Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 26ஆவது நாளாக... தொடரும், போராட்டம் – இளைஞர்களுக்கு... இலவச, பேருந்து சேவை அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 26ஆவது நாளாக இன்றும் (புதன்ழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவட…

  2. வேலை நிறுத்தத்திற்கு... ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் – ஜனாதிபதியிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிப்பு! குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்…

  3. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல்... பொருளாதாரத்தை உறுதி செய்ய முடியாது, கோரிக்கையை... உடன் அமுல்படுத்துங்கள் – சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றார். நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலோ அல்லது தோற்கடிக்கப்பட்டாலோ குறைந்தபட்ச வேலைத் திட்டத்துடன் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவதாக கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லா…

  4. மின்வெட்டு... அமுல் படுத்தப்படும் நேரம், குறித்த அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மேலும் கொழும்பு வர்த்தக வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் காலை 09.20 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1279893

  5. தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இ…

  6. ’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ மகேஸ்வரி விஜயனந்தன் இலங்கையில் இனவாதத்தை தூண்டுகின்ற விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், காலி முகத்திடல் போராட்டக் களத்தில் காட்சிப் படுத்தப்படும் சில இனவாத பதாகைகள் குறித்து வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னரும் சில நேரங்களில் இலங்கையி…

  7. சர்வகட்சி கட்சி அரசாங்கத்தில்... புதிய பிரதமர் – ஆளும்கட்சி இணக்கம் அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 11 சுயாதீன அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக புதிய பிரதமரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைகியுள்ளது என கூறினார். எனவே முன்மொழிவுகள் குறித்து பிறகட்சிகளுடன் பேச 5 பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி வலியறுத்திய நிலையில் பொதுஜன பெரமுனவுடன் குறித்த…

  8. ‘Go Home Gota’ போராட்டக்குழுவினர்... கண்டி மல்வத்து மற்றும்... அஸ்கிரி பீடாதிபதிகளுடன் சந்திப்பு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘வீட்டுக்கு கோதா’ போராட்டத்தின் பிரதிநிதிகள் குழு இன்று ( செவ்வாய்க்கிழமை ) கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர் . ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக சங்க மாநாட்டு ஆணை பிறப்பிக்குமாறு பிரதிநிதிகள் பிரதம பீடாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களுக்குத் தொடர்புள்ள எந்தவொரு மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பிரதம தலைவர்களிடம் தெரிவ…

  9. நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்... சபாநாயகரிடம் கையளிப்பு ! ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது இன்று குறித்த பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279830

  10. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்... 25ஆவது நாளாகவும், தொடர்கிறது அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 25ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. சர்வமத தலைவர்கள், இளைஞர் – யுவதிகள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், பல்கலைகழக மாணவர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் பாரியளவான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆர…

  11. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு… 5 நாட்களில் சரிசெய்யப்படும் ! நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் திருத்த பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அனல் மற்றும் ஹைட்ரோ ஆலைகளைப் பயன்படுத்தி மின்சார தடை நேரத்தை மேலும் நீட்டிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். https://athavannews.com/2022/1279803

  12. இந்தியாவின்... ஒரு பில்லியன் டொலர் கடனில், இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது. வங்கி அமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பல சிரமங்களை இறக்குமதியாளர்கள் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இந்தியாவின் கடனின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ($ 300 மில்லியன்), மருந்து ($ 200 மில்லியன்) மற்றும் தொழில்துறை மூலப்பொருட்கள் ($ 500 மில்லியன்) இறக்குமதிக்காக ஆரம்பத்தில…

  13. காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக... தலவாக்கலை நகரில் இருந்து, தனி மனித நடைபவனி. கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தனிமனித நடைபவனி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவரே இவ்வாறு நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தலவாக்கலை நகர மத்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான…

  14. இங்கை முஸ்லிம்கள் இன்று செவ்வாய்கிழமை 3 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். சமகாலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகம் முன் காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் முக்கிய பண்புகளில் ஒன்றான விருந்தோபல் அடிப்படையில் இன்று காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புரியாணி வழங்கப்பட்டது. இதில் பௌத்த பிக்குகளும் பற்கேற்றார்கள். முஸ்லிம்கள் தமது கைளினாலே சுவைமிகு உணவுகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வோருக்கு பறிமாறினர். https://video.fdoh1-2.fna.fbcdn.net/v/t42.1790-2/279616446_1108351843368849_8034052222961774752_n.mp4?_nc_cat=103&ccb=1-5&_nc_sid=985c63&efg=eyJybHIiO…

    • 0 replies
    • 331 views
  15. ஆஸ்திரேலியாவின் அஸ்பென் நிறுவனத்தின் முறைகேடு குறித்த டிவி விசாரணையில், நாமலின் பெயர் ஊழலுடன் இணைகிறது. திருட்டு ராஜபக்சாக்கள்.... நாட்டின் விழுங்கி, விழுத்தி விட்டார்கள்.

    • 12 replies
    • 893 views
  16. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும். சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியு…

    • 4 replies
    • 851 views
  17. இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழகத்திலிருந்து பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக…

  18. டக்ளஸ் தேவானந்தா அடங்கலாக... அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், அமைச்சரவை உபகுழு! அரசியலமைப்பு வரைபு தொடர்பாக விசேட நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கை குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவில் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன மற்றும் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1279746

    • 4 replies
    • 390 views
  19. கொழும்பு போராட்டத்தை... இரும்புக்கரம் கொண்டு அடக்க, திட்டம் – முக்கிய தகவல் வெளியானது அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் இறையாண்மையை நசுக்கும் பொலிஸாரை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1279728

    • 2 replies
    • 276 views
  20. குறைந்த வருமானம் பெறும்... 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு, நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279742

  21. ஜனாதிபதி தலைமையில் உப குழு: குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, நிதி உதவி வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமையில் உப குழுவை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதேவேளை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் ஜூலை வரை நிதி உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279740

  22. ஜனாதிபதிக்கு எதிராக... கூட்டமைப்பு கொண்டு வரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு... ஆதரவு – ரணில் ஜனாதிபதிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காணொளி தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். இதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி…

    • 3 replies
    • 306 views
  23. மஹிந்த... பதவியை இராஜினாமா செய்ய, தீர்மானம்? – நாடாளுமன்றத்தில் நாளை முக்கிய அறிவிப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளையதினம் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாளையதினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2022/1279715

  24. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை, விமர்சிப்பதற்கு... சுமந்திரனுக்கு, அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என்றும் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுபினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில…

    • 11 replies
    • 806 views
  25. காணாமல் போனோர்... அலுவலக ஆணையாளர், இராஜினாமா !! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். குறித்த அலுவலகத்தில் சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கும் வகையில் போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை என அவர் கூறினார். மேலும் காணாமல் போனோர் அலுவலக விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சு ஒன்று தலையிட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279699

    • 1 reply
    • 192 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.