Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மின்சாரக் கட்டணத்தை... அதிகரிக்க, தீர்மானம்..! மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார். தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்று சனிக்கிழமை ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை (5) மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. …

    • 3 replies
    • 303 views
  2. கச்சைதீவை... மீளப்பெற்றால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – சீ.வி.கே. கச்சைதீவை மீளப்பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண அவைத்தலைவர் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள போதே இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்தற்கு தேசிய ரீதியாக அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார். ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்…

    • 1 reply
    • 191 views
  3. கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு... மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது! யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கனடாவில் உள்ள தமிழ் அன்பர்கள் இருவரால் 260 போத்தல் பெட்டடீன் மருந்தும், குழந்தைகளுக்கான பரசிற்றமோல் சிறப் 360 போத்தல்களும் நன் கொடையாக இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. இந் நன்கொடையினைத் தக்க தருணத்தில் மனமுவந்து தந்தமைக்கு வைத்தியசாலைச் சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ச…

  4. ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க... அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த, வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை! மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொம்பே, மல்வான, மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பெரிய வீடு, நீச்சல் தடாகம் மற்றும் பண்ணை ஒன்றை நிர்மாணித்து, அரசாங்க நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ர…

    • 4 replies
    • 441 views
  5. வடக்கு – கிழக்கில்... அரசாங்கம் கைப்பற்றிய வயல் காணிகளை, விடுவிக்குமாறு பணிப்புரை வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1285300

  6. மருந்துகளை இறக்குமதி செய்ய... கொரோனா நிதியிலிருந்து, 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளு…

    • 2 replies
    • 227 views
  7. ரஷ்சியா மீது மேற்குலக நாடுகள் பொருண்மிய மற்றும் பயணத்தடைகள் போட்டு வரும் நிலையில் கொழும்பில் ரஷ்சிய விமான சேவைக்கு சொந்தமான ஏரோபிளட் விமானம் (எயார் பஸ் 330) 200 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் சிறீலங்காவும் ரஷ்சியா மீது பொருண்மிய தடை பயணத்தடை செய்துள்ளதன் வெளிப்பாடா.. என்று கேள்வி கேட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரின் பின்னான..அண்மைக்காலமாக.. ரஷ்சியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கை என்றாலும் பிபிசி வரிஞ்சு கட்டிக்கொண்டு செய்தி வரைவது இயல்பாகிவிட்டது. Sri Lanka detains Russian plane A Russian-operated plane has been seized in Sri Lanka shortly before it was due to return to Moscow with nearly 200 peo…

    • 6 replies
    • 491 views
  8. விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா? பிரசாந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு உலக நாடுகளில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்ற நாடுகளுக்க…

  9. ஜனாதிபதியை எங்கள் பிரதிநிதிகள் எவரும் சந்திக்கவில்லை - கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்தமதகுருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கேட் ஜீரோ அல்லது அரகலய அல்லது கோட்டா கோ கமவை சேர்ந்த எவரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே எங்களது முக்கிய வேண்டுகோள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை சேர்ந்த ரண்டிமல் கமகே தெரிவித்துள்ளார். காலிமுகத்திட…

  10. நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட உரைக்கு தயாராகும் பிரதமர்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவர் அதன்போது தகவல்களை வெளியிடவுள்ளார். தற்போது அரச வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டங்களை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்கள், சேவைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. http://www.samakalam.com/நாட்டின்-நிதி-நிலைமை-தொட/

  11. ஒரே நாடு, ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின்... பதவிக்காலம் நீடிப்பு. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த 27 ஆம் திகதி நிறைவடைந்த நிலையிலேயே தற்போது அதன் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1285026

  12. ஆட்சியாளர்களை... இலக்கு வைக்கும், சீனாவின்... புதிய முயற்சி? இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன் தான் ‘இராஜதந்திர உறவுகள்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், சீனா தனது கனவுத் திட்டமான ஒரே பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியினுள் இலங்கையை உள்வாங்குவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்தது. அதில் வெற்றியும் கண்டது. இதற்காக சீனா பல விலைகளை கொடுத்தது. குறிப்பாக, கூறுவதானால் அரசியல்வாதிகளுக்கு இலவச பயிற்சிப்பட்டளைகள் என்ற பெயரில் சீனப்பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுத்த…

  13. திங்கட்கிழமை முதல், பேருந்து... சேவையில் ஈடுபடாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை! அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று நான்கில் ஒரு பங்கு பேருந்துகளே டீசல் வரிசையில் நிற்கின்றன. டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய ரீதியில் தற்போது சேவையில் ஈடுபடும் நில…

  14. அமைச்சுப் பதவிக்காக... பிரதமரின் வாசஸ்த்தலம் முன்பாக, பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி தங்களுக்கு வழங்க கூறி மட்டக்களப்பு இரண்டு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்த்தலம் முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் நேற்று (புதன்கிழமை) எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. மட்டக்களப்பு நகரில் கடந்த ஏழு தினங்களுக்கு மேலாக எரிவாயுவினை எதிர்பார்த்துக்காத்திருக…

  15. அரசியல் – பொருளாதார, நிலைமையை தீர்க்க... இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து, முன்மொழிவு! தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்தே இந்த முன்மொழிவுகள் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வ…

  16. மஹிந்தவை... இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “எனது நண்பரும் இலங்கைத் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறும் டெல்லியில் பொதுக் கூட்டத்தில் பேசவும், இந்து மற்றும் புத்த கோயில்களுக்குச் செல்லவும் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளேன். அவர் பருவமழைக்கு முன்னர் ஜூன் மாதத்தில் நாட்டுக்…

  17. சிறு போகத்திற்கு... தேவையான உரத்தை, வழங்குவதை துரிதப்படுத்த... இந்தியப் பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி! நாட்டில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியுடன் வழங்கப்படும் இந்த உரமானது நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பி…

  18. வன்முறைச் சம்பவங்கள் குறித்து... ஆராய, விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் ஜனாதிபதி! நாட்டின் பல பகுதிகளில் 2022.03.31 முதல் 2022.05.15 வரை இடம்பெற்ற தீ வைப்பு, கொள்ளை, கொலை உள்ளிட்ட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் பி.பி.அலுவிஹார தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது. அதன்படி, ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் சிர…

  19. இவ்வாண்டு நடந்து முடிந்த காபொத பரீட்சை வரலாறில் இல்லாத அளவுக்கு கடுமையானது என்பதனை ஏற்றுக் கொள்வதாக பரீட்சை ஆணையர் தெரிவித்தார். மேலும், கொடுப்பனவுகள் குறைவானது என, மேல்பார்வையாளர்கள் வர மறுத்ததாகவும் பின்னர் அதனை சமாளித்தாகவும் தெரிவித்தார். பரீட்சை காலத்தில், மாணவர்கள் குடை பிடித்த வண்ணம் பரீட்சை எழுதிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 6 replies
    • 643 views
  20. துமிந்த சில்வா... கைதானார். இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற அவரை, அங்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (31.05.22) உத்தரவு பிறப்பித்தது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு, உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 18 ஆ…

  21. சஜித்.... காகத்திற்கு, பாதுகாவலனாகவும் செயற்படுகிறார் – பாலித ரங்கேபண்டார எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன் கதவின் ஊடாகச் சென்று பொதுமக்களுக்குப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் அவர் பின் கதவு வழியாக பசில் ராஜபக்ஷவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் வேடத்தில் மாத்திரமல்ல காக்கை பாதுகாவலனாகவும் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலின்போதே பாலித ரங்கேபண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “21ஆவது திருத்தச் சட்டத்த…

  22. வைத்தியசாலையில்... தஞ்சம் புகுந்தார், துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் வார்டு 18ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக சி.ஐ.டி.யி அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட அவரை மீண்ட…

    • 1 reply
    • 393 views
  23. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... வழங்கப்படும் உணவு தொடர்பாக... நாளை தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டமொன்று நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…

  24. இன்றைய... நாணய மாற்று, விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்கள் படி டொலரின் விற்பனை விலை 365.09 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை இன்று டொலரின் கொள்வனவு விலை 355.77 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. டொலரின் விற்பனை விலை நேற்று (31) 365.74 ரூபாயாக பதிவாகிய நிலையில் ரூபாயின் மதிப்பு 65 சதம் மேலும் உயர்ந்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 445.60 ரூபாயாகவும் விற்பனை விலை 461.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்விலை 381.42 ஆகவும் விற்பனை விலை 392.25 ரூபாயாகவும் அவுஸ்ரேலிய டொலரின் கொள்ளவில்லை 252.69 ஆகவும் விற்பனை விலை 264.07 ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavann…

  25. 369 பொருட்களை... புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய, இறக்குமதி செய்ய அனுமதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் முதல் குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொருட்களை இறக்குமதி செய்யும்போது அவற்றின் தேவையை கருத்திற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணியை பாதுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.