ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
காலிமுகத்திடல் தாக்குதல்: கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம்! காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு பெருமளவிலானோர் ஒன்றுகூடி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற பெருமளவிலான படையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்துள்ளனர். …
-
- 8 replies
- 415 views
-
-
கோட்டா கோ கம மீது தாக்குதல் – இலங்கையின் “கறுப்பு தினம்”! July 22, 2022 காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 83 views
-
-
சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது July 21, 2022 எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலையுடன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்ற போது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறத…
-
- 6 replies
- 414 views
-
-
புதிய ஜனாதிபதி தன்னை நிரூபிக்க அவகாசம் கொடுங்கள் தனது அபிமானிகளுக்கு, ரணில் விக்கிரமசிங்கே இலங்கை இழந்த மற்றும் கண்டுபிடித்த ஜனாதிபதி. மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஒருமுறை விக்ரமசிங்கவை இலங்கை தேர்வு செய்யத்தவறிய சிறந்த ஜனாதிபதி என்று வர்ணித்தார். ஜனாதிபதி வேட்பாளராக தனது முந்தைய இரண்டு போட்டிகளில், வெற்றி அவருடையது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் விக்கிரமசிங்க தனது சொந்த தவறு இல்லாமல் தோல்வியடைந்தார். 1999 இல், கருத்துக் கணிப்புகள் ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்னறிவித்தன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரது போட்டியாளரும் அப்போதைய ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவை டிசம்பர் 18 அன்று, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு மு…
-
- 1 reply
- 308 views
-
-
ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணலன-ஆடடம-ஆரமபம-கடடககம-மத-தககதல/175-300899
-
- 34 replies
- 2.3k views
- 1 follower
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இடையே, ஊடக நடவடிக்கைகளுக்காக சென்ற சிரச, சக்தி டீ.வி. ஊடகவியலாளர்கள் நால்வர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (சம்பவம் நடக்கும் போது பிரதமராக இருந்தார்) வீட்டின் முன்பாக வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொமேஷ் லியனகே மீள சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது கடந்த 9 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் 6 பேர் அவரது வீட்டின் முன்பாக ஊடக நடவடிக்கைகளிடையே தாக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து பொலிஸ்…
-
- 0 replies
- 341 views
-
-
நூருல் ஹுதா உமர் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்ட…
-
- 8 replies
- 621 views
-
-
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை! நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார். அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி…
-
- 28 replies
- 1.4k views
-
-
வசந்த முதலிகே, ஜினரதன தேரர்... உள்ளிட்ட இருவருக்கு, எதிராக பிடியாணை. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றில் குறித்த இருவரும் முன்னிலையாக தவறியதால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை குறித்த இருவரும் முன்னின்று வழி நடத்தியவர்கள்…
-
- 0 replies
- 249 views
-
-
‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டக்காரர்களுக்கு... புதிய இடத்தினை, ஒதுக்கி கொடுப்பதாக... ஜனாதிபதி தெரிவிப்பு. போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 1 reply
- 226 views
-
-
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற... எதிர் பார்த்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு! புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1291879
-
- 5 replies
- 314 views
-
-
ரணிலின், வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு... வஜிர அபேவர்தன நியமனம்? ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது. இந்த ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அந்த தகவல்களை ருவான் விஜேவர்தன நிராகரித்திருந்தார். இந்தநிலையிலேயே வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கையில் போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கை ஜனாதிபதி தேர்வு நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள் உரையாடினர். அப்போது அவர் கூறியது என்ன? நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு முடிந்து ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகள…
-
- 3 replies
- 320 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: "போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANANDA KUMAR படக்குறிப்பு, கங்காராமை விஹாரையில் ரணில். போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, வீடுகளை தீக்கிரையாக்கி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை …
-
- 5 replies
- 750 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர், அந்தப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பு நாடாளுமன்றம் வசமாகும். இதன்படி, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட, இரண்டு ஜனாதிபதிகள் அவ்வாறு நாடாளுமன்ற வாக்கு…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
பிரஸ்திகா: நான்கு அறுவை சிகிச்சைளுக்குத் தயாராகும் 3 வயது குழந்தை - பாதயாத்திரையில் பெற்றோர் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, குழந்தை பிரஸ்திகா, மகனுடன் நிமால், சரண்யா தம்பதி பிரஸ்திகாவுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறது. எதிர்வரும் மாதங்களில் அந்தக் குழந்தைக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், குழந்தை பிரஸ்திகாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாகவும் சிகிச்சைகள் சிறப்பாக நடைபெறவும் வேண்டிக் கொள்வதற்காக, பிரஸ்திகாவை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, அந்தக் குழந்தையின் பெற்றோர் கதிர்காமம் ஆடிவேல் திரு…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம்! ShanaJuly 21, 2022 புதிய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களுக்குள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எதிர்கட்சியில் உள்ளவர்கள் பிரதமர் பதவியினை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தால், புதிய பிரதமராக தி…
-
- 1 reply
- 177 views
-
-
கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக சிலர் வாக்களித்துள்ளனர் - நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் தயாசிறி (எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியி டளஸ் அழக்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்தபோதும் சில உறுப்பினர்கள் அதற்கு மாற்றமாக செயற்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி டளஸ் அழக…
-
- 0 replies
- 143 views
-
-
மக்கள் போராட்டத்தை அடக்க முடியுமானவரையே பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவுசெய்துள்ளது - விமல் வீரவன்ச (எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் அடக்கியது போன்று தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தை அடக்க முடியுமான ஒருவரையே ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்துகொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால் அப்போது சமூக வலைத்தளங்கள் இருந்திருக்கவில்லை என்பதனை புரிந்துகொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என சுயாதீன கட்சிகளின் கூட்டணி எம்.பியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவ…
-
- 0 replies
- 274 views
-
-
இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம்கட்டியது – சிஐஏ தலைவர் இலங்கை சீன முதலீடுகளில் முட்டாள்தனமான பந்தயம் கட்டியது என சிஐஏயின் தலைவர் பில்பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார் இலங்கை நெருக்கடிக்கு சீனா எவ்வளவு காரணம்? அமெரிக்காவின் சிஐஏயின் தலைவரான பில்பேர்ன்ஸ் தென்னாசிய நாடான இலங்கை சீனாவின் முதலீடுகள் மீது முட்டாள்தனமாக பந்தயம் கட்டியதே இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அத்தியவாசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கை உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளையம்இநீண்டநேர மின்துண்டிப்பையும் அதிகரித்துவரும் பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தலைவர்கள் ம…
-
- 0 replies
- 210 views
-
-
S.W.R.D பண்டாரநாயக்க... உருவ சிலைக்கு, அருகில் இருப்பவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்று வட்டாரத்துக்குள் தொடர்ந்தும் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலைக்கு முன்னால் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. S.W.R.D பண்டாரநாயக்க உருவ சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்று வட்டாரத்துக்குள் ஒன்று கூடுவதற்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதும் குறித்த பகுதிக்குள் குழுவொன்று தங்கியிருப்பதாக …
-
- 0 replies
- 136 views
-
-
பொதுத் தேர்தலொன்றுக்கு... உடனடியாக செல்ல வேண்டும்- அநுர! நாட்டில் மிக விரைவாக பொதுத் தேர்தலொன்றை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். வாக்கெடுப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் பிரதமராகவும், எதிர்கால அரசியல் ஆசையில்லாத ஒருவரை நியமிக்குமாறுக் கோரினோம். இதன்போது பிரதமர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. ஸ்…
-
- 0 replies
- 184 views
-
-
போராட்டக்காரர்களுக்கு... கடுந்தொனியில், எச்சரிக்கை விடுத்தார் ஜனாதிபதி! போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்ட விரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு கங்காராமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். விகாரை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் நடப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்க…
-
- 0 replies
- 328 views
-
-
புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெட…
-
- 18 replies
- 981 views
-
-
பதவியினை... இராஜினாமா செய்கின்றார், தம்மிக்க பெரேரா? தம்மிக்க பெரேரா இன்று(வியாழக்கிழமை) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், கடந்த 10ஆம் திகதி அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்தார். எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் தம்மிக்க பெரேராவும் வாக்…
-
- 0 replies
- 282 views
-