ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது. இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது. நிதி தொடர…
-
- 0 replies
- 686 views
-
-
300 எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம் By DIGITAL DESK 5 07 SEP, 2022 | 12:24 PM (எம்.மனோசித்ரா) எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலிற்கான தடைகளை உருவாக்கியுள்ளனர் - அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் By RAJEEBAN 07 SEP, 2022 | 01:07 PM சர்வதேச சட்டங்களை பாரிய அளவில் மீறியவர்கள் துஸ்பிரயோகம் செய்தவர்களை அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பாரியளவில் மீறியவர்களை இலக்குவைத்து உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாக கொண்;ட மூலோபாயத்தை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நம்பகதன்மை வாய்ந்த உண்மையை கண்டறியும் பொறிமுறை தற்காலிக சிறப்பு நீதிமன்றம் ப…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
ஜெயராஜ் கொலையை திட்டமிட்டது கருணா, பிள்ளையான் – விமானப்படை அதிகாரி திடுக்கிடும் தகவல் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள் உள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருணா, பிள்ளையான் கும்பல் தாக்குதலை திட்டமிட்டது ராஜபக்சாக்களின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தெரிந்த போதிலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி இதை பேசவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இணைய ந…
-
- 3 replies
- 379 views
-
-
கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு 07 Sep, 2022 | 10:00 AM கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். அவர்களின் அந்த நீண்ட க…
-
- 10 replies
- 619 views
-
-
சர்வதேச நீதிப்பொறிமுறை நிலைப்பாட்டில் உறுதி : வீண் கற்பனைகள் அவசியமற்றது - ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் 07 Sep, 2022 | 10:05 AM சர்வதேச நீதிப் பொறிமுறை சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் உறுதியாக இருப்பதாக ரெலோவின் ஊடகப்பேச்சாளரும்,தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்இ தமிழ் மக்கள் மீது இழைக்கப் பட்ட யுத்தக் குற்றங்கள்,மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை …
-
- 0 replies
- 213 views
-
-
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் இலங்கைக்கு காத்திருக்கும் சவால்கள்! இலங்கையின் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புத் திட்டம் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலையான அரசியலில் இருந்து அது வெகு தொலைவில் உள்ளது. அத்துடன் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன் நிவாரணம் பெற வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுவதாக ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் யதார்த்தமாக மாறுவதற்கு பல கட்டங்கள் இருக்கின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவார். ச…
-
- 0 replies
- 141 views
-
-
யாழில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணிகள் இல்லை – சபையில் சுட்டிக்காட்டினார் சிறிதரன். காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில், பளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டினார். இந்த காணிகளை குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் கடிதம் எழுதிய போதும்…
-
- 0 replies
- 232 views
-
-
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை, தேசிய ரீதியில்... நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்து. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான நிறுவன சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளை கடுமையாகப் பாதித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. ஆழமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில…
-
- 0 replies
- 134 views
-
-
"உண்மையைக் கண்டறியும், ஆணைக்குழு"வை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக... புதிய சட்டம்! இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் எனTk; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டிய…
-
- 0 replies
- 122 views
-
-
பொம்மை வைத்திருந்த பெண் கைது Posted on September 6, 2022 by தென்னவள் 9 0 துணியால் சுற்றப்பட்டு, தனது மார்பகங்களுடன் அணைத்து பொம்மையொன்றை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளைக்கு கொடுப்பதற்கு பால் தேவை, பால்பக்கற் வாங்குவதற்கு தேவையான பணத்தை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே, அந்தப் பெண், பொம்மையொன்றை துணியால் சுற்றிவைத்துக்கொண்டு, ரயில்களில் பிச்சையெடுத்துள்ளார். அவ்வாறு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, மேற்படி பெண்ணை ரயில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குழந்தையை துணியால் சுற்றியிருந்த விதம் மற்றும் அவ்வாறு இருந்தால், குழந்தைக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்த ரயில் ப…
-
- 2 replies
- 620 views
-
-
பெருந்தோட்ட மக்களுக்கு 3250 ரூபா நாட்சம்பளமாக வழங்க கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டு்ம் - வடிவேல் சுரேஷ் By T YUWARAJ 06 SEP, 2022 | 08:28 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) மந்தபோசனை நிலையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் இலங்கையில் மலையகம் முதலாவது இடத்தில் இருக்கின்றது. அந்தளவுக்கு மலையக மக்கள் சத்துணவு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகெ…
-
- 1 reply
- 355 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கத்தால்... பாகிஸ்தானுக்கு, நன்கொடை. பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து இதனை கையளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கத்தினதும், மக்களதும் ஆதரவு என்றும் இருக்கும் எனவும் வெள…
-
- 2 replies
- 527 views
-
-
சீன அரசினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்திற்கு 4.3 மில்லியன் ரூபா வழங்கிவைப்பு By VISHNU 06 SEP, 2022 | 04:52 PM (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதியை சீன தூதுவரினால் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. சீன மக்கள் குடியரசின் புலமைப்பரிசில் வழங்கும் விழா மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக…
-
- 2 replies
- 365 views
- 1 follower
-
-
இலங்கையில் ஊட்டச்சத்து இல்லா நிலைக்கு தள்ளப்படும் சிறார்கள்: தீர்வு என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 52 நிமிடங்களுக்கு முன்னர் ஹபீலாவின் இரண்டு பிள்கைள் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்களுக்கான காலை உணவைக் கூட தொடர்ச்சியாக வழங்குவதில் ஹபீலா நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறுகிறார். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவு - இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வைக் கொடுத்தாலும், வழங்கப்படும் உணவின் அளவு பிள்ளைகளுக்குப் போதாது என அவர் குறிப்பிடுகின்றார். "நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சாதாரண நாட்களில் தனது பிள்கைகளுக்கு வீட்ட…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
கடும் சவால்களின் மத்தியிலும் சீன இலங்கை உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன - கிழக்கில் சீன தூதுவர் By RAJEEBAN 06 SEP, 2022 | 04:37 PM கடந்த மூன்று மாதங்களில் உலகிலும் இலங்கையிலும் பல பெரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் சீனா இலங்கை பாரம்பரிய நட்புறவின் ஒட்டுமொத்த நிலையும் பொதுவான வளர்ச்சியின் வேகமும் மாறவில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹொங் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின்போது ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிக்கலான உள் மற்றும் வெளிச்சவால்களின் மத்தியில் சீனாஇலங்கை உறவுகள் மேலும் வலுவானவையாக மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
உரக்கப்பலால் இலங்கை -சீன நல்லுறவில் பாதிப்பு :மஹிந்த அமரவீர -சி.எல்.சிசில்- உரக் கப்பல் காரணமாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவைப் பாதுகாக்க உரிய செயற்பாடுகளைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் சீனத் தூதுவர் மேலும் பேசுவார்கள் என்றும் அவர் கூறினார். உரக்கப்பல் தொடர்பில் தாம் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும், உரக்கப்பல் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு பாரியளவில் பாதிக்கப்…
-
- 0 replies
- 184 views
-
-
சமூக பாதுகாப்பு பங்களிப்பு VAT வரி 20% ஆக அதிகரிக்கும்: அனுரகுமார திஸாநாயக்க உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும், இதன் விளைவாக பெறுமதி சேர் வரி (VAT) மேலும் 20% ஆக அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிவிதிப்பு 15% VATக்கு மேலதிகமாக 2.5% வரியை வசூலிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையின் போது மொத்தமாக 20% VAT அதிகரிப்பின் போது விற்…
-
- 0 replies
- 237 views
-
-
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் சவால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரஷ்யாவின் தற்போதைய நிதி நிலைமை, கடன் தரமதிப்பீட்டை விட கடன் தரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, எரிபொருள் வழங்குநர்கள் பணம் செலுத்தத் தவறியமை மற்றும் கடன் பத்திரங்களை திறக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில…
-
- 0 replies
- 218 views
-
-
மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு - நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு By T. SARANYA 06 SEP, 2022 | 11:41 AM (க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பக…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தக்கூடாது - பேராசிரியர் ரொகான் சமரஜீவ 06 Sep, 2022 | 10:44 AM சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொகான் சமரஜீவ உடன்படிக்கை குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தினால் அது அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு பாதிப்பை பாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை தனக்கு கடன்வழங்கியவர்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் இலங்கைக்…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கையில்... ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு! இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூ…
-
- 1 reply
- 222 views
-
-
22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது. -உயர் நீதிமன்றம்.- அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1297841
-
- 0 replies
- 204 views
-
-
இந்த ஆண்டு... ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும்? எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைக்க முன்மொழிந்தார். இந்த முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். இதற்கமைய எதிர்வரும் டிசம்பர்…
-
- 0 replies
- 215 views
-
-
‘எந்தவொரு சுதந்திரமும்... பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம். பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’ -பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் .- அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படும…
-
- 0 replies
- 164 views
-