ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
மூன்று தசாப்த கால யுத்தத்தின் வலிகளை மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்! - வியாழேந்திரன் By கிருசாயிதன் (கல்லடி நிருபர்)கிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோமென மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்த…
-
- 0 replies
- 214 views
-
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் என எவரும் கிடையாது! March 30, 2021 இலங்கையில் இருந்து மக்கள் எவரும் பலாத்காரமாக வெளியேற்றப்படவில்லை அதனால் புலம் பெயர்ந்தோர் என எவரும் இல்லை. அவ்வாறு கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். வெளிநாட்டவர்களுடனான, நெருக்கமான உறவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் பேணும். எனினும் புலிகளின் சித்தாத்தங்களை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களையும் அரசாங்கம் தடை செய்யும் என்றும் அவர் குறிப்பி…
-
- 0 replies
- 560 views
-
-
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பாக மாவை தலைமையில் ஆராய்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு- வெல்லாவெளி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில், மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் அக்கட்சியின் மட்டு.பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை)இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள், சமகால அரசியல் நிலைமைகள், அடுத்து நடைபெறவுள்ள தே…
-
- 0 replies
- 226 views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது..! கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட நடவடிக்கை இடம்பெறுவதாக இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கானிங் கருவி மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் கார் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப…
-
- 0 replies
- 297 views
-
-
தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி 15 Views படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் முன்னிலையாகாததால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர் பயன்படுத்த ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சட்டம் சிறீலங்கா மீன்வளத் துறையினால் கடந்த 2018 ஜனவரி 24 அன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவ…
-
- 0 replies
- 386 views
-
-
வெளி மாவட்டத்து கடலுணவுகள் விற்பனைக்கு பொன்னாலையில் தடை 14 Views பொன்னாலைக் கடலில் பிடிக்கப்படும் கடலுணவுகளை மாத்திரம் பொன்னாலை சந்தையில் விற்பனை செய்வது என்றும், சந்தை வளாகத்தில் இதுவரை கடலுணவுகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு மாற்று ஒழுங்கு செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (30) வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர், பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா மற்றும் உறுப்பினர் து.சுஜிந்தன், கடற்றொழில் பரிசோதகர், கிராம சேவையாளர் உட்பட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொன்னாலை இறங்குதுறையில் வடக்கு மாகாண சபை நிதியில் அமைக்கப்பட்ட சந்தையி…
-
- 0 replies
- 347 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. மாகாண சபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிடிய பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக …
-
- 2 replies
- 355 views
-
-
நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்! நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது. அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில…
-
- 20 replies
- 1.2k views
-
-
போராட்டம் 50 நாட்களை எட்டுகின்றது: ‘பிரச்சனையை தீர்த்துவையுங்கள்’ -கிராமமக்கள் கோரிக்கை 22 Views வவுனியாவில் அமைந்துள்ள ஸ்ரீநகர் கிராம மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறுகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 50 நாட்களை எட்டுகின்ற நிலையில் அவர்களால் இன்று துண்டுப்பிசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. குறித்தி துண்டுப்பிரசுரத்தில், ‘எமது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக எமது சனசமூகநிலைய முற்றத்தில் இரவு பகலாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்,காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு. வீடு அற்றவர்களுக்கு வீடு,வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட …
-
- 0 replies
- 208 views
-
-
குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? காணாமல் போனோரின் உறவுகள் 38 Views சிறீலங்காவிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்கள…
-
- 0 replies
- 196 views
-
-
நுண்கடன் திட்டம்: பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் 32 Views நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு, கித்துள் பிரதேசத்தில் முன்னெடுத்தனர். நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிறுத்து நுண்டகடன் திட்டங்களை நிறுத்து,பாதுகாப்போம் பாதுகாப்போம் நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம்,நுண்கடனை நிறுத்தி பெண்க…
-
- 0 replies
- 342 views
-
-
சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம் சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம் – பொ. ஐங்கரநேசன் கண்டனம் 24 Views “சிங்கராஜாக் காட்டைச் சீர்குலைப்பது சூழற் படுகொலையே அன்றி வேறல்ல” என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. இவற்றை நிர்மாணிப்பதற்காகச் சீன நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உல…
-
- 1 reply
- 356 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சீனாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த சீனாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.இதனிடையே இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஏனைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மிகவும் திருப்தியளிப்பதாகவும் விரைவாக அதனை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஸ்தாபக வருட விழாவுக்கு சீனாவுக்கு ஜனாதிபதி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜப…
-
- 0 replies
- 397 views
-
-
கட்சி மறுசீரமைப்பு – எதிர்கால செயற்பாடு தொடர்பில் தமிழரசுக்கட்சி கலந்துரையாடல் March 30, 2021 இலங்கை தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளுடன் இன்று திங்கட் கிழமை(29) இரவு அம்பாறை நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் எதிர்கால போக்குகள் கட்சியின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது . இதன்போது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முன்நகர்வுகள், மாவட்ட ரீதியில் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைக…
-
- 0 replies
- 364 views
-
-
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற தேங்காய் எண்ணெய் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு, நீண்ட காலம் தேவைப்படுமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு தெவையான ஆய்வு வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் மாத்திரமே காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகுமென அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நாடு முழுவதிலும் சேகரிக்கப்படுகின்ற எண்ணெய் மாதிரியை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத…
-
- 0 replies
- 200 views
-
-
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்களை நாடுகடத்த கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி கொழும்பு மறைமாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து குடிமக்களும் இதை அவசரமாக செயற்பட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 231 views
-
-
போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற தூபியில் பதிக்க இரத்தினங்கள் நன்கொடை போரின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயா தூபியில் பதிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரத்தினங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தேவின் அறிவுறுத்தலின் பேரில், இரத்தினம் மற்றும் நகை ஆணையகத்தின் தலைவர் திலக் வீரசிங்க, குறித்த இரத்தினங்களை பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவிடம் ஒப்படைத்துள்ளார். இவைகளை இரத்தின வியாபாரிகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நன்கொடையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1205801
-
- 3 replies
- 603 views
-
-
-
(ஆர்.ராம்) இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்~ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஒரு தடையாக அமையாது என்றும் அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு விரும்பினால் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித…
-
- 1 reply
- 392 views
-
-
பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை! தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வப்ப பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு, தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என்றும் குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து தொல்பொருள் அகழ்வுகளை முன்னெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க, இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதிகளை அடையாளம…
-
- 1 reply
- 394 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது 3 Views புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விஷேட வர்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் Clinical Trial Consulting (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC), உலக தமிழர் பேரவை Global Tamil Torum (GTF), கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,C…
-
- 10 replies
- 1.1k views
-
-
1500 நாட்களை எட்டியது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் (ஞாயிற்றுக்கிழமை) காலை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று, பின்பு அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுச் சந்தியூடாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொட்டகையை வந்தடைந்தனர். இதன்போது, ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’…
-
- 0 replies
- 212 views
-
-
யாழில் இரு இளைஞர் அதிரடியாக கைது – இணையத் தளம், ‘யூ ரியூப் சனல்’ நடத்தினார்களாம் 3 Views யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இருவரும் இணையத் தளம் ஒன்றையும் ‘யூ ரியூப் சனல்’ ஒன்றையும் நடத்திக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.ilakku.org/?p=45850
-
- 2 replies
- 526 views
-
-
(ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவி ரீதியிலான சட்டவலையொன்று உருவாக்கப்படவுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஐ.நா.தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் சாட்சியங்களை திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்குமான 12பேர் கொண்ட குழுவானது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் ஒரு நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான குணாம்சங்களுடனான பத்திரத்தினை வகிக்கவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையானது, இலங்கையில் மனித உரிமைகள் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தனிநபர்களை இ…
-
- 0 replies
- 333 views
-
-
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததோடு நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ் கல்வி வலய பாடசாலைகளை தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவ…
-
- 0 replies
- 383 views
-