ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சோமாலியாவாக மாறும் இலங்கை - எதிர்கட்சித்தலைவர் விசனம்! “எமது நாட்டை சோமாலியா நாடுபோல் ஆக்குவதற்கான வரவு – செலவுத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவான திட்டங்கள், தீர்வுகள் என ஒன்றும் இல்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கபட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய வரவு – செலவுத் திட்டமொன்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தெளிவற்ற வெற்று ஆவணமொன்றே நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முகாமை செய்வதற்கான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை…
-
- 0 replies
- 378 views
-
-
ஏ-9 வீதியூடாகப் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புடைவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி நகர் பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையில் இருந்த பெறுமதியான பொருள்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://thamilseithy.com/2021/11/12/அதிவேகத்தால்-வந்த-வினை-ப/
-
- 1 reply
- 354 views
-
-
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமது உரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளார். இதனையடுத்து, நாளை மறுதினம் முதல் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ள ந…
-
- 1 reply
- 389 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு;குருதி தானம் வழங்குமாறும் கோரிக்கை (சி.எல்.சிசில்) யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியவில்லை என அவ்வைத்தியசாலையின் இரத்த வங்கி அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இரத்த வங்கி உள்ளது. இருக்கின்ற குருதியும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதும். அதன் பின்பு ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்துகளுக்கோ, ச…
-
- 0 replies
- 157 views
-
-
மட்டக்களப்பில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு, இஞ்சி பயிர்செய்கை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் நிதி ஒதுக்கீடு November 12, 2021 (கல்லடி நிருபர்)மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கைக்காக நிதி ஒதுக்கப்பட்டு பிரதேச செயலக ரீதியாக விதைகள் வழங்கி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்! November 12, 2021 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.battinews.com/2021/11/blog-post_662.html
-
- 0 replies
- 220 views
-
-
9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு November 12, 2021 தமிழர்களின் பரம்பரை நிலங்களைப் பறித்து தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்லவென்ற திட்டத்தை அரசு கச்சிதமாக முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஒதுக்கீடுகள் என்று கூறி தமிழ் மக்களை விவசாயம் செய்ய விடாது தடுக்கின்றனர். மறுபுறம் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இது தான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டமா? தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வேலையாட்களின் குறைந்த பட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்…
-
- 0 replies
- 248 views
-
-
வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார். வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், காணி பிறழ்வு(காணி எடுத்தல் சட்டம்) என்பது இன்று மிகப்பெ…
-
- 0 replies
- 300 views
-
-
‘வடக்கு இளைஞர்களுக்கு உதவுவேன்’ முன்னாள் புலிகளிடம், மஹிந்தானந்த உறுதி! November 12, 2021 விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், விவசாயத்துக்கு தேவையான இடம் மற்றும் உதவிகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், நேற்று முன்தினம் (10.11.21) விவசாயத்துறை அமைச்சரை, அவரது அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாய ரீதியில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவி…
-
- 0 replies
- 191 views
-
-
உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம் சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இரசாயன உரத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது. இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சில இறக்குமதிகளைச் செய்வதாக இருந்தால் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது. அத்துடன்…
-
- 0 replies
- 134 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதன்படி மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் மறுத்தது. இந்த குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு …
-
- 0 replies
- 212 views
-
-
கதிர்காமம் கோவிலுக்கு... கிடைத்த, நன்கொடைகள் தொடர்பில் விசாரணை கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர், நேர்த்திக் கடனொன்றை செலுத்து முகமாகவே, இந்த மாணிக்கக்கல்லை, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வழங்கியிருந்தார். குறித்த மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பமை குறித்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் தீவிர புலன் விசா…
-
- 1 reply
- 277 views
-
-
நாடு மீண்டும் முடக்கப்படும்; பொருளாதாரம் சரிந்து மிகவும் பாதிப்பு ஏற்படலாம்- ஹெகலிய நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புடன், இந்தத் துரதிர்ஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் எனவும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நில…
-
- 0 replies
- 249 views
-
-
நீதியமைச்சு, நிதியமைச்சு, பிரதமர் அலுவலகம் முன்பாக காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் (நா.தனுஜா) அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் பிரதமர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6,000 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான …
-
- 0 replies
- 229 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நாட்டுக்கு வளமா ? சுமையா ? - பசிலிடம் வினவும் எதிர்க்கட்சி உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும். எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும். புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10), ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாடாக இ…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கையில்... இறக்குமதி பொருட்கள் சிலவற்றுக்குக் கட்டுப்பாடு! பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக மரக்கறி, பழவகை போன்று விவசாய உற்பத்திகள் உள்ளிட்ட, 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். டயில், கிரனைட், தளபாடங்கள், பிளாஸ்டிக், முகக்கவசம், துவிச்சக்கரவண்டி, சவர்க்காரம், உப்பு ஆகிய பொருட்களை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பிரதமரிடம் இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, பிரதமரின் சார்பில் பதலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்…
-
- 1 reply
- 217 views
-
-
நாளை.. யாழ்.இந்துக்கல்லூரி மைதான திறப்பு விழா. நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது திறப்பு விழா பற்றிய விடயங்களும் மைதானத்தில் உள்ள விசேட அம்சங்களும் தெளிவுபடுத்தப்பட்டன. இலத்திரனியல் ஸ்கோர்போட், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், பயிற்சிகளுக்கான இடம், மைதான பராமரிப்பு போன்ற வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நவீன விளையாட்டு தி…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டு.மாநகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்! கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பிரதி ஆiணயாளர் ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் பிரதி மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய மாநகர சபை அமர்வை சில நிமிடங்களில் ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ரி.எம்.வி.பி ஐ.தே.கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி சுயேற்சைக்குழு ஈபிடிபி உறுப்பினர்களும் வெளியேறினர். பின்னர் பதாதைகளுடன் ஒன்றுதிரண்ட ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக பதாதைகள…
-
- 0 replies
- 236 views
-
-
நாடு, மீண்டும் முடக்கப்படலாம் – ஜனாதிபதி நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இருப்பினும் போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் என்றும் இதன் காரணமாக ப…
-
- 0 replies
- 148 views
-
-
சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள, 146 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், கேகாலை, குருநாகல் மற்றும்…
-
- 0 replies
- 134 views
-
-
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள்... தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்! வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை …
-
- 0 replies
- 89 views
-
-
கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2ஆவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும். அதேபோல நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கன்னி வரவு – செலவுத் திட்டமும் இதுவாகும். சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் இதுவரை 75 வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 108 views
-
-
வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் சுவிஸ்லாந்தின் தூதுவர் சந்திப்பு! வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடினர். நேற்று (புதன்கிழமை) நண்பகல் உலங்கு வானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தார். இதன் போது சமகால நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, இந்த சந்திப்பில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை , மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு இம்மானுவேல் பெர்னாண்டோ , திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு கிறித்தியான் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோர் கலந்…
-
- 0 replies
- 113 views
-
-
பிரதமர் மகிந்தவிடம்.. கேள்வி கேட்க, சந்தர்ப்பம்! ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது. இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தினை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1249048
-
- 3 replies
- 345 views
-
-
முன்னாள் எம்.பி. நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு Digital News Team 2021-07-28T08:20:47 (சி.எல்.சிசில்) படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவுச் சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்…
-
- 3 replies
- 395 views
-