ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் - ஜி.எல் பீரிஸ் By DIGITAL DESK 5 20 AUG, 2022 | 01:27 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா,சரித ஹேரத்,டிலான் பெரேரா,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் 09 உறுப்பினர் உள்ளடங்களாக 14 உறுப்பினர்கள் சனிக…
-
- 11 replies
- 581 views
- 1 follower
-
-
கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்…
-
- 11 replies
- 717 views
-
-
கோட்டாபய ராஜபக்ச... சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர், மகிந்த ராஜபக்ச புகழாரம். நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார் மேலும் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது நான் போகலாமா என கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் எனவும் முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை கட்சியே தீர்மானிக்ககும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டாலு…
-
- 3 replies
- 199 views
-
-
22வது திருத்த சட்டத்தில் மாற்றம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு. இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் திருத்ததிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக வாக்களிக்க சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. தனிநபர்களை இலக்கு வைத்து இவ்வாறான சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளடக்குவது நியாயமானதல்ல என்பதோடு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட பொதுஜன மு…
-
- 0 replies
- 278 views
-
-
எரி பொருளுக்காக... 03 மாதங்களில், இந்தியாவுக்கு பறந்த... 208 விமானங்கள் !! இலங்கையில் இருந்து இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏறக்குறைய 03 மாதங்களில் 208 விமானங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள சென்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளைப் பெறுவதற்காக 04 விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் விமான எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்படுகின்றது. அதன்படி அங்கிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உட்பட 208 விமானங்கள் எரிபொருளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athav…
-
- 0 replies
- 179 views
-
-
வெளிநாட்டு வேலைகளுக்கு... விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான, அறிவித்தல் ! 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கையை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஜூன் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதன்படி, புதிய திருத்தங்களின் பிரகாரம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது. மேலும், 2 வயது அல்லது அதற்கு ம…
-
- 0 replies
- 105 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் ஐ.நா. அதிகாரிகள் By DIGITAL DESK 5 20 AUG, 2022 | 01:39 PM ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் - கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (19) சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார். இந்த சந்தி…
-
- 5 replies
- 716 views
-
-
ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார…
-
- 5 replies
- 349 views
-
-
சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது! சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. சீனாவின் யுவான் வாங் …
-
- 21 replies
- 1.1k views
-
-
யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்! 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது. இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. சம்ப…
-
- 39 replies
- 1.6k views
-
-
இலங்கையில் அதிகரிக்கும் வறுமை; உணவு கிடைக்காத குழந்தைகள்; ஊட்டச்சத்து குறைந்த தலைமுறை உருவாகிறதா? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு பவாஸ் ஓர் அரச உத்தியோகத்தராக பணியாற்றுகின்ற போதும், மாதாந்த வருமானத்தைக் கொண்டு - அவரின் குடும்பத்துக்கான வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார். மாதாந்தம் 22,500 ரூபாயை அவர் சம்பளமாகப் பெறுகிறார். ஆனாலும் 5 பேர் கொண்ட அவருடைய குடும்பத்தின் செலவுகளை இந்தத் தொகைக்குள் ஈடுகட்ட முடியவில்லை என்பது அவரின் பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொ…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டுக்கு ஆபத்து - பிரதான எதிர்க்கட்சி தெரிவிப்பு By T. SARANYA 20 AUG, 2022 | 04:10 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் அமைதி வழியில் போராடுவதற்கான உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டுக்கு ஆபத்தாகும். அது மக்களை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,…
-
- 1 reply
- 265 views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய விசா நடைமுறை! இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஓராண்டு விசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் இலங்கையில் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், 250,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டு விசா வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர் முதலீட்டாளருக்கு 5 வருட விசா வழங்கப்படும், மேலும் கொழும்பிற்கு வெளியே உள்ள சொத்துக்களை முதலீடு செய்பவருக்கு 75,000 அமெரிக்க டொலர்களுக்கு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் விசா உரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முத…
-
- 2 replies
- 363 views
-
-
ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர். – கமல் குணரத்ன.- காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸாரை தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர். அதுமட்டுமல்ல ச…
-
- 4 replies
- 442 views
-
-
பொதுத் தேர்தலை நடத்தினால்... அரசியல் வாதிகளுக்கு, நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பதோடு சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை …
-
- 0 replies
- 128 views
-
-
கோட்டாபய... எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என... அறிவித்தார் உதயங்க ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றமை குற…
-
- 9 replies
- 501 views
- 1 follower
-
-
பல அமைச்சுப் பதவிகளை, கோரிய... ஆளும் கட்சி. மறுப்பு தெரிவித்தார்... ரணில் !! சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட…
-
- 0 replies
- 128 views
-
-
By VISHNU 18 AUG, 2022 | 09:19 PM கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது. கட்டிடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்துவைக்கப்படுவதாக தெரிவித்து பல்கழைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப பீட கட்டிடம் திறந்துவைக்கப்படும் நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியை வந்த மாணவர்கள் நிகழ்வு நடைபெறும் கட்டத்ததொகுயின் அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தில…
-
- 30 replies
- 1.8k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நெகிழவைத்த செயல்! வட தமிழீழம்:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத…
-
- 2 replies
- 451 views
-
-
அனல் மின் நிலையத்திற்கு... இரண்டு வருடங்களுக்கு, நிலக்கரி வழங்குகின்றது... ரஷ்ய நிறுவனம். நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் இன்று 19 வரை மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 218 views
-
-
மைத்திரிபால சிறிசேனவிடம்... குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(வியாழக்கிழமை) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாகவே மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ம…
-
- 4 replies
- 386 views
-
-
எனது பாதுகாப்பிற்காக... வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைக் கூட, இதுவரை பயன்படுத்தியது கிடையாது. -பந்துல குணவர்த்தன.- Share rதங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர், தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் தான் வாழ்ந்ததில்லை என்றும் வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு அரசமைப்பின் 14 (ஊ) சரத்து இல்லாமல் செய்யப…
-
- 1 reply
- 252 views
-
-
கோட்டா... நாடு திரும்புவது குறித்து, தெரியாது – ரணில்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com…
-
- 0 replies
- 204 views
-
-
அமைச்சர் பதவிகளை பெற்று... மக்களுக்கு சுமையாக மாற, விரும்பவில்லை – சஜித் தரப்பு! அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
-
- 0 replies
- 118 views
-
-
சேதன உர இறக்குமதி, பரிவர்த்தனைகள்... தொடர்பில் விசேட விசாரணை பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்த சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கணக்காளர் நாயகம் டபிள்யூ.பி. விக்கிரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து சேதன உர இறக்குமதி மற்றும் இந்தியாவில் இருந்து திரவ சேதன உர இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கைகள் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1295321
-
- 0 replies
- 142 views
-