ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தேங்காய்க்கு... தட்டுப்பாடு ஏற்பட்டால், தென்னை அபிவிருத்தி அதிகார சபையே... பொறுப்பேற்க வேண்டும்? நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 290 views
-
-
அமைச்சுப் பதவியினை.. ஏற்பதற்கு தயார் – தம்மிக்க பெரேரா. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையினை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமானால் மீண்டும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்றுக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1296697
-
- 0 replies
- 181 views
-
-
நுரைச்சோலை அனல் மின்நிலைய சீன அதிகாரிகளுக்காக 12 வருடங்களாக பெருமளவு பணம் செலவு - முஜிபுர் ரஹுமான் By T. SARANYA 29 AUG, 2022 | 09:29 PM (இராஜதுரை ஹஷான்) நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்காக 12 வருடங்களாக பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளன. இந்த செலவுகள் மின்சாரக் கட்டணத்திலேயே உள்வாங்கப்பட்டுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மின்சார கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை - அலி சப்ரி By T YUWARAJ 30 AUG, 2022 | 06:19 AM (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை கால தேவைக்கமைய மறுசீரமைக்காவிடின் நாட்டு மக்களுக்கான அடிப்படை நலன்புரி சேவைகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்கட்டண …
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் இன்று ! சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள் By VISHNU 29 AUG, 2022 | 07:25 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று செவ்வாய்க்கிழமை (30), சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மூலம் தமக்கான நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பி…
-
- 4 replies
- 263 views
- 1 follower
-
-
கல்முனை... வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு, வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு? கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை, தானும் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. …
-
- 0 replies
- 207 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக பட்டம் விட்டு கொழும்பில் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, கொழும்பு 'காலி' முகத்திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 'SHE TALKS' என்ற பெண்கள் அமைப்பினால் இந்த பட்டம் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்தி, அமைதி வழி போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றமை, அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றமை, போலீஸார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பட்டம் விடும் நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது. அடக்குமுறைகளுக்கு அச்சப்பட்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
16 இலட்சம் அரச ஊழியர்களில்... சுமார் 10 இலட்சம் பேர், வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு! 16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வ…
-
- 3 replies
- 729 views
- 1 follower
-
-
கோட்டா இலங்கை வருகிறார் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடுதிரும்ப உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை நாட்டிற்கு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/203774
-
- 0 replies
- 568 views
-
-
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பாக அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "தற்போது ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. எனவே, நாங்கள் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 51 சதவ…
-
- 4 replies
- 444 views
-
-
மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் மின் கட்டண உயர்வு கட்டாயம்: காஞ்சன விஜேசேகர Digital News Team 2022-08-29T14:36:26 மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும், சபையின் செலவுகளை பார்க்கும் போது இது செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக மின்சார சபைக்கு 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொக…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
யானை தாக்கி சிறுமி பலி! Digital News Team 2022-08-29T12:53:28 ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார். ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில்(16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி இன்று (29) நடைபெறும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார். இறந்த சிறுமியின் ஒரே மூத்த சகோதரர் 14 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணன் இறந்த 14 வது நாளில், காலையில் விகாரைக்கு அன்னதானம் எடுத்துச் சென்றபோது மாணவி யானை தாக்கியதால் உயிரிழந்தார். …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு! வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்த…
-
- 9 replies
- 1.1k views
-
-
தீர்வைக் காண்பதற்காக புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை! முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையிலான குழுவினர் தமிழ் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமி…
-
- 1 reply
- 230 views
-
-
இந்தியா செல்லும் இலங்கையரைத் தடுக்க நடவடிக்கை! இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் பிரேவேசிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாக இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வீரேந்திர சிங் பதானியா தெரிவித்துள்ளார். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 160 ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் நாட்டை சென்றடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது By VISHNU 29 AUG, 2022 | 11:43 AM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத பகுதியில் குறித்த நபர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 27 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பி…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
நாளாந்த மின் விநியோக துண்டிப்பினை ஒரு மணித்தியாலமளவில் குறைக்க முடியும் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு By T. SARANYA 29 AUG, 2022 | 10:20 AM (இராஜதுரை ஹஷான்) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி தொகுதி திருத்தப்பட்டுள்ளதால் நாளாந்த மின் விநியோக துண்டிப்பினை இனி ஒரு மணித்தியாலமளவில் மட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயலிழக்கப்பட்ட முதலாவது மின் பிறப்பாக்கி தொகுதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதால் தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 300 மெகாவாட் மின் இணைக்கப்ப…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான... விமான சேவை, மீள ஆரம்பம்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய... எயார் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு... இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1296502
-
- 2 replies
- 246 views
-
-
கோட்டாவிற்கு... உத்தியோகபூர்வ இல்லமொன்றை, வழங்குவதில்... சட்ட சிக்கல் !! தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கோட்டாபய ராஜபக்ச கைவிட்ட நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகள் கிடைக்காது என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச இல…
-
- 0 replies
- 170 views
-
-
பிரித்தானியாவின் முயற்சியால்... புதிய, பிரேரணை: சுமந்திரனும்... பிரேரணை தயாரிப்பில்! எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி போன்ற நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 கீழ் 1 தீர்மானம் காலாவதியானதையடுத்து, புதிய தீர்மானத்தை…
-
- 0 replies
- 222 views
-
-
தடை நீக்கப்பட்ட, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன்... கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன். வடக்க – கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுக்களில் ஈடுபடவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தம…
-
- 0 replies
- 286 views
-
-
நாடளாவிய ரீதியில்... இரண்டாயிரத்திற்கும் அதிகமான, பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன! தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. மொத்த சந்தையில் தற்போது 50 கிலோகிராம் கோதுமை மா 17 ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1296468
-
- 0 replies
- 177 views
-
-
இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். நாடு இல்லாத தமிழ் இனம் இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று ச…
-
- 7 replies
- 771 views
-
-
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை By VISHNU 28 AUG, 2022 | 04:06 PM K.B.சதீஸ் யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்களை மக்கள் திட்டம் ஒன்றியத்தின் பிரநிதிகளால் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மக்கள் திட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வடக்கில் மக்கள் திட்ட ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் வே…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-