ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது - சஜித் By NANTHINI 30 OCT, 2022 | 04:02 PM (க. கிஷாந்தன்) திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நுவரெலியா விஜயத்தின்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் நேற்று சனிக்கிழமை (ஒக் 29) இரவு நுவரெலியா அரலிய விருந்த…
-
- 1 reply
- 471 views
- 1 follower
-
-
ராஜபக்ஷக்களை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் - சரத் பொன்சேகா By NANTHINI 30 OCT, 2022 | 07:00 AM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால், தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே, மக்கள் அவர்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முத…
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! By VISHNU 30 OCT, 2022 | 03:08 PM யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/138691
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாமதம் - இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் சில சர்ச்சைகள் By RAJEEBAN 30 OCT, 2022 | 12:18 PM கடன்மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்ததைகள் வித்தியாசமான தரவுகள் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்களிற்கு இதுவரை வழங்கப்பட்ட ஆவணங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என தெரிவித்துள்ள இந்தியா பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிற்காக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை இந்தியா இது குறித்து சுட்டி…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் முட்டாள்தனமான மனப்பான்மையே தடையாக உள்ளது- டயனா கமகே By RAJEEBAN 30 OCT, 2022 | 11:27 AM சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் முட்டாள்தனமான மனப்பான்மையே தடையாக உள்ளது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார் சண்டே ஓப்சேவரிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரை விட அதிகளவு மக்களை கவரும் இடங்களை கொண்ட இலங்கையால் ஏன் சுற்றுலாப்பயணிகளை கவரமுடியவில்லை என்ற கேள்விக்கே டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். எங்களின் முட்டாள்தனமான மனோநிலை காரணமாக எங்களால் சிங்கப்பூர் போல சுற்றுலாப்பயணிகளை கவரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.2022ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள சுன்னாகம் பிரிவில் அதிகமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2020 ஆம் ஆண்டு பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள…
-
- 0 replies
- 179 views
-
-
நவம்பர் 2 ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு - சம்பிக்க ரணவக்க By T. SARANYA 29 OCT, 2022 | 03:52 PM (இராஜதுரை ஹஷான்) ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மக்கள் போராட்டம் வெகுவிரைவில் கிளர்ச்சியாக வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிவில் அமைப்புக்களின் தலைவர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயங்களுக்குள்ளாகிய யானை By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 06:41 AM புத்தளம் எலுவாங்குளம் கங்கைவாடி பகுதியில் காயங்களுக்குள்ளகிய நிலையில் கொம்பன் யானையொன்று காணப்படுவதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்று காயங்களுக்குள்ளான கொம்பன் யானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று மாலை கண்டுபிடித்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார். இந்த நிலையில் விலங்குளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில்…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள அமைச்சர்கள் குழு: ஆளும்கட்சிக்குள் மேலும் பிளவு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனி குழுவை அமைப்பதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தனியான குழுவாக கூட்டணி அமைக்கும் நோக்கில் அவர்க…
-
- 0 replies
- 100 views
-
-
மாத்தறை துப்பாக்கி பிரயோகம்: பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் ! மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 15 வயது சிறுவன் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரணை இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1307755
-
- 0 replies
- 367 views
-
-
ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி உள்ளாகி சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1307769
-
- 0 replies
- 380 views
-
-
வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல் 29 Oct, 2022 | 09:31 AM வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் ச…
-
- 3 replies
- 774 views
- 1 follower
-
-
யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் க…
-
- 23 replies
- 932 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு By T. SARANYA 29 OCT, 2022 | 03:35 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று சனிக்கிழமை வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபாவின் விண்ணப்ப…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
9 மாதங்களில் 1,400 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவு By DIGITAL DESK 5 29 OCT, 2022 | 03:58 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,406 வாகன கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2022 ஆ…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
பாடசாலைக்கு முன்பு கழிவுகளை வீசியவருக்கு எதிராக நடவடிக்கை By T. SARANYA 29 OCT, 2022 | 12:48 PM யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப…
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் துவிச்சக்கர வண்டியில் வேலைக்கு சமூகமளிக்கும் திட்டம் By T. SARANYA 29 OCT, 2022 | 12:10 PM நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வேலைக்குச் சமூகமளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது இதன்படி, , நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைக்கிள்களைப் பயன்படுத்தி வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும். இந்நிலையில், சைக்கிள் வாங்குவதற்கான நிதி மற்றும்…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று ம…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு! மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை த…
-
- 4 replies
- 228 views
- 1 follower
-
-
முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு By T. SARANYA 29 OCT, 2022 | 11:08 AM (எம்.மனோசித்ரா) சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய நவம்பர் 15 ஆம் திகதி முதல் , டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தையே பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக் கொள்ள முடியும் என்றும் மேலும் ஏதேனும் செலுத்…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு 1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் மரணித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை…
-
- 2 replies
- 305 views
- 1 follower
-
-
அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு! அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட இவை, இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந…
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்! பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடை விலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டு முகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்றிட்டமானது வடக்கு கிழக்கு மல…
-
- 0 replies
- 534 views
-
-
போதைப்பொருள் கடத்தல் : 12 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை! வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார். https://athavannews.com/2022/1307…
-
- 0 replies
- 157 views
-