Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடிகை தமிதாவை... விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவும் – சஜித். கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1298157

  2. அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - அதிர்ச்சியில் நாட்டு மக்கள் இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது. வருமான வரி புதிய தீர்மானத்திற்கமைய, வருடாந்த வருமானம் 1.2 மில்லியனில் இருந்து 06 மில்லியன் ரூபா வரை வர…

  3. சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By T YUWARAJ 08 SEP, 2022 | 05:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீது ஆளும் எதிர்க்கட்சி கடும் வாத விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 4,50 மணியளவில் விவாதம் முடிவுற்றது. இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு சபை இணக்கமா என கேட்டபோது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சட்டமூலத்துக்கு வாக்கெடுப்பை கோரினார். அதனையடுத்து வாக்களிப்ப…

  4. ரணிலின் அமைச்சரவையில் ராஜபக்ஷ உறவினர் - போராட்டக்குழு கோபம் 41 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி இலங்கையில் ராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (வயது 46) ஒருவர். இதற்கு முன்னரும் சசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராகப் பதவி…

  5. நாட்டின் சனத்தொகையில்... இரண்டு வீதமானோர்கூட, நேரடி வரி செலுத்துவதில்லை – மனுஷ நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1298216

  6. நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு... எம்மால், நிரந்தர தீர்வு வழங்க முடியும் – சாணக்கியன்! நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்ப…

  7. இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - பிபிசி தமிழின் கள ஆய்வு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தன் மகனுடன் நிரூபா இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகை தந்து க…

  8. போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்! ‘அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து ச…

  9. கடும் அழுத்தம் காரணமாக... பசில், விரைவில்... அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் இன்று(வியாழக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அது தாமதமாகலாம் என கூறப்படுகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழ…

  10. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு புதிய தீர்மானத்தை முன்வைப்பது இன்றியமையாதது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By VISHNU 07 SEP, 2022 | 08:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இணையனுசரணை நாடுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தவேண்டுமெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டுமென்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானத்தை முன்வைப்பது அ…

  11. மாதாந்தம் 15 இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதியை வழங்க வேண்டும் - ராஜித்த சேனாரத்ன By DIGITAL DESK 5 07 SEP, 2022 | 08:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது அதிகரித்துவரும் மந்தபோசணை நிலைமையை கட்டுப்படுத்த 15இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதி மாதாந்தம் வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. …

  12. நாட்டில்... குற்றச்செயல்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல்... அதிகரித்துள்ளது – பொலிஸ். நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சமீபகாலமாக சாதாரண பொலிஸ் கடமைகளில் ஈடுபடுவத…

  13. வாகரை ஆற்றில்... உயிரிழந்த நிலையில், கரையொதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள்! மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் இறால் பண்ணையின் நச்சுத்தனைமை கொண்ட கழுவு நீர் கலப்பதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதிவேண்டும் என்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஆற்றில் உள்ள மீன்கள், நண்டுகள், பாம்புகள், உட்பட பல நீர்வாழ் உயிரினங்கள் கடந்த செவ்வாய்கிழமை காலை தொடக்கம் இரண்டு தினங்களாக உயிரிழந்த நிலையில் …

  14. தாங்க முடியாத.. கடன் சுமையில், இலங்கை உட்பட பல நாடுகள் – IMF இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்தார். நெதர்லாந்தில் இடம்பெற்ற ஆபிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்த நாடுகளுக்கு கடன் சுமை உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். 60 சதவீத ஏழை நாடுகள் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், பொருளாதாரச் செயற்பாடுகளை சாதாரணமாகச் சிந்திக்க முடியாமல் உள்ளன என்றும் கூறினார். கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, வலுவான வங்கி அமைப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தின…

  15. சீனாவின், பங்களிப்பு இல்லாமல்... கடன் மறுசீரமைப்பு செய்யமுடியாது – ரொய்ட்டர்ஸ். சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இலங்கைக்கு சவாலாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, உலக நிதி மேலாளர்களால் இந்த நாட்டில் உள்ள சர்வதேச பத்திரங்களின் அளவு 20 பில்லியன் டொலர்களுக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் வெளிநாட்டுக் கடன் தொகை 85 மு…

  16. ஜெயராஜ் கொலையை திட்டமிட்டது கருணா, பிள்ளையான் – விமானப்படை அதிகாரி திடுக்கிடும் தகவல் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள் உள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருணா, பிள்ளையான் கும்பல் தாக்குதலை திட்டமிட்டது ராஜபக்சாக்களின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தெரிந்த போதிலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி இதை பேசவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இணைய ந…

  17. போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் ! 05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298079

    • 7 replies
    • 491 views
  18. கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு 07 Sep, 2022 | 10:00 AM கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். அவர்களின் அந்த நீண்ட க…

  19. புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெறுவதற்காக இலங்கைஅரசாங்கம் தந்திரோபாய முறையில் காய்களை நகர்த்துகின்றது Posted on August 29, 2022 by தென்னவள் 65 0 இலங்கை அரசாங்கம் தனக்கான லாபத்தை மிகுந்த தந்திரோபாயத்துடன் செயற்படுத்த முனைகின்றது, தமிழர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கையாளவேண்டிய தருணம் இது என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம் – புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் போன்ற இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களின் உத…

    • 0 replies
    • 176 views
  20. இராணுவத்தினரால்... படுகொலை செய்யப்பட்ட, மாணவி கிருசாந்தியின்... 26ஆவது ஆண்டு நினைவு தினம்..! யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது. அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய…

  21. டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர மற்றுமொரு திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை 1008 ஆகும். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு மற்றுமொரு தீர்வாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பொது மற்றும் தனியார் துறை கூட்டு திட்டங்கள் இனங் காணப்பட்டு அந்த திட்டங்களின் மதிப்பு சுமார் 1950 மில்லியன் அம…

  22. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 07 SEP, 2022 | 03:53 PM (எம்.வை.எம்.சியாம்) வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையர்கள் 280,772 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதில் 126,148 ஆண்களும் 82,634 பெண்களும் இவ்வாறு வேலைவாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் …

  23. "இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் பிரதம செயலராக இல்லை" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இன பிரச்னைக்குத் தீர்வாகவும் தமிழர்களுக்காகவும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) உரையாற்றிய அவர், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், மாகாண சுகாதார பணிப்பாளராக தமிழர் ஒருவர் 5 வருடங்களாக க…

  24. கொழும்பில் 50,000க்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். …

  25. இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது. இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது. நிதி தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.