ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 05:21 PM (எம்.மனோசித்ரா) கடலில் 50 நாட்களுக்கும் அதிக காலம் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு 7.3 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்திருக்க முடியும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தேவையான 25 - 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை …
-
- 5 replies
- 331 views
- 1 follower
-
-
யோசித ராஜபக்ச விசாரணையில் By RAJEEBAN 13 NOV, 2022 | 11:18 AM யோசித ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முன்னாள்பிரதமரின் பிரதானியாக விளங்கிய யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இலங்கை கடற்படையில் பணியாற்றியவேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வெளிநாட்டு பயிற்சிக்கு கடற்படையினரை தெரிவு செய்பவர்களை இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ள ரெலோ 2022-11-13 10:55:53 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு எம்.பி.க்களுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளர். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநன் தெரிவித்துள்ளார். அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுவர்த்தைகள் முன்னெடுகின்றபோது கிழக்கு மாகாணத்தினை புறக்கணிக்க முடியாது. ஆகவே, ஜ…
-
- 0 replies
- 100 views
-
-
பேச்சுக்கு முன்னர் உத்தரவாதம் தேவை: ஜனாதிபதி ரணிலைக் கோரும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார் By Digital Desk 2 13 Nov, 2022 | 10:55 AM * மீண்டும் ஏமாற்றமடைய முடியாது: சம்பந்தன் * ஏக்கிய அடிப்படையில் பேசமுடியாது: விக்கி * பிணையெடுப்பதற்கு உதவமுடியாது: கஜன் (ஆர்.ராம்) வடக்குமக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள பிரதான தமிழ் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் பேச்ச…
-
- 0 replies
- 132 views
-
-
இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார் இலங்கையை தளமாகக் கொண்ட தாலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர். அத்துடன் நிசார் 2018இன் பிற்பகுதியிலிருந்து இலங்கை…
-
- 1 reply
- 668 views
-
-
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்! By Vishnu 13 Nov, 2022 | 10:56 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சந்தா்ப்பத்தில் பொதுஜன பெரமுன அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது என கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று சுட்டிக்காட்டியதால் இந்தக் கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முதலில் கட்சியை ஒழுங்கமைத்து, பின்னர் முன்னாள் ஜனாதிபதி …
-
- 0 replies
- 89 views
-
-
கோட்டாபயவின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை மீட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாகவே முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி…
-
- 2 replies
- 265 views
-
-
மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்துரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம் மற்றும் அலுவலகம் என்பன அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ளன. அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை இரத்துச்செய்தா…
-
- 5 replies
- 443 views
-
-
புகையிலை, மதுசார நிறுவனத்தின் பெயரை விளையாட்டு, கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பயன்படுத்த முடியாது : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 01:24 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் சட்டத்தின்படி புகையிலை நிறுவனமொன்றின் அல்லது மதுசார நிறுவனமொன்றின் பெயரை விளையாட்டு, கல்வி சம்பந்தப்பட்ட பொது நிகழ்வுகளில் அமைச்சரொருவர் நன்றி தெரிவிக்க முடியாது என்பதுடன் அந்த நிறுவனங்களிடமிருந்து அனுசரணையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் புபுது சமரசேகர தெரிவித்தார். எனினும், நிகழ்வ…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
195 கையடக்கத்தொலைப்பேசிகள், 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்களுடன் இருவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:23 PM நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸ கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 256 views
- 1 follower
-
-
ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 18 வயதான பிரதான முகவர் கைது By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 12:34 PM ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (11) இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர்…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்ட கடவுச்சீட்டு ? – டயானா கமகே வெளிநாடு செல்லத் தடை நீதிமன்றத்தின் அனுமதியின்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பல தவறுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப் படுவதாகவும் எனவே அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்த…
-
- 1 reply
- 179 views
-
-
இலங்கை மீது மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரித்தானிய உறுப்பினர்கள் கோரிக்கை ! ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழு விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும். ஜி.எஸ்.பி. பிளஸ் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இராணுவத்திற்கான அதிகப்…
-
- 0 replies
- 144 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக, ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு எம்பிக்களுக் கிடையி ல் முரண்பாடு, பிளவு என்று எடை போடக் கூடாது. உறுப்பினர்களுக் கிடையில் எந்த முரண்பாடும், …
-
- 5 replies
- 415 views
- 1 follower
-
-
யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம் 05 NOV, 2022 | 06:50 AM யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1309907
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொ…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு! கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு, நேற்றைய தினம் கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆன M.A. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இவ் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அபிவிருத்தியும் அதிகாரபகிர்வு தொடர்பாக பல சந்தேகங்களுக்கான விளக்கங்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்…
-
- 5 replies
- 435 views
- 1 follower
-
-
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்ததுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, வெளியுலகத் தலையீடுகள் இன்றி சுமுகமான முறையில் அப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடத்த தயார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அனைத்து தமிழ் அரசியல் …
-
- 11 replies
- 489 views
- 1 follower
-
-
மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்க நடவடிக்கை : கல்வி அமைச்சர் By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 02:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதால் ஆகாரம் பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் வீதம் ஏனைய காலங்களைவிட அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெர…
-
- 0 replies
- 497 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் By T. SARANYA 11 NOV, 2022 | 03:05 PM (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரினதும் குறைப்பாடுகள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறியமை உளிட்ட கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்த வழக்கு விசா…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ By NANTHINI 11 NOV, 2022 | 04:00 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராள…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
யாழ். பருத்தியடைப்பு கடற் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீட்பு By VISHNU 11 NOV, 2022 | 03:59 PM யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் இன்று (11), இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மீனில் காயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139751
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 01:29 PM நுகேகொட பிரதேசத்தில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்து மூன்று பெண்கனையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விடுதியில் விபசாரம் இடம்பெறுவதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், நிலைய பொறுப்பதிகாரிளின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் ஜனித குமார தலைமையிலானோர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். நுகேகொட நீதிவான் நீ…
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரரின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் 27 OCT, 2022 | 09:16 PM (எம்.மனோசித்ரா) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரின் உயிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பிற சிவில் அமைப்புக்களினால் கொழும்பு - நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அருகில் இந்த ஆர்ப்பா…
-
- 2 replies
- 214 views
- 1 follower
-