Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…

  2. 120,000 மெட்ரிக் தொன், எரிபொருள்... இலங்கைக்கு! இரண்டு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. 38 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதன் பின்னர் எரிபொருளை இறக்கும பணிகள் தொடங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதில் விமான சேவைக்கு தேவையான எரிபொருள் மற்றும் டீசல் என்பன அடங்குவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பருவ மழைக்கு முன் நிலக்கரி தேவையான நிலக்கரியும் கிடைத்துள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277472

  3. உரிமைக்காக போராடுகின்றவர்களை... சுட்டுக் கொல்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் – இராதாகிருஷ்ணன் ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைய…

  4. திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து, ஆர்ப்பாட்டம்: கடைகளுக்கும் பூட்டு! திருகோணமலை – கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை என பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலை தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தா…

  5. நாடளாவிய ரீதியில்... இன்று, “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” பிரகடனம் – தொழிற்சங்கங்கள் பொதுத்துறை தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று (புதன்கிழமை) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதற்கு “தேசிய கறுப்பு எதிர்ப்பு தினம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் பங்கேற்கின்றன என சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடிக்கு தற்போதைய ஆளும் கட்சியே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது இயற்கை …

  6. ரம்புக்கனை கலவரம் : 33 பேரில்... மூவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!! ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பொதுமக்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய அமைதியின்மையில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் நேற்று ஆர…

  7. ரம்புக்கனையில்... ஊரடங்கை தளர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – பொலிஸ் ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதனையடுா்அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகா…

  8. ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய... மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், குழு நியமனம் ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகி…

  9. புதிய பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சர்... பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில்…

    • 1 reply
    • 240 views
  10. போராட்டக்காரர்கள் மீதான... துப்பாக்கி பிரயோகத்திற்கு, செந்தில் தொண்டமான் கண்டனம்! எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலையடுத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இத்துப்பாக்கி சூட்டு …

  11. ரம்புக்கனையில்... பாரிய சேதங்களைத் தடுக்கும் வகையிலேயே, பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர் – பொலிஸ்மா அதிபர் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தி…

  12. ரம்புக்கனையில்.... பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில், உயிரிழந்தவருக்கு... காலிமுகத்திடலில் அஞ்சலி – 12ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்! ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். றம்புக்கணையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையிலேயே பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேநேரம், காலி ம…

  13. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – நாட்டின் தற்போதைய சூழ்நிலையில்... அரசாங்கத்தின் முடிவு விவேகமற்றது என எச்சரிக்கை! வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற முடிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொற்றுநோய்களின் மற்றொரு அலையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நமது பாதுகாப்பைக் கைவிடுவத…

  14. மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார் – ( திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் …

  15. இலங்கை போராட்டம்: அரசுக்கு எதிராக ஆடிப்பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொதுமக்கள் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், போராட்டங்களில் தொடர்ந்தும் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டம் என்றால், ஆவேசமாக கோஷங்களை எழுப்புதல், தாக்குதல் நடத்துதல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வழக்கமானது. எனினும், கொழும்பு - காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் ப…

  16. எரிபொருள் விலையதிகரிப்பை கண்டித்து திருமலையில் போராட்டம் தொடர்ச்சியாக எரிபொருளுக்கான விலையதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையதிகரிப்பை மேற்கொண்டதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை ( 19 ) மாலை திருகோணமலையின் பல வீதிகளிலும் தடைகளை இட்டு பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியின் 4ஆம் கட்டை சந்தி, மட்டிகளி பிரதான வீதி, நிலாவெளி வீதியின் சிரிமாபுர, வரோதயநகர் போன்ற வீதிகளில் தடைகளைப் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசில் வெளியேறு,கோத்தா வெளியேறு, மகிந்த வெறியேறு என ஆர்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி பாதைகளை மறித்திருந்தனர். திடீரென மேற்படி போரா…

  17. அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்…

    • 6 replies
    • 693 views
  18. எரிபொருள் விலையேற்றத்திற்கு.. எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... கண்ணீர்ப்புகை தாக்குதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1277386

  19. பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை – ஜேவிபி நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் கூறுகிறார். ஒரு நாட்டில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் இந்த நெருக்கடி …

  20. பாண் மற்றும் ஏனைய... வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும், அதிகரிப்பு! இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் பாண் ஒன்றின் புதிய விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அவ்வாறே, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொத்து உள்ளிட்ட மதிய உணவுப் பொதிகளின் விலையும் 20 விகிதத்தால் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277336

  21. சாந்த பண்டார பேசிய போது... வாக்குவாதம் : நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு எதிர்க்கட்சியின் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றில் உரையாற்றியபோது எதிர்கட்சியுடன் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதனை அடுத்தே சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277314

  22. குறைந்த பட்ச பேருந்து கட்டணம், 27 ரூபாயாக அதிகரிப்பு – நள்ளிரவு முதல் அமுல் நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 20 ரூபாயாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாயாக அதிகரிப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் அனை…

  23. பதவியேற்றார் பிள்ளையான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பதவயறறர-பளளயன/175-294924

  24. அரசாங்கத்தில் இருந்து விலகிய... 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக... மைத்திரி அறிவிப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக இந்தத் …

  25. தற்போதைய அரசாங்கம், திட்டமிட்டு... நாட்டை அழித்துள்ளது -சஜித் நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவை அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சஜித், தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் “நிதி மேலாண்மை குறித்து பிரதமர் பேசுகிறார். இதற்கு சர்வதேச சமூகத்திடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். சர்வதேச சமூகத்துடனான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.