ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
புதிய கூட்டணியின் பெயர் 21 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வௌியேறிய 10 சுயேட்சை கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சர்வகட்சி அரசாங்கம் அமைச்சுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, மாறாக இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து அனைவரும் வெளியேறக்கூடிய ஒரு திட்டத்தை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 204 views
-
-
1,321 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது இதுவரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155,502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 44,777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொத்தம் 1,387 சோதனைகளில், 1,321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். http://tamil.adaderana.lk/news.php?ni…
-
- 0 replies
- 153 views
-
-
தமிழரிடையே சுயநிர்ணய தேர்தல் நடப்பதை இந்தியா உறுதி செய்யவேண்டும் - சிவாஜி இந்தியா அப்படி ஆதரவு தர முன்வருமா என்ற கேள்விக்கு பதில் தரும்போது, இது இனிமேலும், ஈழத்தமிழர் விவகாரம் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரம். மிக தீர்க்கமாக சீனா சிங்கள தேசத்தினுள் உள்புகுந்து விட்டது என்கிறார் அவர். இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரமாகியபோதே, பாகிஸ்தான் இரண்டாகி, பங்களாதேசம் உருவாக்கியது என்றார், சிவாஜிலிங்கம். யுத்த காலத்தின் போது இந்தியாவில் இருந்த சிவாஜிலிங்கம், யுத்தம் முடிந்த பின்னர், இலங்கை திரும்பி, மீண்டும் இந்தியா செல்ல முனைந்த போது, இரண்டு தடவைகள் காங்கிரஸ், திமுக அரச காலத்தில், சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். டெலோவினை சே…
-
- 0 replies
- 183 views
-
-
கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா? 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திற்கு செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அரச எதிர்ப்பு போராட்டம் வலுப் பெற்று, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு கடந்த ஜுலை மாதம் 9ம் தேதி எடுத்திருந்தனர். இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஜுலை மாதம் 13ம் தேதி மாலத்தீவு நோக்கி பயணித்திருந்தார். மாலத்…
-
- 38 replies
- 2k views
- 2 followers
-
-
அரசாங்கத்தின் மொத்த செலவு... 47,943 கோடியால், அதிகரிப்பு ! நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும். இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அத…
-
- 0 replies
- 167 views
-
-
யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்! யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்த…
-
- 4 replies
- 824 views
-
-
சீனாவுடனான நட்புறவை... உறுதியாக, வைத்துக் கொள்ள விருப்பம் – அமைச்சர் அலி சப்ரி. சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார். சீனாவின் இராணுவக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பை அமைச்சர் சப்ரி வெளியிட்டுள்ளார். இதேவேளை இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப…
-
- 1 reply
- 394 views
-
-
வடக்கு, கிழக்கில்... இராணுவத்தினரது அடாவடித்தனம் – சிறிதரன். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப் பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்…
-
- 0 replies
- 375 views
-
-
By T YUWARAJ (நா.தனுஜா) சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இதுவரை சுமார் 10,000 சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கியிருப்பதுடன் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக கடல்சார் விவகாரம் மற்றும் 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட' அபிவிருத்தி தொடர்பான சுயாதீன ஆய்வாளரான யசிறு ரணராஜா 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டம்' என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எழுதியிருக்கும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதன்ப…
-
- 3 replies
- 336 views
-
-
By T. SARANYA (இராஜதுரை ஹஷான்) சமையல் எரிவாயுவின் விலை குறைப்பை தொடர்ந்து உணவு பொதியொன்றின் விலையை 10 வீதத்தினாலும், தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாண் உள்ளிட்ட வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டதை தொடர்ந்து உணவு பொதி உள்ளிட்ட சிற்றுண்டிசாலை உணவு பொருட்களின் விலையினை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத…
-
- 0 replies
- 290 views
-
-
ஜனாதிபதி தெரிவின் போது... உறுப்பினர்கள் சிலர், அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த அச்சுறுத்தலினால்தான் அவர்கள், ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எத…
-
- 3 replies
- 282 views
-
-
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுவான் வாங் 5 இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் ப…
-
- 6 replies
- 523 views
- 1 follower
-
-
மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ) மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர்…
-
- 5 replies
- 591 views
- 1 follower
-
-
இலஞ்ச ஊழல் வழக்கு – ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்த…
-
- 0 replies
- 159 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/198944
-
- 0 replies
- 137 views
-
-
காலி முகத்திடலில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு (வீடியோ) காலி முகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்தில் கூடாரம் கட்டிய சிலர் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த நாட்களை ஒப்பிடுகையில் இன்று மிகக்குறைவான கூடாரங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று 123வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மக்கள் இன்று (09) காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட தளத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் நேற்று தெரிவித்தார். எவ்வாறாயினும், இன்று பிற்பகல் …
-
- 1 reply
- 219 views
-
-
ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் By Rajeeban 09 Aug, 2022 | 10:37 AM ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளத…
-
- 1 reply
- 173 views
-
-
சுற்றுலா விசாக்களில்... வேலை தேடி செல்லும், இலங்கையர்கள். – நாடு கடத்தும்.. மலேசியா! சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாரந்தோறும் 20 இலங்கையர்களுக்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு நாடுகடத்துவதாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தனது ச…
-
- 2 replies
- 219 views
-
-
நாட்டின், நடைமுறையில் உள்ள சட்டங்கள்... பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் - ஒரே நாடு, ஒரே சட்டம்... ஜனாதிபதி செயலணி தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது. இதில் 43 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றதோடு அவற்றில் தற்போது அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் அரசியல் கைதிகள் மீது நீதிமன்றில் பாரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதனை கருத்திற் கொள்ளாது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்…
-
- 2 replies
- 206 views
-
-
பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம். பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. …
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
40 அரச நிறுவனங்களை... தனியார் மயமாக்க, IMF கோரிக்கை என்ற செய்திகளில்... உண்மையில்லை – ஹர்ஷ இலங்கையில் உள்ள 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்த கருத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதி நிபந்தனையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கும் போது அந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிர…
-
- 1 reply
- 222 views
-
-
கோரிக்கைகளை நிறைவேற்ற... நடவடிக்கை எடுத்தால், சர்வகட்சியில் இணைவது குறித்து சிந்திப்போம் – விக்னேஷ்வரன் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார். அத்தோடு தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்…
-
- 1 reply
- 182 views
-
-
பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்... அனுரகுமார முன்னிலை.! நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். 23.7% டலஸ் அழகப்ப…
-
- 29 replies
- 1.3k views
- 2 followers
-
-
சர்வகட்சி அரசாங்கம்... எந்தளவு காலத்துக்கு, நீடிக்கும்? – எதிர்க்கட்சி கேள்வி. அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பல கட்சிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ள போதும் கால வரையறை தொடர்பில் எவரிடமும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார். எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு மட்டுமே ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் லக்…
-
- 1 reply
- 230 views
-
-
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம் Posted on August 8, 2022 by தென்னவள் 13 0 இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையைக் கண்டித்தும், புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதுதெ்டர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்…
-
- 1 reply
- 307 views
-