Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் யாழ் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர். துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் …

  2. காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்துநிறுத்தியது ஏன் - இராணுவம் விளக்கம் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிசாந்த பிரேமரட்ண தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றவில்லை அவர்களது ஆர்ப்பாட்டத்தை தடுத்துநிறுத்தினோம் என குறிப்பிட்டுள்ள அவர் துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படும் என்பதாலேயே ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை கையில்; வைத்திருந்தனர் அதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் நிலை காணப்பட்டது இதன் காரணமாக அவர்களை அகற்றுவதற்கான …

  3. இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த சைக்கிள் விலை! July 1, 2022 எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிக அளவில் நாடுகின்றனர். மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பன…

  4. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக... தபால் திணைக்களத்திற்கு, 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு! தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன. இதனால் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் சேவை தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே இயங்கும…

  5. 32 இலட்சம் குடும்பங்களுக்கு 7500 ரூபா கொடுப்பனவு! பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்தி திட்டம் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும். இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 7,500 ரூபா வழங்கப்படமு; என்று அவர் கூறியுள்ளார். http://www.samakalam.com/32-இலட்சம்-க…

  6. இலங்கை வரலாற்றில், பணவீக்கம் 50 வீதத்தை கடந்து சாதனை படைத்தது! July 1, 2022 இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் ( (Inflation) எனப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்து இந்த மாதம் பணவீக்கம் 54.6% ஆக பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 42.4 வீதத்தால் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையினால் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அரிசி, தானிய வகைகள் உள்ளிட்ட ஏனைய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் இந்த மாதத்…

  7. கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கப்படாமையால் மக்கள் சிரமம் முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள எல்லைக்கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரித்து நிற்கும் கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயல் திட்டம் பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவுமே மேலாக முன்னெடுக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும், திருகோணமல…

    • 3 replies
    • 322 views
  8. புலம்பெயர் தமிழர்களாலேயே... இலங்கையர்களுக்கு, விடிவு கிடைக்கும் – நோர்வேயில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்! ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் உள்ளார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமை வேதனைக்குரியதாகவுள்ளது. இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மேம்படுத்த முடியும். ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த…

  9. வர்த்தமானியில் வெளியானது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே தற்போது அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட https://cdn.virakesari.lk/uploads/medium/file/182225/217-2022_T.pdf https://w…

  10. அரசாங்கத்திற்கு எதிராக... இன்று, ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு! அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அனைத்து அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/…

  11. விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை…

  12. அதிகரித்தது பஸ் கட்டணம் : குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபா ! பஸ் கட்டணம் 21.85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.. இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை அதிகரிக்கப்படுகின்றது. பஸ் கட்டண தேசிய கொள்கைக்கு அமைய, ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரையான 7 மாத காலப் பகுதியில் 5 தடவைகள் பஸ் கட்டணங்கள் அதிகரிக்…

  13. ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால்... முழு நாடும், தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்! ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நிலைமை மோசமாகும் என எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளத…

  14. கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை (சகா) சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளைநடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும். இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்வைத்தார். கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom தொழில்நுட்ப கூட்டத்தில் ஆளுநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இத்தகவலை அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் அவரவர் வலய புலனக் குழுவில் வாட்ஸ்அப் குழுவில் அதிபர் ஆசிரியர்கள…

  15. “இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும் பொறுமை காக்க மாட்டேன் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார். ஆளுநர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சர்கள் மாற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திக…

  16. கொழும்பு தேசிய வைத்தியசாலையில்... 150 மருந்துகளுக்கு, தட்டுப்பாடு. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களே மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1288985

  17. வெளிநாட்டவர் இலங்கையரை... திருமணம் செய்யும் போது, வழங்கப்படும் விசா கால எல்லையை... நீடிப்பதற்கு நடவடிக்கை இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை எதிர்வருத் 4ஆம் திகதி அமுலுக்கு வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288981

  18. பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot…

  19. யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து... "ஒருநாள் கடவுச்சீட்டு" சேவையை, ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா. கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போது கடவ…

  20. இந்தியாவிலிருந்து... பொருட்களை கொண்டு வருவதற்கு, நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் – டக்ளஸ் இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரயிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த…

  21. வெளிநாடுகளுக்கு... அனுப்பப்பட்ட, இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை! நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர். இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழில் கிடைக்காது, அல்லல் படும் இளைஞர்கள். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாப…

    • 3 replies
    • 304 views
  22. ஒரு நாளில் கடவுச்சீட்டை பெற அரிய சந்தர்ப்பம்! ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். (பின்னிணைப்பு - June 28, 2022 11:46 am) யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (27) தெரண தொலைக்காட்சியில் ஒளிபர…

  23. முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது. அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார். https://athavannews.com/2022/1288841

  24. வீட்டுப் பிரசவங்களின்... எண்ணிக்கை, அதிகரிப்பு! கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நிக்கவெரட்டிய, புறக்கோட்டை, மோதர உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், குடும்ப சுகாதார ஊழியர்களின் உதவியுடன் பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப சுகா…

  25. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது - பிரிட்டன் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் விக்கிபோர்ட் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் ஆதரவு கிடைக்காது என மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர…

    • 1 reply
    • 206 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.