Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனாவின் உளவுத்துறை கப்பல் குறித்து ராதா கருத்து! சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் (31) இன்று ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. குறிப்பாக அத்தியவசிய பொருட்களின் …

  2. ஜனாதிபதி பதவியை இதனால் தான் ஏற்றுக் கொண்டேன்! அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் ப…

    • 3 replies
    • 419 views
  3. அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை ஒன்றை ஆற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். அமைதிக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சர்வத…

  4. அதிகாரத்தை, அரச கட்டிடங்களை கைப்பற்ற வன்முறை, ஜனநாயகவிரோத வழிமுறைகளை பயன்படுத்தும் கட்சிகள், குழுக்கள் தடை செய்யப்படலாம் - அரச அதிகாரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அல்லது அரச கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு வன்முறை ஜனநாயகவிரோத வழிமுறைகளை பின்பற்றும் எந்த குழுவும் அரசியல் கட்சியும் அமைப்;பும் தடை செய்யப்படலாம் என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மீண்டுமொரு முறை 9 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு சில குழுக்கள் திட்டமிட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தடை குறித்து தீவிரமாக ஆராயப்படுகின்றது. அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றுவதற்கு ஆக்கிரமிப்பதற்கான சேதப்படுத்துவதற்கான முயற்சிகள் பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்…

  5. எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல் வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742…

  6. இலங்கை வரும்... சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால், கடும் அதிருப்தியில்... இந்தியா. சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த கப்பலின் வருகை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் என்ன என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. சீன இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. யுவான் வோங் – 5 இராணுவ …

  7. பொருளாதார நெருக்கடி: பாலியல் தொழிலாளர்களாக... மாற வேண்டிய கட்டாயத்தில், இலங்கை பெண்கள்! பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர், பொருளாதார நெருக்கடியால், வேலை இழந்துள்ளனர், இதனையடுத்து, அதில் பலர், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் …

    • 13 replies
    • 719 views
  8. சர்வதேச நாணய நிதியத்துடனான... ஒப்பந்தம், செப்டம்பருக்கு சென்றுள்ளது – ஜனாதிபதி கவலை. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிதியுதவி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் நகரவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு உடன்படிக்கையை எட்ட இலக்கு வைத்திருந்தாலும், தற்போது அது ஒரு மாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக இலங்கை கடந…

  9. சர்வகட்சி அரசாங்கத்தில்.. இணைந்துகொள்ள வேண்டும் – கூட்டமைப்பிற்கு, ஐ.தே.க. அழைப்பு. சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அதில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அக்கட்சியின் தவிசாளர் விஜிர அபேவர்வதான கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கான தீர்வை தருவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரவாமனாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துவருவதாகவும் விஜிர அபேவர்வதான குறிப்பிட்டார். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிப…

  10. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும்... பொருளாதாரத்தில், வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய அவர், நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, நேற்று பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமானது. 28 நாடுகளின் தலைவ…

  11. காலி முகத்திடலை... ஆக்கிரமித்துள்ள, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது... சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி…

  12. யாழில் அலைபேசி திருட்டு: மூவர் கைது, 15 இலட்ச ரூபாய் பெறுமதியான 45 அலைபேசிகள் மீட்பு! by Jeyachandran Vithushan 2022/07/30 in இலங்கை, பிரதான செய்திகள் 72 1 A A 0 31 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பேருந்துகளில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …

  13. ஜூலை மாத... பணவீக்கம், வரலாறு காணாத அளவுக்கு... 60.8% ஆக உயர்வு ! இலங்கையின் பணவீக்கம் இந்த மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை காரணமாக இலங்கையின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 60.8% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவுகள் 143.6% அதிகரித்ததாகவும், உணவு விலைகள் 90.9% அதிகரித்ததாகவும் குறித்த தரவு காட்டுகிறது. https://athavannews.com/2022/1292914

  14. ‘தமிழின அடக்கு முறைக்கு... எதிராக குரல்கொடுத்த என்னை, ராஜபக்ச அரசாங்கம் பழிவாங்கிவிட்டது” -கணவதிப்பிள்ளை மோகன்.- அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது. இருந்த போதும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு மே மாதம் 3 ம் திகதி இணையத்தளங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏ…

  15. இலங்கையில்... பல ஹொட்டல்களின், 45% முன்பதிவுகள் இரத்து. சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது . மேலும் இந்நிலைமை இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது . https://athavannews.com/2022/1292960

  16. சர்வகட்சி அரசை... அமைக்க வருமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்.. ஜனாதிபதி அழைப்பு. சர்வகட்சி கட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார மற்றும் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர அனைத்துக்கட்சி அரசாங்கம் அவசியம் என வலியுறுத்தி அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பது விடுத்துள்ளார். முறையான பொருளாதார சீர்திருத்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிப்படை திட்டங்களை தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையை உருவாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்து …

  17. சரியான கொள்கைகள்.. உருவாக்கும் வரை, இலங்கைக்கு.. நிதியுதவி கிடையாது – உலக வங்கி போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கி, இலங்கையின் மோசமான பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தற்போதைய கடன்களின் கீழ் மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், மாணவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க உதவுவதாக கூறியுள்ளது. இந்த நிதியில் ஏறத்தாழ 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி வெளிப்படுத்தியுள்ளது. கூடுத…

  18. த.மு. கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மனோ அறிவிப்பு! தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘சூரியன்’ வானொலியில் ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் அரசியல் குழு முடிவெடுக்கும் எனவும் மனோ தெரிவித்துள்ளார். http://ww…

  19. நல்லூர், மகோற்சவ காலத்தில்... ஊடகங்களுக்கான, நடைமுறைகள் தொடர்பில் அறிவிப்பு! நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் பெருந்திருவிழாவின் போது ஊடகப்பணி செய்கின்ற ஊடகங்களை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கையினை யாழ்.மாநர சபை தற்போது மேற்கொண்டு வருகின்றது. அதே நேரம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அறிவுறுத்தலினையும் யாழ்.மாநர சபை விடுத்துள்ளது. • நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவின் போது ஊடகப் பணி செய்யும் ஊடகவியலாளர்கள் வேட்டியுடன் ஆசார சீலர்களாக பணி செய்தல் வேண்டும். • யாழ்.மாநகர சபையினால் ஊடகவியலாளர்களுக்…

  20. என்னை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது - ஹிருணிகா பிரேமச்சந்திர ! By kugen தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அடக்குமுறையை ஆரம்பித்ததாகக் கூறும் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கைதுசெய்யப்படும் அச்சம் இருப்பதாக நினைத்தால், தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அடக்குமுறையை முன்னெடுத்தாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்தும் முடிவுக்கு வரும் என கூறும் ஹ…

  21. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் சுதந்திர கட்சி, ஜனாதிபதிக்கிடையில் விசேட சந்திப்பு (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமர்ப்பித்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸ…

  22. உரிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை இலங்கை உருவாக்கும் வரை புதிய நிதியுதவியை வழங்கப்போவதில்லை- உலக வங்கி போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க தயாரில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள உலக வங்கி இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மருந்துகள் சமையல்எரிவாயு உரம் பாடசாலை மாணவர்களிற்கான உணவுகள் போன்றவற்றில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் வறிய மற்றும் நலிந்த நிலையில் உள்ள குடும்பங்களிற்கான நிதியுதவி போன்றவற்றிற்காக தனது போர்ட்போலியோவின் கீழ் காணப்படும் கடன்களின் கீழ் வளங்களை மறுபரிசீலனை செய்வதா…

  23. தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இலங்கையின் தேசிய நிதிக் கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நகர்வினால் வங்கி மூலதனம் பாதிக்கப்படுவதுடன், அவர்களை பிணை எடுப்பதற்காக அரசாங்கம் அதிக கடனில் சிக்க வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷ குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய நாணயக் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தேசிய வங்கிகளின் மூலதன நிலைகளை வீழ்த்தக்கூடும், இது வங்கித் துறையில் அரசாங்க மூலதன உட…

  24. 19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும…

  25. அவசரகால சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உயர்நீதிமன்றத்தில் மனு! ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் மனுவின் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.