Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு, உதவ வேண்டாம்... ஜப்பானை கேட்டுக்கொண்டார், ரணில் – முக்கிய தகவலை வெளியிட்ட... விக்கிலீக்ஸ். இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007 ஆம் ஆண்டு ஜப்பானிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசுஷி அகாஷியிடம், இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொண்ட 14 விஜயத்தை விட 2007 ஜூன் 5 அன்று கொழும்பு வித்தியாசமாக இருந்தது என தெரிவித்து அகாஷி வெளியிட்ட டுவீட்டை மேற்கோளிட்டே விக்கிலீக்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மே…

  2. பதவி விலகுகின்றார்... தம்மிக பெரேரா – மீண்டும், நாடாளுமன்றம் நுழைகின்றார்... பசில்? முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த இறுதித…

  3. 27 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது... 22 ஆவது திருத்த சட்டமூலம்! அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 2ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய நியமனங்கள் மற்றும் அந்த நியமனங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, பிரதமர…

  4. யாழில்... பொது போக்குவரத்துக்கள், முடங்கின! இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. …

  5. ஜனாதிபதி மாளிகையில்... திருடிய பொருட்களை, விற்க சென்ற... மூவர் சிக்கினர் !! கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மாளிகையின் சுவர்களில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளை பொருட்களை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் குழு முற்றுகையிட்டபோது குறித்த நபர்கள் பொருட்களை திருடியுள்ளனர். சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எ…

  6. கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று, இன்றோடு... 21 ஆண்டுகள் ! இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 விமானப்படை கொல்லப்பட்ட அதேவேளை 14 படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏ…

  7. இலங்கையிலும்... குரங்கு அம்மை வருவதற்கான, சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை! இலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதால் நோயாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவுடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேசத்திற்கான எச்சரிக்கை அறிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளதாக …

  8. ஜனாதிபதி ரணில் தலைமையில்... நாளை கூடுகின்றது, ஆளும் கட்சி ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் ஆளும்கட்சியின் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1292214

  9. நீண்ட விடுமுறைக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்! அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். போக்குவரத்து சிரமம் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள…

  10. எமது நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் நிலையே ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய மின்சாரக் கொள்கை நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலான புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும், ஆனால் பெரும்பால…

  11. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தொழிலாளர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தினசரி ஒரு விமானம் சேவையில் இதனையடுத்து விமான நிறுவனம் வழக்கமாக கொழும்பில் இருந்து லண்டனுக்கு தினசரி ஒரு விமானத்தை மாத்திரம் இயக்குகிறது. இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பி…

  12. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு அமைச்சர்! வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக …

  13. ஜனாதிபதிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய அமைச்சர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். அமைதியான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான உரிமைகள் குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக அமைச்சர் தரிக…

    • 3 replies
    • 424 views
  14. மனோ, திகா, ரிஷாட்டுக்கு அமைச்சு பதவி… புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (23 ம் திகதி) பதவியேற்ற நிலையில். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 அமைச்சர்கள் மற்றும் 30 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதுர்டீன் மனோகணேஷன், திகாம்பரம் உள்ளிட்டவர்களோடு ஐக்கிய மக்கள் சக்தியின் 3 அல்லது 6 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்கள் என குறித்த நாளிதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்…

    • 0 replies
    • 255 views
  15. ரணிலுக்கு முடியவில்லையென்றால் நான் வேலையை ஆரம்பிப்பேன்- அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடு எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்ற உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் தீர்வு திட்டமோ, வேலை திட்டமோ உள்ளதா என்பதை இன்னும் சில நாட்களில…

    • 3 replies
    • 353 views
  16. ரணில் விக்கிரமசிங்கவின், வெற்றியில்... பங்கெடுத்த நாமல். கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விருந்துபசாரத்தில் மொட்டுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார் என்பதோடு அன்றைய இராப்போசன விருந்தில் 137 எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1292190

    • 14 replies
    • 901 views
  17. தேசிய பேரவையொன்று... உருவாக்கப்படும் – சஜித் பிரேமதாச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் குறித்து திட்டவட்டமான புரிதலுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அந்தவகையில் தேசிய பேரவை ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். இதனை அடுத்து குறித்த பேரவையில் எட்டப்படும் முற்போக்கான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க…

  18. மீண்டும், பணிகளை ஆரம்பிக்கும்... ஜனாதிபதி செயலகம். மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் . போராட்டக் காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த... கதவுகள் மற்றும் ஜன்னல்களை... சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் விசேட குற்றப் பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹா…

  19. சட்டவிரோதமாக... பலத்தை, பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜனாதிபதியிடம் வலியுறுத்து. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனா…

    • 3 replies
    • 261 views
  20. நாடாளுமன்றத்தை.. திங்கட்கிழமை, மீண்டும் கூட்டுங்கள் – எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தை திங்கட்கிழமை மீண்டும் கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை விவாதிக்கவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavann…

  21. 2008 சூலையில் கறுப்பு சூலையை முன்னிட்டு தமிழீழ நடைமுறையரசால் சிங்கள மொழியிலான ஒரு நிகழ்படம் வெளியிடப்பட்டது. அதையே கீழே காண்கிறீர்கள். ஏலுமெனில் இதை எல்லோரும் பரப்புங்கள். https://eelam.tv/watch/1983-black-july-singhala-version-கற-ப-ப-ஜ-ல-කළ-ජ-ල-tamil-massacre_5EEhyOD7LXNadeS.html

  22. தமிழ் நாட்டிலிருந்து மற்றுமொரு நிவாரண கப்பல் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-நாட்டிலிருந்து-மற்றுமொரு-நிவாரண-கப்பல்/175-300984

    • 2 replies
    • 270 views
  23. களவாடிய துப்பாக்கிகள் எங்கே?" நேருக்கு நேர் அனுரவிடம் கேட்ட ஜனாதிபதி ரணில் : ஆடிபோன அநுர

    • 12 replies
    • 888 views
  24. யாழ். பல்கலையில், கறுப்பு ஜீலை... நினைவேந்தல். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. https://athavannews.com/2022/1292144

  25. காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்த்து யாழில் போராட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. "கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடலில் உள்ள " கோட்டா கோ கம" பகுதிக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டக்காரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். குறித்த சம்பவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.