Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி கோட்டா மற்றும் பசில்... நாட்டில் இருந்து வெளியேற, நாம் உதவவில்லை – இந்தியா அறிக்கை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவ…

  2. கொழும்பு காலி முகத்திடல்... போராட்டக் களத்தில், மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி! கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -15ஐ சேர்ந்த... 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291020

  3. ஆளும் தரப்பின்... நாடாளுமன்ற குழு, மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தகவல்? பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் …

  4. முக்கிய இரகசியங்களை... வெளியிட்ட, ஜனக ரத்நாயக்கவை பதவி விலக்க முயற்சிக்கும் ஆளும் தரப்பு? பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் 113 பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர்களிடம் …

  5. 13 ஆவது திருத்தச் சட்டம், முழுமையாக... அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்! நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. …

  6. R.Maheshwary / 2022 ஜூலை 12 , பி.ப. 06:59 - 0 - 0 FacebookTwitterWhatsApp 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசேடமாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாம்,(கோட்டபய ராஜபக்ஷ ப…

  7. இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது -- DINESHA DILRUKSHI WIJESURIYA, AMAL JAYASINGHE SBS இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட 15பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன. 9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலைகடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமானநிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார். அவர் முப்படை தள…

  8. அலரிமாளிகையும் முற்றுகை கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அலரிமாளிகையும்-முற்றுகை/175-300064 அலரிமாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்…

  9. வன்னியில் பிரபாகரன் மகன் உள்பட்ட லடசக்கணக்கான மக்களுக்கு பேரவலத்தினை தந்த ஒரு மனிதனின் அவல நிலை குறித்து சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று அன்று இந்த படுபாவிக்கு புரிந்திருக்க வில்லை. சரி, யுத்தம், சண்டை தமிழர்கள் மரணம், ஓரளவுக்கு சரி என்பவர்கள் கூட, லசந்தா, பிரகதீப், தஜப்டீன் போன்றவர் கொலையில் இவரது நேரடி தொடர்பினால், இவர் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்க வேண்டியவர் என்கிறார்கள்.. Sri Lanka's beleaguered President and 14 family members blocked from leaving country by airport staff, senior military source says https://www.cnn.com/2022/07/12/asia/sri-lanka-crisis-gotabaya-rajapaksa-airport-intl/index…

    • 1 reply
    • 722 views
  10. இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 36 நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கி…

  11. சுமந்திரன்... பிரதமர் பதவியை பெறுவதாயின், தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவரால் அது முடியாதுபோனால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ஆகவே ஜனா…

  12. Published by Vishnu on 2022-07-12 19:44:10 (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி உபேந்ர குணசேகர இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டந…

  13. Published by Rajeeban on 2022-07-12 16:54:49 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை விமானநிலையத்திலகுடிவரவு துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட அவமானத்திற்கு பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கடற்படையின் ரோந்து படகினை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றார் என அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக ராஜபக்சாக்கள் அவசரமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதால் பசில் ராஜபக்ச அங்கு தனது கடவுச்சீட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்இதன் காரணமாக அவர் புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெறவேண்டிய நிலையேற்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன ஒரு சூட்கேஸ் முழு…

  14. கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்! முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த த…

  15. இராஜினாமா கடிதத்தில், கையொப்பமிட்டார் கோட்டா ! இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். இருப்பினும் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் அதனை மறுத்திருந்த சபாநாயகர், தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாகவும் ஜனாதிபதி நாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே…

  16. நேற்று, நள்ளிரவு முதல்... வி.ஐ.பி. டெர்மினல் சேவையில் இருந்து... அதிகாரிகள் விலகல் ! தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குகாரணமான முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என ஊகிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடமைகளில் இருந்…

    • 3 replies
    • 392 views
  17. ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த... பெறுமதிமிக்க ஆவணங்கள், அழிக்கப்பட்டுள்ளன: ரணில் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியில் அமர்ந்து இந்த வே…

  18. மஹிந்த, பசில், கப்ரால் உள்ளிட்ட... பலர் நாட்டைவிட்டு தப்பி ஓட, தடைகோரி மனுதாக்கல். மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். https://athavannews.com/2022/1290936

  19. சட்டவிரோதமாக... தப்பிச் செல்ல முற்பட்ட 55 பேர், அனர்த்தத்தில் இருந்து மீட்பு. சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஆழ்கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 55 பேர் அந்தக் கப்பலில் இருந்ததாகவும் குறித்த கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கடற்படையினருக்கு அறிவித்ததையடுத்து, கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் நேற்று அந்த இடத்தை சென்றடைந்தது. அந்த நேரத்தில் நாட்டின் தென்கிழக்கே 722 கிலோமீற்றர் தொலைவில் குறித்த கப்பல் சூறாவளியால் தாக்கப்பட்டு ந…

  20. கட்சியில் இருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப் பட மாட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி என்பது சலூன் கதவு போலல்ல, கட்சியில் இருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப் பட மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சி தீர்மானத்தை மீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய…

  21. ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர்... மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, பிரதமரிடம் சட்டமா அதிபர் விளக்கம்! ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சட்டமா அதிபரிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து சட்டமா அதிபரின் கருத்து பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்த சபாநாயகர், அதன்பின்னர் தான் தவறுதலாக தெரிவ…

  22. 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் யார் ஜனாதிபதி…! சிரேஸ்ட சட்டத்தரணியின் தகவல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி நியமனம் பதவிக் காலம் இருக்கும் போதே ஜனாதிபதி பதவி விலகினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதனை தவிர்க்க தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரை இரகசிய வாக…

  23. “சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை” போராட்டக்காரர்கள் அறிவிப்பில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்றாக இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் பற்றியோ பேசவில்லை” ….. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…. சிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருந்த இராஜபக்ச தரப்பினருக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாறியநிலையில்…

  24. ”அரசியல் நெருக்கடி நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்”: மத்திய வங்கி ஆளுநர் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை கோரியுள்ளதுடன், அதிகாரிகளும் ஐஎம்எப் பிரதிநிதிகளும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் உடனான ஒரு…

  25. யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள் July 12, 2022 யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ்மாவட்ட செயலகத்திடம் வெதுப்பக உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் , தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏதுவாக நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.