Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொருளாதாரத்தை மீட்பதாகக் கூறி... சுகாதாரத் துறையை, தனியார் மயமாக்க... அரசாங்கம் முயற்சி – GMOA குற்றச்சாட்டு! முழு சுகாதாரத் துறையையும் தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ, நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார அமைப்பு விரக்தியில் இருப்பதாக தெரிவித்தார். பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைக்கின்றோம் என்ற போர்வையில் சுகாதாரத்துறையை தனியார்மயமாக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தில் உள்…

  2. அரசாங்கத்திற்கு... எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... ஆதரவு வழங்குவார்களா? அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1278115

  3. இலங்கை போராட்டம்: 'சிங்கள முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்' - இலங்கையில் ஒரு போராட்டக் குரல் எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் போராட்டங்களில் பங்கேற்கும் ஆட்டோ ஓட்டுநரான ஜெகன். சிலமாதங்களுக்கு முன்பிருந்தது போல அவரது வாழ்க்கை இப்போது இல்லை. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது என்பதற்கு அவர் ஓர் எடுத…

  4. மின்வெட்டு, அமுல்படுத்தப்படும் நேரம்... குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278124

  5. அலரி மாளிகையினை... முற்றுகையிட்டிருந்த, “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்! ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர். ரம்புக்கனை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சாமிந்த லக்ஷான் உயிரிழந்தார். அவரின் இறுதிக்கிரியைகள் ஹிரவட்டுன மயானத்தில் இன்று நடைபெற்றன. இந்தநிலையிலேயே காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றி…

  6. மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்" 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும்…

  7. இலங்கையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிய சீனா - என்ன உதவிகள் கிடைக்கும்? 23 ஏப்ரல் 2022, 12:10 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO இலங்கையுடன் மீண்டும் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது சீனா. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பல நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. இதன்படி, இந்தியா மற்றும் சீனா இலங்கைக்கு பல உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில், சில காலமாகவே இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு அதிகளவில் கிடைத்து வருகின்ற நிலையில், கடந்த சில தினங்களாக சீனா இலங்கையின் முக்கிய தரப்பினரை சந்தித்து, தமது உதவிகள் குறி…

  8. புதிய பிரதமராக.... விரைவில் பதவியேற்கின்றார், தினேஷ் குணவர்தன? தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வகையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், பிரதமர் மஹிந்த ராஜபகசவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். …

  9. “கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்! காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் நிராகரித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிகளவானவர்கள் காலி முகத்திடலில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்து 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்பு – கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்ப…

    • 3 replies
    • 387 views
  10. 48 நாடுகள் முன்னிலையில்... ஜனாதிபதி, முன்வைத்த கோரிக்கை ! நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 48 நாடுகளுடன் ஜப்பானில் நடைபெற்ற 4வது ஆசிய-பசிபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் சாதனைகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும் என குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இலங்கையால் கடந்த வருடங்களை விட 50% அதிகமான புதிய நீர் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு நிலையான அபிவிருத்திக்காக நீரை முகாமைத்துவப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்…

  11. தேசியத்தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனத்தை இன்று சிங்கள மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்'!

    • 0 replies
    • 203 views
  12. சதொச ஊடாக இன்று முதல் 145 ரூபாவுக்கு அரிசி! இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது. சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும் ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்ட…

    • 0 replies
    • 196 views
  13. இடைக்கால அரசாங்கம் அமைந்தால், நானே.... பிரதமர்! -மகிந்த ராஜபக்ச.- புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் பல்வேறு கொள்கைகள் காரணமாக அது செயற்படாது எனவும் கூறினார் . இதேவேளை வேறு எந்த பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து பணியாற்ற எவரும் விரும்ப மாட்டார்கள் தெரிவித்த அவர் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்…

  14. 15 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டமானது இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டுள்ளார் . https://athavannews.com/2022/1278069

  15. நான்... நலமுடன், இருக்கின்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில்... என்ற செய்திகள், உண்மையில்லை – பிரதமர் மஹிந்த. தனது உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் காலமானார் என்றும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பரவி வரும் செய்திகள் பொய்யானவை என நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார். https://athavannews.co…

  16. வவுனியாவில்.. கடலுணவுகளின், விலை அதிகரிப்பு எரிபொருள் விலையேற்றம் காரணமாக வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடலுணவு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகள் வவுனியாவிற்கு கொண்டு வரப்படுகின்றது. இதன் காரணமாக அங்கிருந்து கொண்டுவரப்படும் ஒரு கிலோ விளமீன் 1000 ரூபாயாகவும் பாறை மீன் 1200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. முரல் 600 ரூபாயாகவும் சீலா 1000 ரூபாயாகவும் கணவாய் 1200 ரூபாவாகவும் சின்ன இறால் 1200 ரூபாயாகவும் பெரிய இறால் 1800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேவேளை நண்டு 1600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் அதேவேளை சால மீன் 300 ரூ…

  17. ஆர்ப்பாட்டங்களை, கலைக்க... துப்பாக்கிகளை, பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு. பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிம…

    • 1 reply
    • 215 views
  18. றம்புக்கணையில்... உயிரிழந்தவரின், இறுதிக் கிரியைகள் இன்று. றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கே. பி.சமிந்த லக்ஷானின் சடலம் கடந்த 21ஆம் திகதி இரவு அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி இன்று ஹிரிவடுன்னேவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதோடு அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் உதவியை பெற்றுத்தருமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278039

  19. இலங்கையின்... பொருளாதார அபிவிருத்திக்கு, சீனா தொடர்ந்தும் உதவும்! -பிரதமர் மஹிந்த.- பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் சீனா இணைந்து செயற்படும் என்றும் சீன பிரதமர் உறுதியளித்துள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள், சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இ…

    • 8 replies
    • 321 views
  20. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும், அமெரிக்க தூதுவருக்கும்... இடையில் சந்திப்பு ! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அமெரிக்க தூதுவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு நன்றியும் தெரிவித்தார். இச்சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக கூறியுள்ளா…

  21. பொருட்களின்... விலை ஏற்றத்தினை, கண்டித்து... வவுனியாவில் ஆர்பாட்டம் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் என பெருமளவானோர்கலந்துகொண்டிருந்தனர். மேலும் நாட்டில் பொருட்களின் விலைஅதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றதோடு குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் தெரிவித்துள…

  22. வாக்கெடுப்பு... தேவையில்லாத, அரசியலமைப்பு திருத்தங்கள்... சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிப்பு நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது. விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலமாக நேற்று சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில் பெரும்பாலானவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கடமைகளை அமைச்சரவைக்கு மாற்றும் என கூறியுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜயதாச ராஜபக்ஷ மற்றும் …

  23. பொருளாதார வேலைத்திட்டம், குறித்த தீர்வை.... விரைவில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் தினேஷ் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்த தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் என, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நிதியமைச்சர் அலி சப்ரி நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது…

  24. இந்தியா... மற்றும் இந்தோனேசியாவின் நன்கொடை ! இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன. மேலும் இந்தோனேஷிய அரசாங்கத்தின் 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடையும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த மருந்துப் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெறவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதேவேளை, 186 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 19.02 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கேற்ப…

  25. "சதொச" ஊடாக... இன்று முதல், நிவாரணம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கும் , சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் சதொச ஊடக பெற்றுக் கொள்வனவு செய்ய முடியும் என வர்ததக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1278008

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.