ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் 22 Views இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 332 views
-
-
இந்தியாவின்... பகையினை, சம்பாதிக்ககூடிய நிலையினையே... தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு! இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளது. வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக இந்தியாவி…
-
- 5 replies
- 350 views
-
-
குரங்கின் கையில் பூமாலை போல் மட்டக்களப்பு - சாணக்கியன் கவலை! மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த …
-
- 0 replies
- 502 views
-
-
செந்திலின் தலையீட்டால் இரத்தினபுரி த.ம.விக்கு புதிய காணி இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர். …
-
- 0 replies
- 916 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு (சி.எல்.சிசில்) யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டுக்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டமைக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த மூன்று ஆண்டுகள் யாழில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வரும் இவர், சூரினாம் நாட்டிற்கு தூதராக மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட…
-
- 0 replies
- 249 views
-
-
திஸ்ஸமஹாராமவில்... பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை, சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்! திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்…
-
- 8 replies
- 932 views
-
-
கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான் July 1, 2021 Share 2 Views வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் போதுமான கவனத்தினை யார…
-
- 0 replies
- 442 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் July 1, 2021 Share 24 Views விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப் பட்டசெங்லடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவருக்கு எதிரான சாட்சிகளை இல்லாமல் செய்யும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் உட்பட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், காணி ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி தகவல் (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்கிழமை இவ்வாறு 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். இவ்வாறு சொத்து மதிப்பிற்கும் அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும், இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாரிய பொருளாதார நெருக்கடியை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எ…
-
- 5 replies
- 667 views
-
-
என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். அவரை ஆனந்தபவனிற்கு அழைத்து சென்று இரண்டு தோசையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் நேற்று திங்கடகிழமை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான…
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கை விமானங்கள்... துருக்கியில், தரையிறங்கத் தடை! இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களாதேஷ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து நிலம்…
-
- 0 replies
- 366 views
-
-
யாழில் வீதி அமைக்கும் பணியில்... சீன பிரஜை: சுமந்திரன் அதிருப்தி பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2021/1225580
-
- 30 replies
- 2k views
-
-
கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு! தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225990
-
- 0 replies
- 453 views
-
-
சீன நிறுவனத்தின், கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்! கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமை…
-
- 0 replies
- 541 views
-
-
காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950
-
- 0 replies
- 368 views
-
-
மிருகக் காட்சிசாலைகளில் உள்ள, அனைத்து விலங்குகளுக்கும்... கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம் நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். https://athavann…
-
- 0 replies
- 243 views
-
-
அரசியற் கைதிகளுக்கு இன்னும் சிறை, கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு இது தான் ஒரே நாடு ஒரே சட்டம்-சாணக்கியன் வாழைச்சேனை தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 451 views
-
-
விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் 2021 ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபா மண்டபம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிப்பதற்கு அக்குழு தீர்மானித்தது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் இக்குழு கூடியதாக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக தெரிவித்தார். அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப…
-
- 0 replies
- 283 views
-
-
மீதமுள்ள அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - அனந்தி சசிதரன் By கிருசாயிதன் June 26, 2021 அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.யாழ்ப்பாணத்தில்,நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென்றார்.இந்நிலையில், மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் …
-
- 5 replies
- 557 views
-
-
‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத் 54 Views மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என இலங்கை குற்றப் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வாழ்க்கையில் முதல் முறையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன்.நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன. நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின…
-
- 42 replies
- 4.3k views
-
-
கிளிநொச்சி – கௌதாரிமுனை, சீன கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை! June 30, 2021 கிளிநொச்சி – கௌதாரிமுனை, கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைக்கு உரிய அனுமதிப் பெறப்படவில்லை என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தாலும் இன்று அந்த பண்ணை தடையின்றி இயங்குகின்றது. கிளிநொச்சி – கௌதாரிமுனை கல்முனை பகுதியில் இலங்கை – சீன கூட்டு நிறுவனால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத அட்டைப் பண்ணை தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறித்த சீன – இலங்கை கூட்டு நிறுவனம் யாழ். அரியாலை பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நடத்திற்குச் செல்வதற்கு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிட…
-
- 0 replies
- 475 views
-
-
தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன – சுற்றாடல் அமைச்சு தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். கரையொதுங்கிய ஆயிரத்து 34 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 கொள்கலன்களில் வத்தளை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2021/1225732
-
- 3 replies
- 484 views
-
-
பசிலின் வருகைக்காக... 113 உறுப்பினர்கள், கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றம் வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் ஜகத் குமார தெரிவித்தார். எதிர்வரும் தினங்களில் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பார் என தாம் நம்புவதாகவும் ஜ…
-
- 0 replies
- 341 views
-
-
பசிலுக்கான அழைப்பு : ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளது – ஜே.வி.பி. பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் செழிப்பான நாட்டை கொண்டுசெல்ல முடியாது கோட்டாபய ராஜபக்ஷவால் மட்டுமே அதைச் செய்ய முடிம் என்ற கருத்தியலை உருவாக்கியே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தற்போது, பசில் ராஜபக்ஷவினால் நாட்டை…
-
- 0 replies
- 257 views
-
-
பொது நிகழ்வில் முகக்கவசம் இன்றி கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார். இதன்போது குறித்த நிகழ்வுகள் சிலவற்றில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமை பலராலும் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொது…
-
- 3 replies
- 740 views
-