Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே நன்மை – இராதாகிருஸ்ண் 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்தார். நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நல்லாட்சி அரசாங்கம் 19 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் …

  2. பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான வீதி பொதுமக்களின் பாவனைக்கு! சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழ்மை) விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுகிறது . பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத…

  3. யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு சொந்தமான வேலணை வங்களாவடி கடைத்தொகுதியின் வேலைகளை முன்னெடுப்பதற்கு சபையின் நிலையான வைப்பில் இருக்கும் நிதியினை மீளப்பெறுவதற்கு சபை உறுப்பினர்களிடம் அனுமதியினை பெற்றுக்கொள்ளுவதற்காகவே இன்றைய விடேச கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதன்போது சபையின் தற்போதய ஆட்சியாளர்களின் அசமந்த போக்கு காரணமாகவே வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை என உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தொடர்ந்து உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எற்றுக்கொ…

  4. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்தது நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருத்திருக்கின்றது.அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த காலங்களில் தொடர்ந்தும் நிலவி வந்த டொலர் ப…

  5. மக்கள் தயார் என்றால், IMFடம் கையேந்த அரசாங்கமும் தயார்! December 29, 2021 சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகளின் அழுத்தங்களை மக்கள் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பார்களாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற நாட்டையே தாம் 2014ஆம் ஆண்டு ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தது என்கிறார். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். கடந்த அரசாங்கமும் அங்கு சென்று கடனைப் ப…

  6. யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமெனவும் ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றிருப்பது, அந்தத்தீர்மானத்தை விமர்சித்தமை ஆகியன தவறென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பில் ஊடகமொன்றுக்குக் கர…

    • 3 replies
    • 419 views
  7. கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு(27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு(27) நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று மது போதையில் மயில்வாகனபுர வீதியில் காரை மறித்து பணம் கோரினர், அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தா…

  8. (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான மலேஷியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக 2009 - 2011 காலப்பகுதியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்காவினால் போர்க்குற்ற சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது குடும்பத்தாருடன் கடந்த 5 ஆம் திகதி அமெரிக்கா செல்வதற்காக பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற போது , அவருக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி கடற்படை அதிகாரி…

    • 2 replies
    • 265 views
  9. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபை அமர்வு இன்று (28) இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாநகர முதல்வருக்கு எதி…

  10. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவர் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் - டக்ளஸ் எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை வெளிநாட்டவர்கள் வரும்போது நாட்டிற்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சனை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (28-12-2021) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ம…

    • 2 replies
    • 302 views
  11. இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்! இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது! இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. இனிய வாழ்த்துகள் ! …

  12. எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு! நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்த…

  13. கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் சடலமாக கண்டெடுப்பு! கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1258944

  14. யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். நூற்றுக்கணக…

  15. யாழ்.மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன – நல்லை ஆதீன முதல்வர் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்துஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன்.அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடு வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கு மாறும் கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும் என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமி…

  16. பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5…

  17. இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் – மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவு இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.இவ்வருடம் 25 மலேரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 பேர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள் எனவும் வைத்தியர் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 7ஆம் திகதி ஆபிரிக்க நாடொன்றிலிருந்து இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் மலேரியா பரவினால் அது நாடு முழுவதும் அனைத்து மா…

  18. விமல்,வாசு,கம்மன்பில ஆகியோர் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு – ஜனாதிபதி கோட்டாபய கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவ…

  19. 13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும்… 13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு சம்மந்தமான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், …

  20. குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி December 27, 2021 குருந்தூர்மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வரலாற்று தொன்மை வாய்ந்தவை என்று நிரூபிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தினரின் பலத்த பாதுகாப் புக்கு மத்தியில் இந்த நிரந்தரக் கட்டுமா னப் பணிகளை பழமையான முறைமை களுடன் தொல்பொருள் திணைக்களத் தின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிய வருகின்றது. முல்லைத்தீவு – குமுழமுனை – குருந் தூர்மலையில் சைவ மக்கள் வழிபட்டு வந்த இடத்தை பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் தி…

  21. அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி சாடல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார். தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார். நாட்டின் …

  22. பி.பி. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி கோட்டா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களினால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் இராஜினாமாவை கையளித்திருந்தார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை விவரித்து, மூன்று அல்லது நான்கு பக்கங்கள் கொண்ட இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்திருந்தார். https://athavannew…

  23. மட்டக்களப்பு மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது – வியாழேந்திரன் எமது மண் வளத்தை சூறையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மட்டக்களப்பு மாவட்டம் மண் மாபியாக்களின் கூடாரமாக மாறிவிட இடமளிக்கக்கூடாது. சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் எமது மாவட்டத்தின் பல பிரதேசங்கள் அத்திப்பட்டி போல் அழிந்து போகும் நிலை காணப்படுகின்றது. என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பங்குடாவெளி தளவாய் பிரதேசத்தில் (ஞாயிற்றுக்கிழமை) நீர் விநியோகத் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின…

  24. நீர்வேளாண்மையை விஸ்தரிப்பிற்கு டக்ளஸ் நடவடிக்கை! நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி வங்கியின் ஊடாக தலா 50 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் சுமார் 250 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும் பெற்று நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கான ஆரம்ப முதலீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் வி…

  25. சிங்களச் சட்டமே நாட்டின் சட்டம்!!! - ஞானசார தேரர் அதன் கீழேயே தமிழர்கள், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்கிறார் ஞானசாரர் ஒரு நாடு என்றால் ஒரே இனமாக மாறவேண்டும். சிறுபான்மை இனத்தவர் என்ற வசனம் பயன்படுத்தக் கூடாது. கலாசாரம், இனம் என்பதையும் தாண்டி நாம் அனைவரும் ஒன்றாக சிங்கள நாட்டுக்குள் வாழவேண்டும். இங்கு தமிழர்கள் வாழலாம். முஸ்லிம்கள் வாழலாம். ஆனால் இந்த நாடு சிங்கள நாடாகவே இருக்கவேண்டும். இன, மத அடிப்படையி வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட சகல சட்டங்களும் நீக்கப்படவேண்டும். சிங்களச் சட்டமே எம் அனைவரினதும் சட்டமாகும். இவ்வாறு ’ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலருமான ஞானசார தேரர் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.