ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
ஒரு நாள், சேவையின் கீழ்... கடவுச்சீட்டு விநியோகம் குறித்த, அறிவிப்பு! கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் க…
-
- 0 replies
- 133 views
-
-
பிரதமராக... ரணில் பதவியேற்றதன் பின்னர், முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று! பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும…
-
- 0 replies
- 103 views
-
-
வடக்கு உள்ளிட்ட... நாட்டின் பல இடங்களில், தொடர் மழைக்கு வாய்ப்பு! நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும்…
-
- 0 replies
- 98 views
-
-
தமிழர்களுக்கான... தீர்வை, வென்றெடுக்க... புதிய பிரதமருடன், பேசுவோம் – சம்பந்தன். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார…
-
- 12 replies
- 979 views
-
-
ஐந்து பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையில் விதிவிலக்கான தலைமைத்துவம் தேவை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிறந்த தலைவர் ஒருவர் நாட்டை முன்னெடுத்து செல்ல முன்வரவில்லையென்றால் எமது கட்சி மீதுள்ள மக்களின் நம்பிக்கை தகர்க்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். “சிறப்பு தலைமை தேவை ஒரு சாதாரண சூழ்நிலையில் அல்ல, ஒரு நெருக்கடியிலேயே வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது, அதற்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையை ச…
-
- 13 replies
- 667 views
-
-
மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் அங்குள்ள செங்கலடி பேருந்து நிலையத்தில் கோட்டா கோ ஹோம் கம கூடாரம் அமைத்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். April 14, 2022 மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்…
-
- 6 replies
- 1k views
-
-
நடமாடும், பொலிஸ் ரோந்துப் பணியை... அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு.. நடத்தவும் அனுமதி! நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எ…
-
- 2 replies
- 287 views
-
-
எதிர்க் கட்சித் தலைவராக... மஹிந்த? – ராஜித, வெளியிட்ட முக்கிய தகவல்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவா…
-
- 3 replies
- 370 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணில் விக்ரமசிங்க அரசின் பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் ஆதரவு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு முதலில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும், தற்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களில் சிலர், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்திற்கு... ஆதரவு – சஜித் அணியினர், தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முற்போக்கான தீர்மானத்திற்கே ஆதரவு என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்தோடு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன்... டீல் பேச புதிய அரசாங்கம் முற்பட்டால் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வோம் என்றும் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2022/1282111
-
- 0 replies
- 168 views
-
-
இருதய நோயாளர்களுக்கு... தேவையான, மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு... கடும் தட்டுப்பாடு இருதய நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் நேற்று கூடியிருந்தது. இதன்போதே சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகர…
-
- 0 replies
- 146 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின்... பிரதி சபாநாயகர் வேட்பாளருக்கு, வாக்களிக்க தீர்மானம் – ஜீவன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளர் ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மத்திய குழுவின் முடிவிற்கமைய ரோஹிணி கவிரத்னவிற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1282127
-
- 0 replies
- 121 views
-
-
பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள... விசேட குழுக்களின் அறிக்கைகள்... கையளிக்கப்படுகின்றன அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன குறித்து அந்த குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்…
-
- 0 replies
- 131 views
-
-
புதிய அமைச்சரவைக்கான... எஞ்சிய நியமனங்கள், 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும்? 18 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கான எஞ்சிய நியமனங்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய புதிய கல்வி அமைச்சராக கலாநிதி சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், விவசாய அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும், சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேள…
-
- 0 replies
- 90 views
-
-
வன்முறைகளினால்.. வீடு மற்றும் உடமைகளை இழந்த, அனைவருக்கும்... நீதி வழங்குவதே எனது முதல் பணி – பிரசன்ன அண்மைய வன்முறைகளினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதன்மையான பணி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அனைத்து தகவல்களையும் பெற்று சந்தேகநபர்களை சட்டத்தின் மு…
-
- 0 replies
- 107 views
-
-
கோட்டா கோ கமவிற்கு... வந்த குண்டர்களை, தடுக்க வேண்டாமென... பாதுகாப்பு அமைச்சே... பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத் அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருக்கும்போதே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும், அவரை பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் முன்னாள்…
-
- 0 replies
- 74 views
-
-
புதிய அரசாங்கத்தில்... நிதியமைச்சர் பதவியை, ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்தவாரம் இடமபெற்ற ஆளும்கட்சி கூடத்தில் அவர் இதனைத் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281997
-
- 4 replies
- 454 views
-
-
மேலும்... 16 அமைச்சர்கள், இன்று பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பல சுயேச்சை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 428 views
-
-
இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், "இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை இறக்குமதி செய்துவந்தது…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
காலிமுகத்திடலில்... 9ஆம் திகதி, நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்! காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் வழங்கிய வாக்குமூலத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்ததாகவும், காலி முகத்திடல் மைதானத்திற்கு இரண்டு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும் சிர…
-
- 2 replies
- 265 views
-
-
சீரற்ற காலநிலை: ஒருவர் காயம் – 820 குடும்பங்கள் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 820 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கடும் மழையுடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 52 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் தற்காலிக தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது…
-
- 0 replies
- 187 views
-
-
தமிழினப் படுகொலையை... சித்தரிக்கும், ஊர்தி. தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. “தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாண மாவட்டத்தில்…
-
- 0 replies
- 255 views
-
-
கோட்டா கோ கமவில்... வெசாக் – 38ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 38ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று போராட்டக்களத்தில் வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு, பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. https://athavannews.com/2022/1281980
-
- 0 replies
- 222 views
-
-
நாடாளுமன்ற அமர்வுகள்... நாளை: புதிய சபாநாயகர் தெரிவு – ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளைய தினம் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை ப…
-
- 0 replies
- 127 views
-
-
ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று! அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நான்கு அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2022/1281974
-
- 0 replies
- 108 views
-