ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
வரவு - செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி வருமானம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் - அலி சப்ரி (எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. வரிக்குறைப்பு செய்தமை தவறான தீர்மானமாகும். சமூக கட்டமைப்பில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்னராவது தீர்வு காண முடியுமா என குறிப்பிட முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நடைமுறையில் உள்ள வரவு - செலவு திட்டம் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி …
-
- 0 replies
- 145 views
-
-
யாழ்.பல்கலைக்கு... இந்தியத்துணை தூதுவர், விஜயம்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280170
-
- 6 replies
- 549 views
-
-
நாடாளுமன்ற... நுழைவு வீதிகளுக்கு, பூட்டு – மாற்று வீதிகளை... பயன்படுத்துமாறு அறிவிப்பு நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,நாடாளுமன்றத்தை அண்மித்த தியத்த உயன பொல்தூவ சந்திமுதல் ஜயந்திபுர சந்திவரையான வீதியும் ஜயந்திபுர சந்தி முதல் கியங்ஹேன் சந்திவரையான வீதியும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத…
-
- 0 replies
- 147 views
-
-
போராட்டக்காரர்களை கைது செய்த.. பொலிஸ் அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு! போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), குடிமகனின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அமைதியான போராட்டங்களை நசுக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 14(1) (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது பேச்…
-
- 0 replies
- 189 views
-
-
கோட்டா – மைனா கோ கமவில்.. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தொடர்ந்தும் முன்னெடுப்பு அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 27ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அதேநேரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தி…
-
- 0 replies
- 200 views
-
-
நாடாளுமன்றில்.... யாருக்கு, பெரும்பான்மை உள்ளது – முக்கிய வாக்கெடுப்பு இன்று! புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்…
-
- 16 replies
- 948 views
-
-
2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு! சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரி…
-
- 2 replies
- 193 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில்... கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவர்களுக்கு... அமோக வரவேற்பு! நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 பேரும் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று மாலை இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்து, வெளியில் வந்த அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலங்கம பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். 10 ஆண்களும் இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ச…
-
- 0 replies
- 129 views
-
-
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஏற்றவாறு... சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது – கொழும்பு பேராயர்! ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்றவாறு சட்டங்கள் உருவாக்கப்படுவது கவலைக்குரியது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரை சந்தித்ததன் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தலைவர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மகாநாயக்க தேரர்கள் கூறும் விடயத்தை நிராகரிப்பது நல்லதல்ல எனவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் …
-
- 0 replies
- 119 views
-
-
அலரி மாளிகைக்கு... முன்பாக அமைக்கப்பட்ட, அனைத்து கொட்டகைகளும்... அகற்றம் !! அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்ட அனைத்து கொட்டகைகளும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவுக்கு அமைய போராட்டக்கார்கள் குறித்த கொட்டகைகள் மற்றும் கூடாரங்களை அகற்றியுள்ளனர். அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280101
-
- 2 replies
- 504 views
-
-
அலரி மாளிகைக்கு அருகில்... ஆர்ப்பாட்டம் செய்பவர்களை, வெளியேற்றுமாறு... நீதிமன்றம் உத்தரவு! கொழும்பு, கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களையும், அவர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து அவர்களை வெளியேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத் தளத்தில் நடைபாதையில் …
-
- 0 replies
- 184 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களை... துன்புறுத்த முயற்சித்ததாலேயே, ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் -பிரசன்ன நாடாளுமன்றத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி அவர்களை துன்புறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முயற்சித்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ந…
-
- 0 replies
- 197 views
-
-
நாடாளுமன்றத்திற்கு அருகில்... ஆர்ப்பாட்டங்களை நடத்த, தடை விதிக்குமாறு... பொலிஸ் கோரிக்கை – நீதிமன்றம் நிராகரிப்பு! நாடாளுமன்றத்திற்கு அருகில் இந்த வாரம் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலங்கம பொலிஸாரினால் இந்த தடுப்பு உத்தரவுக்கான கோரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற நுழைவு வீதிக…
-
- 0 replies
- 144 views
-
-
யாழில்.. "123 மில்லியன் ரூபாய் பெறுமதியான", கஞ்சா மீட்பு – சந்தேக நபர் கைது! யாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். யாழ்.கடற்பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினையும…
-
- 2 replies
- 322 views
-
-
ஆர்ப்பாட்டம் செய்வதற்கான... உரிமையை, சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை... கைது செய்ய முடியாது – சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், “போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் செய்திகள் உள்ளன. போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய …
-
- 2 replies
- 459 views
-
-
மஹிந்த ராஜபக்ச... பதவி விலகவுள்ளதாக, வெளியான செய்தி குறித்து... அரசாங்கம் விளக்கம்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் …
-
- 1 reply
- 203 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது! நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர். எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் “நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்போம்…” என்ற பதாகைகளை ஏந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1280049
-
- 0 replies
- 138 views
-
-
அனுரவுக்கு எதிராக... சட்ட நடவடிக்கை, எடுக்கப்படும்: பிரதமர் அலுவலகம் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6…
-
- 1 reply
- 160 views
-
-
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்... வீழ்ச்சியடைவதற்கு, இடமளிக்கக்கூடாது – ரணில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்களில் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும், அதனைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1280023
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கையின் கையிருப்பில்... "50 மில்லியன் டொலர்" கூட, இல்லை – அதிர்ச்சி தகவலினை, வெளியிட்டது அரசாங்கம்! நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் நிதி…
-
- 3 replies
- 220 views
- 1 follower
-
-
பலாலி விமான நிலையத்தினை... மிக விரைவில், திறக்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்! பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையினை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழக அரசினால் தரப்படும் அத்தியாவசிய பொரு…
-
- 0 replies
- 134 views
-
-
வரலாற்றுத் தவறுகளே... நெருக்கடிக்கு, காரணம் – நாடளுமன்றில் நிதி அமைச்சர். தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நடாதமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். எனவே தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, கடந்த ஆண்டின் செலவினமான…
-
- 3 replies
- 229 views
-
-
நாடாளுமன்றில்... பெரும்பான்மை யாருக்கு? முதலாவது வாக்கெடுப்பு நாளை !!! பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (05) இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காலத்தில் நாடாளுமன்றத்தில் எவருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை தீர்மானிக்கும் முதல் வாக்கெடுப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை தனது இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279995
-
- 1 reply
- 130 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின், விற்பனை விலை... 370 ரூபாயாக பதிவு! இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று (புதன்கிழமை) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கை வங்கி – ரூ. 366.00 மக்கள் வங்கி – ரூ. 359.99 சம்பத் வங்கி – ரூ. 370.00 வணிக வங்கி – ரூ. 370.00 என்.டி.பி. – ரூ. 370.00 அமானா வங்கி – ரூ. 360.00. https://athavannews.com/2022/1279970
-
- 0 replies
- 123 views
-
-
தற்போது... பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப் பொருட்கள், எதிர்காலத்தில் முற்றாக இல்லாதுபோகும் – அலி சப்ரி நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்ட…
-
- 0 replies
- 170 views
-