ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
பிள்ளையான், வியாழேந்திரன் என... மேலும் நான்கு பேருக்கு, இராஜாங்க அமைச்சு பதவி! சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் ச.வியாழேந்திரன் இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சுரேன் ராகவன் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து மாற்றப்பட்டு உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் மொஹமட் முஷாரப் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 230 views
-
-
கொள்கலன்... போக்குவரத்து கட்டணம், 65% இனால் அதிகரிப்பு! கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 65% இனால் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் பிற தொடர்புடைய உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டு கொள்கலன்கள் மூலம் போக்குவரத்து செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277639
-
- 0 replies
- 139 views
-
-
உணவு நஞ்சானமை... காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு! காலி – கொக்கலை ஆடைத்தொழிற்சாலையில் உணவு நஞ்சானமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என தெரிவித்த ஊழியர்கள் இன்று காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழிய…
-
- 0 replies
- 111 views
-
-
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான, விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு – பொலிஸ் ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றும் அடங்குகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://at…
-
- 0 replies
- 97 views
-
-
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து. விலகுவதற்கு... 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல…
-
- 0 replies
- 102 views
-
-
அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 191 views
-
-
சஜித் பிரேமதாச கூறியது... அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறியிருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்கூறியிருந்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நிலையில் தான் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ள சபாநாயகர். அவரின் கருத்து முற்றாக நிராகரித்துள்ளார். இ…
-
- 0 replies
- 79 views
-
-
ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட... உயிரிழப்பு, ஒரு கொலையே – எதிர்க்கட்சி ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான கே.டி.லக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனை மோதலில் உயிரிழந்த நபர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கேகாலையில் இன்று ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 179 views
-
-
எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான... பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்! எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர்…
-
- 0 replies
- 95 views
-
-
பெருந் தோட்டங்களின்... பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்கள் முன்னெடுப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்க…
-
- 0 replies
- 133 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு... எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய பதுளை – பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியிலும் பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளிலும் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் உடபுஸ்ஸலாவை – எம்.எஸ் தோட்டம் – கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 105 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…
-
- 2 replies
- 405 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது, மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் க…
-
- 0 replies
- 109 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு கலவரங்களை... சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமரிவிலேயே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். h…
-
- 0 replies
- 122 views
-
-
புதிய பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சர்... பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில்…
-
- 1 reply
- 227 views
-
-
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை: நாடாளுமன்ற அமர்வுகள்... ஆரம்பமாகிய, 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்ப…
-
- 0 replies
- 141 views
-
-
நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் ஆபத்தானது – ரணில் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார். https://athavannews.co…
-
- 0 replies
- 215 views
-
-
ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: கேகாலை நீதிமன்றில் முன்னிலையாகின்றது சட்டத்தரணிகள் சங்கம்! ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பத…
-
- 0 replies
- 133 views
-
-
பிரதமர் மஹிந்தவின் வீட்டினை... மீண்டும் முற்றுகையிட்டு, போராட்டம் தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 4 ஆம் திகதியும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். https://athavannews.com/2022/1277479
-
- 0 replies
- 281 views
-
-
120,000 மெட்ரிக் தொன், எரிபொருள்... இலங்கைக்கு! இரண்டு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. 38 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருளை இறக்கும பணிகள் தொடங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277472
-
- 0 replies
- 174 views
-
-
உரிமைக்காக போராடுகின்றவர்களை... சுட்டுக் கொல்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் – இராதாகிருஷ்ணன் ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைய…
-
- 0 replies
- 462 views
-
-
நாடளாவிய ரீதியில்... இன்று, “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” பிரகடனம் – தொழிற்சங்கங்கள் பொதுத்துறை தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதற்கு “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் பங்கேற்கின்றன என சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடிக்கு தற்போதைய ஆளும் கட்சியே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது இயற்கை …
-
- 0 replies
- 217 views
-
-
ரம்புக்கனை கலவரம் : 33 பேரில்... மூவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!! ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பொதுமக்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய அமைதியின்மையில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் நேற்று ஆர…
-
- 0 replies
- 125 views
-
-
ரம்புக்கனையில்... ஊரடங்கை தளர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – பொலிஸ் ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதனையடுா்அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகா…
-
- 0 replies
- 100 views
-
-
ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய... மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், குழு நியமனம் ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகி…
-
- 0 replies
- 88 views
-