Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) ரஷ்ய சந்தையினை இலக்காக கொண்ட இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவை பேணுவது அவசியமாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் பிரதியமைச்சர் அலெக்ஸி வி.குஸ்தேவிடம் வலியுறுத்தினார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும், ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் அலெக்ஸி வி குஸ்தேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ரஷ்யாவின் சந்தையில் முன்னுரிமை வழங்குமாற…

    • 5 replies
    • 425 views
  2. Published on 2022-03-01 12:22:13 (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை. ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு த…

  3. ஐ.நா. ஆணையாளருக்கு 5 தமிழ்க் கட்சிகள் கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன. 2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர…

  4. உக்ரைன் நெருக்கடியே தனது தோல்விகளிற்கு காரணம் என அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களிற்கு தெரிவிக்கப்போகி;ன்றது – எதிர்கட்சி உக்ரைன் நெருக்கடியே தனது தோல்விகளிற்கு காரணம் என அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களிற்கு தெரிவிக்கும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க இந்த அரசாங்கம் தயாரில்லை என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்தகருணாதிலக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் கொரோனா வைரசினை காரணம் காட்டியது,அடுத்த மூன்று வருடங்களில் இடம்பெறப்போகி;ன்ற தவறுகள் மற்றும் பிழைகளிற்கு அரசாங்கம் உக்ரைன் நெருக்கடியை குறைகூறும் என அவர் தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 263 views
  5. காயங்களை மீண்டும் திறந்ததால் வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது: ஐ.நாவில் ஜி.எல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டப் பிரிவுக் கூட்டத்தில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டம், விசாரணைத் தடுப்பு மற்றும் விசாரணைக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளது, கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநா…

    • 4 replies
    • 426 views
  6. ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது. நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீட…

    • 1 reply
    • 198 views
  7. விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும், தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வரு…

  8. ஞானசாரர்... தலைமையிலான, செயலணியின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி கோட்டா !! ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவே செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டு அதற்கு தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத…

  9. கூட்டமைப்பு... நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால், ஆதரிக்கத் தயார் – திஸ்ஸ விதாரன பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது என சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்றும் 12 வருடங்களின் பின்னரும் அது நடைமுறையில் இருப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல…

  10. யாழ். மாவட்டத்தில்... மேலதிகமாக, எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்! யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோல் தேவைப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படும் என்…

  11. மன்னார் மாவட்டத்தில்... நெல் அறுவடை இயந்திரங்களுக்கு, டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான எரிபொருள் (டீசல்) தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதேவேளை அதி கூடிய விவசாய பிரதேசமாக காணப்படும் நானாட்டான் மற்றும் முருங்கன் பகுதிகளிலும் தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தேவையான உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றிற்கான எ…

  12. சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி ! சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலையங்கள் அல்லது நபர்கள் தொடர்பாக வெளிநாட்ட…

    • 3 replies
    • 338 views
  13. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்! நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை நீடிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், எரிபொருளுக்காக காத்திருக்கும்…

  14. வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி ; கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு இன்று (01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாட்டு சுகாதார வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கும் புதிய வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக இதுவரை பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகள், நிதி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு, இறுதிச் சடங்குகள், பயிற்சி வகுப்புகள், பரீட்ச…

  15. சுண்டிக்குளத்தில் கடற்கரும்புலிகளின் படகு மீட்பு February 28, 2022 தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் படகொன்று சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சுண்டிக்குளம் பகுதியில் குறித்த படகினை மீட்டுள்ளனர். குறித்த படகினை வெட்டி சோதனையிட்ட போது , கரும்புலி தாக்குதலுக்கான வெடி மருந்துகள் நிரப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது . சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2022/173602

    • 1 reply
    • 183 views
  16. கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணம் அனுப்பும் மதிப்பு 2022ம் ஆண்டு ஜனவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜனவரி 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் பெறப்பட்ட 645.3 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 61.6 வீதம் குறைவாகும். 2021 டிசம்பரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2020 டிசம்பரில் 813 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் பணம் அனுப்பிய பற்றுச்சீட்டுடன் ஒப்பிடும்போது 60 வீதம் குறைவாகும். ஒட்டுமொத்த அடிப்படையில், 202…

  17. மனித உரிமைகள் பாதுகாக்க படவேண்டுமானால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானால்,இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …

    • 2 replies
    • 258 views
  18. அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். …

    • 11 replies
    • 535 views
  19. பேக்கரி உற்பத்திக்கு... தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு! பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா, வெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பாமொயில் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச்…

  20. ஐ.நா கூட்டத்தொடரின்... 49ஆவது அமர்வு இன்று ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு இன்று(திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார். இந்த நிலையில், இலங்கை குறித்த உரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவிற்கு செல்லவுள்ளது. மேலும் இலங்கை குறித்த அறிக்கை ஏற்கனவே அர…

  21. இலங்கையுடனான... "ஒரு பில்லியன்" டொலர், ஒப்பந்தத்திற்கு... இந்திய அமைச்சரவை ஒப்புதல்! இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1269552 ############# ############## ############### இந்தக் காசை வைத்து, இன்னும் ஒரு மாதம் சமாளிக்கலாம். அடுத்த மாசம்... சீனாவை பிடிக்க வேணும். - ஸ்ரீலங்கா மைண்ட் வாய்ஸ்.-

  22. கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... முஸ்லிம் புத்திஜீவிகளுடன் சந்திப்பு! தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம். பி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தேசிய பட்டியல் எம். பி த. கலையரசன் ஆகியோர்.கூட்டமைப்பு சார்பாக பங்கெடுத்தனர். முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. சர்ஜூன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களான ரமீஸ் அப்துல்லா மற்றும் பௌசர் ஆகியோர் பங்கெடுத்தனர். …

  23. அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன? எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறி…

  24. ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை! ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அதன் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269417 ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கைக்கு பாதிப்பு; தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும் – நிதி ஆய்வாளர்கள் -சி.எல்.சிசில்- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய…

  25. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசம்! பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்”என்ற கோரிக்கையினை முன்வைத்து கையெழுத்துப்போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது. வாலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.