Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100,000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் என்பன இன்று (04) கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்றாம் கட்ட நிவாரண பொருட்களில் 100, 000 கிலோக்கிராம் அரிசி மற்றும் 3,375 கிலோகிராம் பால்மா பொதிகள் கனரக வானனமொன்றில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை இன்று வியாழக்கிழமை பகல் வந்தடைந்துள்ளன. உணவு ஆணையாளர் திணைக்களம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த நிவாரண பொருட்களை மாவட்ட அரசாங்க அதிபர் க.விலநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, பிரதேச செயலகங்களிற்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை…

  2. கல்கிஸ்ஸ.. நீதிமன்றத்திற்குள், துப்பாக்கி பிரயோகம். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர், நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக…

  3. எதிர்வரும் 11ஆம் திகதி, மீண்டும்... நாடு திரும்புகின்றார் கோட்டா? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் திரும்புவார் என நம்பப்படுகிறது. நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் தீவ…

  4. அமைச்சர்களுக்கு இணையான... அதிகாரங்களுடன், தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய பொறுப்பு? தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின…

  5. பொருளாதார நெருக்கடி காரணமாக... நாட்டினை விட்டு வெளியேறும், இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையினை விட்டு மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரினை பணயம் வைத்து படகு மூலம் அவுஸ்ரேலியா மற்றும் இந்தியாவிற்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே தங்களது உயிர்களை பணயம் …

  6. ஜனாதிபதிக்கும், சீன தூதுவருக்கும்... இடையில் சந்திப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார். ”ஒரு சீனா கொள்கை” தொடர்பில் இலங்கையின் கடைபிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார். “தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் ஆ…

  7. போலியான QR குறியீடுகளை பயன் படுத்துவோருக்கு, எதிராக... கடும் நடவடிக்கை. எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தகைய QR குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகமையுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் டொலர்கள் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்…

  8. டீசல் கப்பலுக்கான... கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர். டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் ஜெட் எரிபொருள் கப்பல் 12 மற்றும் 14 ஆம் திகதிக்கு இடையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://…

  9. நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வ கட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலு…

  10. ஜனாதிபதி ரணிலுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்ப்பார்துள்ளதாக இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை தொடர நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் எதிர்கால ஜனாதிபதி வகிபாகம் மற்றும் உங்கள் நாடு மற்றும் மக்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு எனது நல…

  11. நகர அபிவிருத்தி அதிகார சபையினரால்... வடக்கில், விசேட பொதுமக்கள் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நகர விருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் நடமாடும் சேவை ஒன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதி பணிப்பாளர் கவிதா ஜூவகன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்காக பொதுமக்கள் நடமாடும் சேவையானது இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்த எதிர்வ…

  12. எரிபொருள் உள்ளிட்டவற்றை... அத்தியாவசிய சேவைகளாக, பெயரிட்டு... அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் மற்றும் அது சார்ந்த பிரிவுகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டு குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப…

  13. ஒமிக்ரொன் திரிபுடன்... அடையாளம் காணப்படும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, மரண வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் வெளியில் செல்லும் போதும், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் போதும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1293488

  14. (நமது நிருபர்) பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். பலாலிக்கு விஜயம் செய்திருந்த அவர் விமான நிலையத்தின் சூழலை களஆய்வு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பலாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள…

    • 6 replies
    • 598 views
  15. நாடாளுமன்ற அமர்வினை.. இன்று, ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி! அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற படைக்கல சேவ…

  16. மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை ( எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது. கொழும்பு நகரில் காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான பின்னணியில், வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை …

  17. போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு: விசாரணை ஆரம்பம்! கொழும்பு காலிமுகத்திடலில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருக்கு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளொன்றுக்கு 600 வரையிலான உணவுப் பொதிகள் அந்த ஹோட்டல் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை இலவசமாக வழங்கப்பட்டனவா அல்லது ஏதேனும் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www…

  18. சரியான முறையில்... இலங்கைக்கு பணம் அனுப்பினால், மேலும் 02 நன்மைகள் – மனுஷ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சட்டப்பூர்வமாக பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையிலான இரு யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் யோசனைகளுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள பணத்தின் அடிப்படையில் புதிய கடமையற்ற கொடுப்பனவை அறிமுகப்படுத்துவது ஒரு ஆலோசனையாகும். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையர்களால் சட்டரீதியாக அனுப்பப்படும் பணத்தின் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அ…

  19. பேக்கரி பொருட்களுக்குப்.. பயன் படுத்தப்படும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோகிராம் கோதுமை மா மூடையை கொண்டு செல்லும் போது ஒரு மூடைக்கு 300 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இருந்து மருதானைக்கு கடந்த காலங்களில் ரயிலில் கோதுமை மா கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது ரயிலில் கோதுமை மா கொ…

  20. ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது எம்.றொசாந்த் இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…

  21. விக்னேஸ்வரன் அமைச்சாரானால்... “விக்கி கோ கொழும்பு” என, கோஷம் எழுப்புவேன் – அருந்தவபாலன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து, கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலங்களில் எழுத்து மூலம் செய்யப்பட்ட உறுதிப்பாடுகள் மனதால் இணைந்த உறுதிப்பாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தற்போதைய அரசோ நிலையற்ற அரசு. இந்த அரசால் எந்த ஒரு பிரச்ச…

    • 1 reply
    • 334 views
  22. அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (நா.தனுஜா) மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ராஜபக்ஷவின் இராஜினாமாவிற்கு வழிவகுத்தது. எனவே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டுமே தவிர, அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண…

  23. நல்லூர் ஆலயத்திற்கு... வரும் பக்தர்களுக்கு, யாழ்ப்பாண பொலிஸாரின்... விசேட அறிவிப்பு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பத…

  24. கைது செய்யப்படுவதை தடுக்க... உத்தரவிடுமாறு கோரி, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மனு தாக்கல். தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், …

    • 4 replies
    • 367 views
  25. இந்நாட்டை... பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக... தற்போது பணங்களை வாரி வழங்கி வருகின்றன – மொட்டு கட்சி! போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள், இந்த சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் குறித்தும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை தோல்வி கண்ட நாடாக மாற்றுவதற்கு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் சாகர காரியவசம் தெரி…

    • 6 replies
    • 569 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.