ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
LTTE மற்றும் JVPயினரே நாட்டை அழித்தனர்- மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆ…
-
- 4 replies
- 415 views
-
-
இரண்டு கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை! நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த கப்பல்களில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, மற்றுமொரு கப்பலிலிருந்து 37 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளன. https://athavannews.com/2022/1302708
-
- 1 reply
- 216 views
-
-
22ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்து நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையட…
-
- 0 replies
- 341 views
-
-
மேலும் சில சேவைகள் அத்தியாவசியமானவையாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளுக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் …
-
- 0 replies
- 289 views
-
-
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் யாரையும் எதனையும் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற 36ஆவது உலக வாழ்விட தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக வாழ்விட தின கொண்டாட்டத்துடன் இணைந்து 650 வீட்டு உரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மனித உயிர்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் ந…
-
- 2 replies
- 588 views
-
-
இலங்கை வடக்கில் போதைப்பொருள் புழக்கம் - கடல் கடந்து வரும் ஆபத்து - கள நிலவரம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, யாழ் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் வழங்கப்படுகிறது இலங்கையின் வடக்கில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் எச்ஐவி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்குள்ள கள நிலவரத்தை இங்கே விவரிக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகி விட்டார். 18 வயதாகும் போது ஹெரோயின் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கி - காலப்போக்கில் அதற்கு அடிமையானார். இப்போது அவருக்கு 28 வயதாகிற…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
தடைகளைத் தகர்த்து வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்துப் போராட்டத்தின் இறுதி நிகழ்வு – பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மூவின சமூகத்தினர் 03 OCT, 2022 | 12:02 PM இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பாந்தோட்டையின் தங்காலையில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் …
-
- 5 replies
- 481 views
-
-
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்று : முல்லையில் போராட்டம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை இன்று திங்கட்கிழமை காலை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காதமை போன்ற பிரச்சினைகளினால் முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாக உள்ளதாகவும் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் …
-
- 0 replies
- 174 views
-
-
மலையக மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் By DIGITAL DESK 5 03 OCT, 2022 | 03:09 PM (எம்.வை.எம்.சியாம்) 1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் திங்கட்கிழமை (03) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 401 views
-
-
ஜனாதிபதியின் செயலை மெச்சினார் செந்தில் கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெளியிட்ட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமை…
-
- 1 reply
- 243 views
-
-
'உன் வாழ்க்கை முடிந்துவிட்டது' என சி.ஐ.டி.யினர் என்னை பயமுறுத்தினர் ; அவ்வாறான சூழலில் நம்பிக்கை அளித்தவர் கெளரி - ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் By T. SARANYA 03 OCT, 2022 | 11:14 AM (எம்.எப்.எம்.பஸீர்) 'உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், போலியான குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.ஐ.டி.யினர் என்னை கைது செய்தனர். எனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக அவர்கள் அச்சுறுத்தினர். அவ்வாறான சூழலில் முதன் முதலில் எனக்கு நம்பிக்கை கொடுத்து, எனக்காக சட்ட போராட்டத்தை ஆரம்பித்தவரே அமரர் கெளரி சங்கரி தவராசா.' என மனித உரிமைகள் தொடர்பிலான சிரேஷ்ட சட்டத்தரணியும், சர்வதேச மன்னிப்பு சபையால் அரசியல் கைதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளவருமான ஹிஜாஸ் ஹிஸ்ப…
-
- 1 reply
- 299 views
-
-
ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் இலங்கைக்கு பாராட்டு! By T. SARANYA 03 OCT, 2022 | 12:40 PM இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச கு…
-
- 0 replies
- 168 views
-
-
அரசாங்கம் அதிரடி: வரிகளை குறைத்தது பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50 தொடக்கம் 60 ர…
-
- 0 replies
- 354 views
-
-
பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானம்? 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து மாணவர்களுக்கு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/13…
-
- 1 reply
- 230 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மா…
-
- 29 replies
- 2.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முறியடிப்பதில் இலங்கை அவநம்பிக்கை? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஆறு நாடுகள் வாக்களிப்பதில் மட்டுமே இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் 46ஃ1 தீர்மானத்தின்படி இந்த பொறிமுறையை அமைத்துள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு வழமையாக வாக்களிக்கும் பங்களாதேஷ், ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை உறுப்பினர்களாக இல்லை என்றும் இந்த…
-
- 1 reply
- 607 views
-
-
உலகில் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை! உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. உலக உணவுத் திட்டத்தால், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலும், இலங்கை பட்டினி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் …
-
- 0 replies
- 118 views
-
-
யாழ். பல்கலைக்கழக துறைத்தலைவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்! பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைகழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ். பல்கலை கழகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த மாதம் கலைப்பீட மாணவர்களின் ஒரு துறைக்கான பரீட்சைக்கு வினாத்தாளை தயார் செய்யாத காரணத்தால், பரீட்சைக்கு தோற்ற தயாரான நிலையில் வந்த மாணவர்கள், பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில் திரும்பி சென்று இருந…
-
- 3 replies
- 774 views
-
-
செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைவு நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 சதவீதத்தால் குறைந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகைத்த தந்துள்ளனர். எனினும், செப்டம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வரவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வலுவான மறுமலர்ச்சிக்கான சுற்றுலா…
-
- 0 replies
- 159 views
-
-
கோட்டாவிற்கு வக்காலத்து வாங்கி தலைமறைவாகிய சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் – உதயகுமார் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவாகிய மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்தார். நேற்று தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பனவற்றால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும் மூன்று வேளை உண்டு வாழ்ந்த மக்கள், தமது உணவு வேளையை சுருக்கியுள்ளனர் என்றும் பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களுக்கும் வாழ்க…
-
- 0 replies
- 117 views
-
-
மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு? நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலு…
-
- 1 reply
- 144 views
-
-
யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய நடவடிக்கை! யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். கோட்டை பகுதியை நேற்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர் அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார். யாழ். கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகின்றதோடு ச…
-
- 1 reply
- 201 views
-
-
யாழில் வாள்வெட்டு குமுவின் பிரதான சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான சந்தேக நபர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்தார். அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் …
-
- 1 reply
- 187 views
-
-
திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச Sri Lanka ArmySri Lankan TamilsWimal WeerawansaUniversity of JaffnaSri Lankan political crisis 2 மணி நேரம் முன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தை சாடல் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும். தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வ…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலைக்கழக மாணவன் கைது! By VISHNU 02 OCT, 2022 | 07:48 PM யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலை கழக மாணவனையும், போதை வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் சனிக்கிழமை (1) பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலை கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரு…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-