ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சர்வ கட்சி அரசாங்கத்துக்கான... பிரதமர் தொடர்பான, முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுகின்றது! சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பிரதமருக்கான முன்மொழிவுகளை அறிவிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார் இதற்கமைய, சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமருக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் முன்மொழிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1291225
-
- 0 replies
- 210 views
-
-
இலங்கையின்... சமகால நிலைமை குறித்து, உன்னிப்பாக... அவதானித்து வருவதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு! இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை. இந்த நிலையில் அது குறித்து உறுதி…
-
- 0 replies
- 152 views
-
-
பதவி விலகினார்... கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது! கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று மாலை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி வ…
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் செய்தியாளர் கண்டவை 'ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 14 ஜூலை 2022, 02:49 GMT 'எங்கள் தலைமுறை எப்படியோ போகட்டும் இனிவரக்கூடிய தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் ராணுவத்தை எதிர்த்தபடி முன்களத்தில் நின்று போராடுகிறோம்' என்கிறார் இலங்கை பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர். 'படிப்பதற்கு வழியில்லை. படித்தாலும் இந்த நாட்டில் வேலையில்லை' என்று உணர்ச்சிவயப்பட்டு பேசுகிறார் கொழும்பு நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து போராட்டங்களுக்கு ஆதரவளி…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு கட்டடங்களை கைப்பற்றுவதல்ல என்பதால் , அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார அவரது முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் ம…
-
- 4 replies
- 544 views
- 1 follower
-
-
ஜனாதிபதியாக... பதவியேற்க தயாராகிறார் ரணில்? – சமூக ஊடகங்கள்... சில மணி நேரங்களுக்கு முடக்கப்படும் வாய்ப்பு? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்று(வியாழக்கிழமை) அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் இந்த ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பிரதமராக டலஸ், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்…
-
- 6 replies
- 505 views
-
-
நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார். மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.
-
- 68 replies
- 4k views
- 2 followers
-
-
நாடாளுமன்றத்தை... நாளை, விசேடமாக கூட்டுவதில் சிக்கல்? நாடாளுமன்றத்தை நாளை விசேடமாக கூட்டுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே இடம்பெற வேண்டும். எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாளை அவசரமாகக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு சபையைக் கூட்டவேண்டுமாயின் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டும். அதுவும் 24 மணிநேரத்துக்குள் வெளியிடவேண்டும் எனவும் அறியமுடிகின்றது. இந்நிலையில், அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை க…
-
- 1 reply
- 224 views
-
-
ஜனாதிபதியின்... பதவி விலகல் கடிதம், இதுவரை... கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார். தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. ஜனாதிபதி பதவி வல…
-
- 12 replies
- 582 views
-
-
அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைத் தணிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நேற்று சபாநாயகர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=163416
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கை மக்களிடம் UNHRC விடுத்துள்ள கோரிக்கை வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப…
-
- 0 replies
- 147 views
-
-
மாலைதீவில் இருந்து பறந்தார் கோட்டா ! Published by T. Saranya on 2022-07-14 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை தீவுக்கு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி.788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சிங்கப்பூர்நோக்கி தற்போது பயணிக்கும் இலங்கை ஜனா…
-
- 2 replies
- 389 views
-
-
மீண்டும் ஊரடங்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/மணடம-ஊரடஙக/175-300415
-
- 0 replies
- 451 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு! ShanaJuly 13, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ம…
-
- 1 reply
- 294 views
-
-
அனைத்து தரப்பினரும்... இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து! அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டக்காரர்களின் மெய்யான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான மூல காரணங்களுக்கான தீர்வ…
-
- 0 replies
- 131 views
-
-
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுவிஸ் கோரிக்கை இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.(15) …
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை By Shana இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை நாட்டில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியுள்ளது. 70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே விடுமுறைக்கு செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதித் தடைகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய வெளிவிவகார அ…
-
- 28 replies
- 1.4k views
- 1 follower
-
-
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தில் சொத்துக்களை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜனநாயக கட்டமைப்பிற்குள் இணக்கமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு…
-
- 0 replies
- 112 views
-
-
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு சுதந்திரக் கட்சி நடவடிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது ஆதரவை வழங்கும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.இந்த பிரேரணையை சபாநாய…
-
- 0 replies
- 211 views
-
-
கோட்டாவினை... கைது செய்ய, நடவடிக்கை? .-பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை.- கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய(புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1291109
-
- 0 replies
- 231 views
-
-
பசில் ராஜபக்சவை தொடர்ந்து கோத்தாவும் நாட்டை விட்டு ஓட்டம். கோத்தா இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஓடியதாக பிபிசி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. Sri Lanka's president Gotabaya Rajapaksa has fled the country, the BBC has confirmed, following mass protests over the island's economic crisis. His brother, former Finance Minister Basil Rajapaksa, has also left the crisis-hit country, sources have told the BBC. https://www.bbc.co.uk/news/world-asia-62132271
-
- 39 replies
- 2.3k views
- 2 followers
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதத்தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை ( எம்.நியூட்டன்) நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை முன்வைபப்தற்கு அனைத்து தமிழ் பாராளுமன்றப் உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளார்கள் நல்லை ஆதீனத்தில் இன்று 13 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் கட்சி தலைமைகளும் விரைவாக ஒன்று கூடி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார சூழலில் எ…
-
- 4 replies
- 410 views
-
-
50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் ! (எம்.எப்.எம்.பஸீர்) மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இரகசியமாக வெளியேறினார். விமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலைத் தீவின் தலைனகரான மாலேவுக்கு அவர் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார். அதன்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக, முப்பட…
-
- 0 replies
- 358 views
-
-
ரணில் தொலைக்காட்சி உரை: 'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித…
-
- 2 replies
- 466 views
- 1 follower
-
-
பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!
-
- 12 replies
- 561 views
-