ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அமெரிக்க டொலர் ஒன்றின், விற்பனை விலை... 359.99 ரூபாவாக பதிவானது! அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1279143
-
- 1 reply
- 195 views
-
-
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஒரு வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, சரியான விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் குறித்…
-
- 1 reply
- 253 views
-
-
இடைக்கால அரசாங்கத்தில், இணையக் கோரி... மிரட்டல் அழைப்புகள் – சஜித் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையக்கோரி 24 மணி நேரமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் இடைக்கால அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு அதுவே என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்க நாடாளுமன்றக் குழுவிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று அரசியல் நாடகம் அரங்கேறியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இ…
-
- 1 reply
- 229 views
-
-
மக்கள் எழுச்சிப் போராட்டம்... 22ஆவது நாளாகவும், தொடர்கிறது. அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இரவு பகல் பாராமல் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரும் அதேவேளையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279243
-
- 0 replies
- 240 views
-
-
தமிழகம் செல்ல முயன்ற... திருகோணமலை வாசிகள், கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!! தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுத்து வரும் கடற்படையினர் அவர்களை பொலிஸாரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1279250
-
- 0 replies
- 159 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி சலுகைக்கு இரு மாதங்களுக்குள் நடவடிக்கை - மத்திய வங்கியின் ஆளுனர் (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலதிக நிதி சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டார். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Dr.-Nandalal-Weerasinghe.jpg சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும் வரை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ள கடன் தொகையை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த மத்திய வங்கி ஆளுனர் , கடன் மறுசீரமைத்தல…
-
- 0 replies
- 111 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி இன்று யக்கலையிலிருந்து ஆரம்பம் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரச எதிர்ப்புப் பேரணி இன்று (30) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இன்றைய 5 ஆம் நாள் பேரணி யக்கலையிலிருந்து ஆரம்பமாகி பேலியகொடையை வந்தடையவுள்ளது. அதன் நாளை (01) மே தினத்தை முன்னிட்டு பேலியகொடையிலிருந்து கொழும்பு, சுதந்திர சதுக்க மாவத்தை நோக்கிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 26 ஆம் திகதி கண்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமாகிய பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/126618
-
- 0 replies
- 141 views
-
-
ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு... மதிப்பளிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் நான் அதனை ஏற்க தயார் என்பதோடு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/127…
-
- 0 replies
- 118 views
-
-
மருந்து பொருட்களின்... விலைகளும், அதிகரிப்பு. மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில், அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. https://athavannews.com/2022/1279186
-
- 0 replies
- 245 views
-
-
மோசடியாளர்கள்... எதிர்கால இடைக்கால அரசாங்கத்தில், அங்கம் வகிக்க கூடாது என்கின்றது GMOA! கடந்த காலங்களில் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களுடன் எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் அதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அச்சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். சர்வகட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்போது அரசாங்கம், பொதுமக்கள் மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார…
-
- 0 replies
- 121 views
-
-
31 அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தம் ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு (எம்.மனோசித்ரா) அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் பதவி விலகியதையடுத்து கடந்த 18 ஆம் திகதி மீண்டும் புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே புதிய அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ளடங்கும் இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறி…
-
- 0 replies
- 137 views
-
-
பொதுமக்கள் எதிர்பார்ப்பது... அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அல்ல – வஜிர அபேவர்தன பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும் என்று மாத்திரமே பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சீராக வழங்கப்படாத நிலையில் தற்போதும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21 வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். மேலும் கடந்த அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்கள…
-
- 0 replies
- 138 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு... காணாமல் ஆக்கப்பட்ட, வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 133 views
-
-
அருகிலுள்ள பாடசாலையில்... கடமையாற்றுவதற்கு, சந்தர்ப்பம் வழங்குமாறு ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்! எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279136
-
- 2 replies
- 208 views
-
-
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... கோட்டா கோ கமவில், தொடரும்... போராட்டம் – இன்றுடன் 21 நாட்கள் நிறைவு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேல…
-
- 5 replies
- 291 views
-
-
பிரதமரை பதவி விலகுமாறு நான் ஒருபோதும் கூறவில்லை - ஜனாதிபதி (இராஜதுரை ஹஷான்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஒருபோதும் குறிப்பிடவில்லை சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் பொறுமையுடனம், பொறுப்புடனும் செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியுடன், அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தால் மக்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் ஆகவே ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கௌரவமாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் டலஸ்…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையில் மஹிந்த இல்லாத அமைச்சரவையா? சிறிசேனவின் தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
இலங்கை அரசுப் பணியாளர்களின் துயரம்: “விலைவாசி அதிகரித்தாலும் ஊதியத்தில் மாற்றம் இல்லை” - யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருட்களுக்கான விலை அதிகரிப்பு - இலங்கை மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. அன்றாட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 'இன்று எந்த பொருளின் விலை அதிகரிக்கப் போகிறதோ' என்கிற பயத்துடன் அவர்களின் நாட்கள் விடிகின்றன. எரிபொருள்களுக்கான விலைகள் கடந்த 19ஆம் தேதி அதிகரிக்கப்பட்டன. இதன்படி 254 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாவானது. ஒரு லீட்டர் டீசலின் வில…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பிரதமருக்கு ஆதரவாக... 117 எம்.பிக்கள்? – சர்வகட்சிகளுடனான சந்திப்பை திடீரென ஒத்திவைத்தார் ஜனாதிபதி! இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள தீர்மானித்திருந்தனர். இந்தநிலையிலேயே குறித்த கலந்துரையாடலினை பிற்போட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 185 views
-
-
யாழ் சண்டிலிப்பாயை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், பிரபல இணைய விற்பனைத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஜெனெரேட்டர் இயந்திரத்தை வாங்குவதற்காக சிங்கள பிரதேசத்திற்கு சென்றிருந்த வேளையில், போலி விற்பனை முகவரும் அவரின் சகாக்களும் இணைந்து, ஆசிரியரை கடுமையாக தாக்கிய பின், பணத்தையும் நகைகளையும் அபகரித்த சம்பவம் அறிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையின் பிரபல ஒன்லைன் விற்பனை தளம் மூலம்,ஜெனெரேட்டர் ஒன்றினை வாங்கவதற்காக விற்பனையாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டுள்ளார். விற்பனையாளர் பாதி பணத்தை முற்பணமாக வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்க, யாழ் ஆசிரியர் அதற்கு மறுப்பு தெரிவித்து, நேரில் தான் பணத்துடன் வருவதாக கூறி, புறப்…
-
- 3 replies
- 380 views
-
-
தற்போதுள்ள பிரதமரை நீக்கி... புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி இணக்கம்! ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க அவர் இணங்கியுள்ளார். அதேபோன்று தற்போதுள்ள பிரதமரை நீக்கி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையொன்றை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்…
-
- 0 replies
- 149 views
-
-
அலரிமாளிகைக்கு அருகில்... போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது, பொலிஸார் தாக்குதல்? – வைத்தியசாலையில்... அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்! பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அதே…
-
- 0 replies
- 188 views
-
-
மட்டக்களப்பில்... ஊடகவியலாளர் சிவராமின், 17ஆவது நினைவு தினம்! மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம்- சிவராமின்(தராக்கி)17ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை)காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும்,கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இருநிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டு,விளக்கேற்றி,மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கு சி…
-
- 1 reply
- 1.1k views
-
-
எதிர்வரும் 02 ஆம் திகதி, அரச விடுமுறை தினமாக அறிவிப்பு! எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279179
-
- 0 replies
- 130 views
-
-
மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில்... மின் துண்டிப்பு இல்லை! மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. https://athavannews.com/2022/1279182
-
- 0 replies
- 158 views
-