOV, 2022 | 03:48 PM (எம்.வை.எம். சியாம்) சீனா கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொண்டதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். இருப்பினும், இதனை எம்மால் நம்ப முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி இலங்கைக்கு கிடைக்காது. அதனால் எதிர்வரும் 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக காணப்படும். அதன் காரணமாக நாடு மிகவும் மோசமான கட்டத்தையே எதிர்நோக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். …

  15. மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பணப் பரிசில் ! மறைத்து வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. வழங்கப்படவுள்ள பணப் பரிசில் தொகை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். மேல் மற்றும் தென் மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …

  16. யாழில், 15 வயதான சிறுமியை திருமணம் செய்து வைக்காததால், வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை! யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , …

  17. விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் பதற்றம் : தப்பி ஓடிய அரசியல்வாதிகள் ! கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியேறிய போது, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை கூச்சலிட்டு கடுமையாக திட்டியுள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வாகனத்தில் வெளியேறினார். இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் வெளியே வரமுடியாமல் மண்டபத்திற்குள் இருந்தனர். பின்னர் வாச…

  18. யாழில் சம்புநாதஸ்வரர் ஆலயத்தின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சிவலிங்கம் திருட்டு By VISHNU 13 NOV, 2022 | 02:41 PM யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை சம்புநாதஸ்வரர் ஆலயத்தின் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடப்பட்டுள்ளது. இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் மூல மூர்த்தியான லிங்கேஸ்வரையே திருடி செல்லப்பட்டுள்ளது. ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி,வி, கண்காணிப்பு கமராவினை பரிசோதித்த போது, பூசகர் போன்ற தோற்றத்தில் ஆலயத்தினுள் உட்புகுந்த நபர் ஒருவரே சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. …

  19. வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் 2023 ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம் By VISHNU 13 NOV, 2022 | 02:36 PM ( எம்.நியூட்டன்) 2023 ஆண்டுக்கான பாதீடு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் பெருன்பாமை வாக்குகளால் நிறைவேறியுள்து. கடந்த வெள்ளிக்கிழமை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2023 ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. குறித்த பாதீட்டின் அமர்வில் ஐந்து உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை மொத்தம் 25 பேரை கொண்ட சபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 09 ஈபிடிபி உறுப்பினர்கள் 4, தமிழ்தேசிய மக்கள் முன்னணி 06 ஐதேக 03, சுயேட்சை 02 இந்த …

  20. யாருமற்ற வீட்டிலிருந்து இரு பெண் குழந்தைகள் மீட்பு By DIGITAL DESK 5 13 NOV, 2022 | 03:54 PM யாருமற்ற வீடு ஒன்றுக்குள் பெண் ஒருவரால் விட்டுச் செல்லப்பட்டதாக கூறப்படும் இரண்டு வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் நேற்று சனிக்கிழமை (12) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரு பிள்ளைகளின் தாயாரே இவர்களை இவ்வாறு விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இரண்டு பிள்ளைகளின் பெற்றோரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொலிஸ் …

  21. மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! By VISHNU 13 NOV, 2022 | 03:42 PM மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13) காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

  22. முட்டைகளை பதுக்கி வைத்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், எனினும் சிலர் முட்டைக்கு தட்டுப்பாடு இருப்பதாக சித்தரிக்க முயல்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட முட்டை விலையை மேலும் அதிகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார். உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அறிவித்துள்ள அதிக…

  23. வியட்நாமிலுள்ள 303 இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் Posted on November 13, 2022 by தென்னவள் 4 0 வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிங்கப்…

    • 0 replies
    • 281 views
  24. ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி ! ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலம் நிராகரித்துள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்ட அதேவேளை அடுத்த ஆண்டுக்குள் ஓய்வுபெறும் வயதை எட்டும் நான்கு பேருக்காகவே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரச ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற கொள்கையை வைத்து எந்த நீடிப்புகளையும் வழங்குவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூ…

  25. தமிழர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது - அமைச்சர் டக்ளஸ் By Digital Desk 2 13 Nov, 2022 | 09:33 AM (ஆர்.ராம்) கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச அளவிலான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்தவருடத்திற்குள் தீர்வு காண்பதற்காக அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.