Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published by T. Saranya on 2022-03-04 15:19:56 நிலைபேறான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் நீர்வேளாண்மை துறைகளில் மேற்கொள்ளக்கூடிய நிலையான அபிவிருத்தி முகாமை தொடர்பாக உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கொழும்பு, ஷங்கரில்லா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த…

  2. Published by T. Saranya on 2022-03-04 16:40:08 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவிருக்கின்றது. இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகும். ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைாயர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உதஜ்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைப்பார். அதனை தொடர்ந்து இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறும். மிச்சேல் பச்லேட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்ததன் பின்னர் பதிலளிக்கவேண்டிய நாடு என்ற வகையில் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜீ.எல்.பீ…

  3. மின் தடை நேரத்தில்... மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்! மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , நாடாளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி , அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுப…

  4. கொரோனாவினால்... உயிரிழப்பவர்களின் சடலங்களை, அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி! கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(சனிக்கிழமை) சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1270389

  5. நிலையான வைப்பு வசதி வீதம், நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானம்! நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்புத்தொகை வசதி 6 தசம் 5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7 தசம் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1270305

  6. கோட்டா... ஜனாதிபதியாக இருக்கும் வரை, அமைச்சு பதவியினை ஏற்க மாட்டேன் – விமல்! கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை தாம் எந்தவொரு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1270340 ############# ############ ############ விமல்.... மானஸ்தன். ரோசம் உள்ளவன். 🤣

  7. யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் வீதி விபத்தில் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். கல்வியியற் கல்லூரியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெறவிருந்த நிகழ்வுக்காக கரவெட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த வேளை , கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடி சந்தி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திர போட்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். போதிய வெளிச்சமின்றி உழவு இயந்திர பெட்டி நிறுத்தி…

  8. மற்றுமொரு டீசல் தாங்கிய கப்பல், இன்று நாட்டிற்கு வருகின்றது! 28,300 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்றைய தினம் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த டீசலை, இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1270326

  9. நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான நாணய கடிதங்களை திறப்பதற்கு வங்கிகள் அனுமதி வழங்காமையால் இவ்வாறு எரிவாயு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1270090

  10. இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது... சர்வதேச நாணய நிதியம்! நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் Article IV கீழ், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1270077

  11. ”ஐநாவின் சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும்” - இரா. சம்பந்தன் இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று கொண்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பந்தனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவரின் அறிக்கை வருமாறு, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இ…

    • 2 replies
    • 266 views
  12. ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா? – காணாமல் போனவர்களின் உறவுகள் இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்றையதினம் (03) வவுனியா பழையபேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகள் க…

    • 0 replies
    • 451 views
  13. வரலாறு தெரியாதவர்களை வைத்து கையொழுத்து வேட்டை நடக்கின்றது இந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க கூடிய தகுதி தத்துவம் எல்லாம் உள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்விடுதலை கூட்டணி மாத்திரம் தான் ஒழிய வேறு எந்த கட்சியாலும் முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்கள் நாளுக்கு நாள் வேறு வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி செல்லுகின்றனரே தவிர உண்மையில் நாட்டிலே எந்த பிரச்சனை இருந்து அதற்கு என்ன தீர்வு காண ஆரம்பித்தோமே அதை எல்லாம் படிப்படியாக மறந்து இப்ப புது பு…

    • 0 replies
    • 257 views
  14. (ஆர்.யசி) இலங்கை விமானப்படை வசமுள்ள விமானங்களில் அதிகமானவை ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதனால் எமது விமானங்களுக்கு தேவைப்படும் உதிரிப்பாகங்களை தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் சுதர்ஷன பதிரன தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ரஷ்யா மற்றும் உக்ரேன் மோதலின் காரணமாக இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை விமானப்படை வசமுள…

  15. யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் புதிய இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்ப டவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராக கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகின்றார். இந்தநிலையில் யாழ்ப்…

  16. கொழும்பின், சில பகுதிகளில்... 14 மணித்தியால நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 2, 3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை…

  17. (ஆர்.ராம்) உலகில் வல்லாதிக்கத்திற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் கை பொம்மையாக இருக்ககூடாது என்பது உக்ரேன் மிகச் சிறந்த உதாரணம் என்பதை இலங்கை உணர்ந்து கொள்வதோடு அணிசேராக் கொள்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்ய மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய பிரஜைகள் மற்றும் ரஷ்ய பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சோவியத் ஒன்றியக் குடியரசு உடைந்தபோது உக்ரேன் நாடு உருவானது. பின்னர் அ…

    • 2 replies
    • 365 views
  18. (நா.தனுஜா) இலங்கையின் உடன்பாடின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்பதுடன் அது சமூகங்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படுவதற்கும் துருவமயப்படுவதற்கும் வழிவகுக்கும். இந்நடவடிக்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் இடையூறுகளைத் தோற்றுவிப்பதுடன் மாத்திரமன்றி, கடந்தகால வடுக்கள் மீண்டும் கிளறப்படுவதற்கும் காரணமாக அமையும். ஆகவே ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார். மனித உரிமைகள் உயர…

    • 1 reply
    • 282 views
  19. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டில் பின்னடைவு – மனித உரிமைகள் அலுவலக பேச்சளார் சுட்டிக்காட்டு பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்ற நிலை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி இதனை தெரிவித்துள்ளார். அத்த…

    • 2 replies
    • 239 views
  20. (எம்.மனோசித்ரா) நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்ற திட்டமிடலற்ற இந்த அரசாங்கம் இலங்கையை சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எதுவுமே நடக்காததைப் போன்று செயற்படுகின்றமையானது, எதிகாலத்தில் தோற்…

    • 6 replies
    • 427 views
  21. (எம்.மனோசித்ரா) மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சிய பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமை சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹம்மட் உடனான சந்திப்பின் போது , 'இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் , ஒற்றுமை , நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் விரிவான முயற்சிகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கல…

  22. விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும், தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வரு…

  23. Published on 2022-03-01 12:22:13 (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை. ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு த…

  24. சாப்பிட இல்லாத மக்கள் என, யாரும் இந்த நாட்டில் இல்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சாப்பிட இல்லாத மக்கள் என யாரும் இந்த நாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு – ஹொரண வீதியின் 120 இலக்க பேருந்து மார்க்கத்தை விரிவுபடுத்தும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகளுக்கான திறப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஒன்றரை வருடம் வீடுகளில் அடைப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள். அந்தக் காலத்தில் செய்ய முடியாது போனதை தற்போது செய்ய முயற்சிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தையும் தமது பொருளாதாரத்தையும் மக்கள…

    • 6 replies
    • 367 views
  25. Published by T Yuwaraj on 2022-02-28 19:22:31 இராணுவத்தினரால் வெளிநாட்டில் வசிக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவரின் அனுசரணையுடன் மணவாளப்பட்டமுறிப்பு அம்பகாமம் பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவருக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் ஆலோசனைப்படி அனுசரணையாளரின் நிதியுதவியுடன் கறிப்பட்டமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஆர்.ரத்னசிங்கத்தின் அனுசரணை மூலம், 'இதயம் கொண்ட இராணுவம்' எனும் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கும் படையினர் இந்த சமூகம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத…

    • 10 replies
    • 563 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.