ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
11 நாட்களுக்குப் பின்னர்.. எரிவாயு, விநியோகம் ஆரம்பம். நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286988
-
- 1 reply
- 127 views
-
-
அரச ஊழியர்கள்... தடையின்றி, வெளிநாடு செல்ல... அமைச்சரவை அனுமதி! அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கள் பதவிக்காலத்தில் வெளிநாடு செல்ல முடியும். இத்திருத்தத்தின் கீழ், தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியரின் ஓய்வூதியக் கணக்கீடு உள்ளிட்டவற்றை பாதிக்கும் விதிகள் தளர்த்தப்படும். அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை விரைவாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 400 views
-
-
ஹர்ஷ டி சில்வாவின்... குற்றச்சாட்டை, மறுத்தார்... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 4 replies
- 258 views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும்பகிர்ந்துகொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம் எனஅதானி குழுமம் தெரிவித்துள்ளது. உருவாகியுள்ள இந்த சர்ச்சை காரணமாக நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் உண்மைஎன்னவென்றால் இந்த விடயத்திற்கு அரசாங்கத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடை…
-
- 2 replies
- 331 views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இன்று (14) செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்ப்பதோடு , அதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறக் கூடும் மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவித்தது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை…
-
- 1 reply
- 350 views
-
-
பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து! அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ‘முன்னேற்றத்திற்கான உணவு’ முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத் திணைக்களம் கைச்சாத்திட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துகொண்டார். இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒ…
-
- 2 replies
- 337 views
-
-
2.5% புதிய வரி இலங்கையில் அமுல் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமா…
-
- 0 replies
- 433 views
-
-
இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அதனை அனுமதிக்க முடியாது - சம்பிக்க (எம்.மனோசித்ரா) இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இந்தியா ஈடுபடுமாயின் அவற்றை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். மின்சக்தி துறையை அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , …
-
- 10 replies
- 768 views
- 1 follower
-
-
சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா ? - அருட்தந்தை சத்திவேல் கேள்வி தற்போதைய சூழ் நிலையில் சிறைச்சாலைகளில் கொடுக்கப்படும் உணவு அவர்களை வாழவைக்குமா? என சிந்திக்க வைத்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை தேவைகள் சரியான முறையில் கிடைக்கின்றனவா? என தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத திட்டமிட்ட தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக மக்களால் அடையா…
-
- 0 replies
- 504 views
-
-
தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது! June 13, 2022 தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டாது என கூறி இருக்கின்றார்.இது இனவாதத்தின் ஒரு விளைவாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டினை முன்னிட…
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையில்... கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கான, தேவை... அதிகரித்துள்ளது – ரணில் இலங்கையில் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அதிகமாக கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸார் மட்டுமின்றி போராட்டக்காரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால், இரு தரப்பிலும் கண்ணீர் புகைக்குண்டுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். https://athavannews.com/20…
-
- 7 replies
- 492 views
- 1 follower
-
-
அரச உத்தியோகத்தர்களுக்கு... வாரத்தில், ஒருநாள் விடுமுறை – விவசாயத்தில் ஈடுபடுமாறு... அறிவுறுத்து. நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 2 replies
- 386 views
- 1 follower
-
-
அரசியலமைப்பின்... 21வது திருத்தச் சட்டத்தை, நிறைவேற்றுவதில் இழுபறி! அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலும் தெளிவுபடுத்துவது அவசியமானதனால் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி…
-
- 0 replies
- 139 views
-
-
21வது திருத்தம்... ஜனாதிபதிக்கு, சாதகமாகவே அமையும் – ரணில் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையும் எனவும், பாதகமாக அமையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர்கள் முன்னர் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மே 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இது குறித்…
-
- 0 replies
- 152 views
-
-
மதுபானசாலைகள் – இறைச்சிக் கடைகள், மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு... பூட்டு! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் இன்று மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1286845
-
- 0 replies
- 143 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின்... பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் (Anthony Blinken) தொலைபேசியில் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தான் இதன்போது விளக்கமளித்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவு…
-
- 0 replies
- 107 views
-
-
Published by Digital Desk 5 on 2022-06-13 13:07:48 இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (13) இடம்பெற்றது. சீனத் தூதரகத்தில் நட்பு ரீதியாக இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் பரஸ்பரம் ஆர்முள்ள விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து உதவலாம் என இந்தச் சந்திப்பு குறித்து சீன தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தூதுவருக்கும் அ…
-
- 3 replies
- 434 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தா…
-
- 0 replies
- 250 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) சிங்கள தாய்மருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கான காசோலை தனக்கு கிடைக்கப் பெற்றதனை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வீரகேசரிக்கு உறுதி செய்தார். குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளர் கே.சி.எம்.முதனாயக்கவின் கையொப்பத்துடன் 337496 எனும் இலக்கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளது. 2 மில்லியன் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்வாறு நிலுவை சம்பளம் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது. சுகாத…
-
- 4 replies
- 377 views
-
-
யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில்... போக்குவரத்து சேவை: டக்ளசின் முயற்சிக்கு, அமைச்சரவை பச்சைக் கொடி. யாழ்ப்பாணத்திற்கும். பாண்டிச்சேரிக்கும்... இடையில், பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று(13) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை…
-
- 1 reply
- 298 views
-
-
புலம்பெயர் சமூகத்துடன், கருத்து வேறுபாடுகள்... அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப் படுத்தப்பட வேண்டும் என... தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் – ஜீ.எல்.பீரிஸ் புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்விலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். முழுமையான உரையில் அவர் தெரிவித்ததாவது, எமது முன்னேற்றம் மற்றும் சவால்களை திறந்த பரிமாற்றத்தில் இலங்கை தொடர்ந்தும் இந்த …
-
- 0 replies
- 190 views
-
-
இளைஞர்கள் மத்தியில்... அண்மைக் காலமாக, போதைப்பொருள் பாவனை... அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர்கள் தற்போது மதுபானங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த போதையை தூண்டும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றினை கட்டுப்படுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிர…
-
- 0 replies
- 223 views
-
-
இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKA NAVY இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதானிக்கு மின் திட்டம்: கோட்டா…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
யாழில் முகமூடிக் கொள்ளை கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை! Posted on June 12, 2022 by தென்னவள் 18 0 யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் வாள்களுடன் வீடொன்றினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையி…
-
- 7 replies
- 608 views
-
-
பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தடுப்பதும், அக்கட்சியின் மூலம் அரசாங்கத்தை வழிநடத்துவதும் பசில் ராஜபக்சவின் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மிக்க பெரேரா தனது நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும் அவர் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=162300
-
- 0 replies
- 336 views
-