ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ரணிலை, பதவி விலகுமாறு வலியுறுத்தி... நாளை எதிர்ப்பு நாளாக பிரகடனம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு அருகில் உள்ள நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது போல பதில் ஜனாதிபதி ர…
-
- 0 replies
- 250 views
-
-
50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன்... சந்தேகநபர் ஒருவர் கைது. நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒபேசேகரபுர – நாணயக்கார மாவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேக நபர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பொரளை கோதமி வீதியில் அவர் தற்கா…
-
- 0 replies
- 240 views
-
-
ஜனாதிபதி பதவிக்காக ரணில் அரசியலமைப்புச் சதி : தடுத்து நிறுத்த தயான் 5 யோசனைகள் முன்வைப்பு (ஆர்.ராம்) ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி தயான் ஜயத்திலக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சதியை வெற்றி கொள்ளாதபட்சத்தில் ராஜபக்ஷக்களை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டம் தோல்லியடைந்து விட்டதாகவே கொள்ள வேண்டுடியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் ரணிலின் ஜனாதிபதி பதவிக்கான அரசியலமைப்புச் சதியை எவ்வாறு முறியடிக்கலாம் என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் ராஜபக்ஷவுக்கு எதிரானசக்திகளும் தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிரணிகள் தமக்குள் பிளவ…
-
- 0 replies
- 199 views
-
-
தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம் (ஆர்.ராம்) தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களான, நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிர…
-
- 0 replies
- 144 views
-
-
கோட்டாபயவுக்கு... எந்த நாடும், அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம். போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து எந்த நாடும் வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.மக்கள் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 169 views
-
-
சீனாவை விட... அதிகமாக, இலங்கைக்கு கடன் வழங்கும் நாடாக... இந்தியா! இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட அகில இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1291448
-
- 0 replies
- 271 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பாக உறுப்பினர்களை நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர். எனவே அவர்களை அச்சுறுத்தும் வகையில் இடுகைகளை செய்வது, அதனை பரப்புவது மற்றும் வெளியிடுபவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பத…
-
- 0 replies
- 210 views
-
-
ஜனாதிபதி வேட்புமனுவை... மீளப் பெறத் தயார் – நிபந்தனைகளுடன் அனுர அறிவிப்பு! எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்புமனுவை மீளப் பெறத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்…
-
- 0 replies
- 199 views
-
-
வேட்புமனுக்களை... ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை முன்னெடுப்பு புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 140 views
-
-
பொதுமக்களை... ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே, அரசாங்கம் நம்பியுள்ளது – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு பொதுமக்களை ஒடுக்கும் இராணுவ அதிகாரிகளையே அரசாங்கம் நம்பியுள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. போராட்டக்கார்களுடன் கலந்துரையாடிய இராணுவ அதிகாரி பணி இடை நீக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மக்களை அடக்கும் அதிகாரிகளே அரசாங்கத்திற்கு தேவை என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தின் முன்பாக க…
-
- 1 reply
- 555 views
-
-
ஜனாதிபதித் தெரிவு ; டலஸ் - சஜித் முன்வைக்கும் விடயங்கள் (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து உருவாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடத்திற்காக 4 பிரதான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவ்வாறு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தமது தீர்மானம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இணைந்து வரலாற்றில் முதன் முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்ப…
-
- 0 replies
- 235 views
-
-
ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும்.. அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் அவர் களமிறங்குவார் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ள…
-
- 10 replies
- 616 views
-
-
பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில். ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்…
-
- 6 replies
- 476 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நி…
-
- 5 replies
- 495 views
- 1 follower
-
-
’அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர்’ - சித்தார்த்தன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33ஆவது வீரமக்கள் தினத்தில் கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை பொறுத்த மட்டில் இந்த பொருளாதார கஷ்டம் என்பது புது விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயம். எங்களுடைய மக்கள் நீண்ட க…
-
- 5 replies
- 454 views
-
-
ரணில் விக்கிரமசிங்க... 140 வாக்குகளைப் பெறுவார் – ஐக்கிய தேசியக் கட்சி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையில் உள்ள நாட்டிற்கு தேவையான கொள்கைகள் குறித்து ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ள அரசியல் அனுபவத்திற்காக அவருக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்புவதாக…
-
- 3 replies
- 273 views
-
-
இலங்கையில் பெற்றோலின் விலையை தற்போதுள்ள விலையில் இருந்து 110 ரூபாவால் குறைக்க முடியும் உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இதனைத் தெரிவித்தார். உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை நாளொன்றுக்கு முன்னர் நூற்று நாற்பத்தைந்து டொலர்களாக இருந்த நிலையில் இன்று அதன் விலை 104 டொலர்களாக குறைந்துள்ளதாகவும் இதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளையும் வசூலித்ததன் பின்னர், 92 ஒக்டே…
-
- 3 replies
- 213 views
- 1 follower
-
-
இலவசக் கல்வி, சுகாதாரத்திற்கான அரச உதவிகளை குறைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் நிபந்தனை விதிக்கலாம் - பாலித கோஹன எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அது சீனாவுடன் நல்லுறவை பேணும் - இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பினை வழங்கவேண்டும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும் சர்வதேச நாணயநிதியம் இன்னமும் ஆரம்பகட்ட இணக்கப்பாட்டிற்கு வரவில்லை இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தக்கூடிய திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என கோரப்படுகின்றன என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பா…
-
- 1 reply
- 243 views
-
-
அறிமுகமாகிறது எரிபொருள் ’பாஸ்’ வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் எனவும் அதற்கமைய ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று …
-
- 4 replies
- 495 views
-
-
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு... வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம் வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர் . இதேவேளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தே…
-
- 0 replies
- 187 views
-
-
அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக... எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட, டலஸ் அழகப்பெரும முடிவு. அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்க…
-
- 0 replies
- 226 views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவின் துரிதப்படுத்துமாறு... பதில் ஜனாதிபதி ரணில், நீதியமைச்சருக்கு... அறிவுறுத்தல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athava…
-
- 9 replies
- 463 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? - கள நிலவரம் எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 16 ஜூலை 2022, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு போராட்டக்காரர்களின் பார்வை அதிபரின் பொறுப்புகளை ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீது திரும்பியிருக்கிறது. "கோட்டாபய ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக உத்திகளை வகுத்துச் செயல்படக்கூடியவர் என்பதால் அதற்கேற்றபடி போராட்டத்தை நாங்கள் நடத்த வேண்டியிருக்கிறது" என்கிறார் காலி முகத்திடல்…
-
- 2 replies
- 712 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடி: "கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்" - ரணில் எடுத்த அதிரடி தீர்மானம் 24 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கை பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்ளும் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 'பதில் ஜனாதிபதி' (Acting President) ஆக பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்களின் தொகுப்பு …
-
- 8 replies
- 669 views
- 2 followers
-
-
இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு (நா.தனுஜா) இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது. அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை …
-
- 7 replies
- 542 views
- 1 follower
-