Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலக சாரணர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது 20 Views உலக சாரணர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.சர்வதேச சாரணர் தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபு அவர்களின் பிறந்த தினததை சரணர்கள் உலக சாரணர் தினமாக அனுஸ்டிக்கினறனர். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதான நிகழ்வு திருநீற்றுப்புங்காவில் உள்ள பேடன் பவல் சிலையருகே நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ப…

  2. செங்கலடி பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு செய்து தாக்க முயற்சித்தவர் கைது! 16 Views மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறையினரால் செங்கலடி பொது சுகாதாரவைத்திய பரிசோதகரை தாக்க முயற்சித்தவரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தொரிவித்தனர். செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். செங்கலடி ரமேஸ்புரம் கணபதிப்பிள்ளை நகர்ப் பகுதியில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபர் ஒருவர் இனங்கானப்பட்டுள்ளார். குறித்த நபர் செங்கலடி பஸ்தரிப்பு நிலையமொன்றிகும் சென்றிந்தமையினால் குறித்த பஸ் நிலையத்…

  3. ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவின் அனுசரணை தேவை -கதிர் 11 Views இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு இலங்கைத் தீவிலே சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்தார். தற்போது ஐநா சபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று ஐ நா மனித உரிமைகளுக்கான 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது இந்த நிலையில், கடந்த காலங்களில் ஐநாவினால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இருக்கின்றார்கள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநாவினுடைய போர்க்குற்ற நீதிமன்றத்…

  4. பெருந்தோட்டங்கள் இந்தியாவிற்கு சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது – மருதபாண்டி ராமேஷ்வரன் 16 Views பெருந்தோட்டங்கள் இந்தியாவிற்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் …

  5. இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாப்பதற்கான சர்வதேச அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் – 20 சர்வதேச அமைப்புகள் பகிரங்க கடிதம் இலங்கையி;ல் மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாப்பதற்கான சர்வதேச அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றவேண்டும் என 20 சர்வதேச அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக மாற்றுவழிகளை ஆராயுமாறு மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோளை ஆதரிப்பதாக 20 அமைப்புகளும் தெரிவித்துள்ளன …

  6. இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மாவை சந்திப்பு இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடபான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ள தூதுவர் 13 வதுதிருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அர்த்தப்பூர்வமான அதிகாரப்பகிர்வு என்பதையும் வலியுறுத்தியுள்ளார். Thinakkural.lk

  7. இம்ரான் கான் நாளை இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை (23) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது. இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் நாளை இலங்கைக்கு (adaderana.lk)

  8. பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது – ராமேஷ்வரன் பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் கடந்த காலங்களில் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது திட்டங்கள் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வீட்டுக்கு தலா 13 இல…

  9. இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை- கதிர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/kather-720x450.jpg இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையி…

  10. யாழ்.புங்குதீவிலிருந்து படகுமூலம் மன்னார் சென்ற இந்திய தூதரக அதிகாரிகள்..! மணல் திட்டுக்கள் குறித்து ஆராய்வது ஏன்..? யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் இருந்து மன்னார் வரை படகில் இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பஸ்தர்கள் நேற்றைய தினம் கடல்வழிப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அவர்தம் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் என சுமார் 30பேர் நேற்றைய தினம் படகு மூலம் புறப்பட்டு மன்னாரை அடைந்தனர். இவ்வாறு மன்னார் வரை கடலில் பயணித்த தூதரக அதிகாரிகள் மீண்டும் கடல்வழியாகவே யாழ்ப்பாணம் திரும்பினர். யாழில் உள்ள தீவுகள் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகளும் அதனைச் சூழவுள்ள கடலும் அனைவரின் கவனத்தையு…

    • 7 replies
    • 872 views
  11. அரசியலுக்காக மக்களை ஏமாற்ற நான் தயாரில்லை! – அங்கஜன் யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனியான விவாதத்தை கோர முடியாதவர்கள் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களில் வந்து தீர்மானம் எடுக்குமாறு குழப்பம் விளைவிப்பது தமது குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அங்கஜன் எம்.பி துணை போகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப…

  12. யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா – ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி February 22, 2021 எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற இருப்பதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகிய இரு வீதிகளும் குறிப்பிட்ட தினங்களில் ஒருவழிப் பாதைப் பயணத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆடியாபாதம் வீதியில், திருநெல்வேலிச் சந்தியில் இருந்து பிறவுண் வீதிச் சந்தி நோக்கி…

  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இம்முறை கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். இன்றைய முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மனித உரிமை ஆணைாயாளரின் முதல் உரையின்போது இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் …

  14. சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரம் -பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரும் சபாநாயகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர். கடந்த வியாழக்கிழமை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற ந…

  15. தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம் 14 Views தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: “பொத்துவில் தொடக்கம…

    • 6 replies
    • 907 views
  16. உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் -க.விக்னேஸ்வரன் 27 Views ‘’ஜெனீவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைபு, குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது” என்று க.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனீவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைபு குறித்து நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அளித்துள்ள கேள்வி பதிலில், “மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர் ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது. குற…

  17. தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள் 11 Views எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன. தமிழர்கள்…

  18. முழங்காலிலிருந்து பிள்ளைகளைத் தேடி கதறி அழுத தாய்மார்! 27 Views வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று (20) கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை ஏ9 வீதி ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் 4 ஆவது ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்துள்ள இன்றைய நாளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்…

  19. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிராமுடன் மட்டுமே பிறந்த ஓர் குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரன நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பருத்தித்துறையை சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத கர்ப்பவதியாக இருந்த அன்று குற்றுக் காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மந்திகையில் அனுமதிக்கப்பட்ட தாயார் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருந்தபோதும் உடனடியாக குழந்தை பிரவசித்தார் சாதாரணகர்ப்ப காலம் 40 வாரமாக உள்ளபோதும் 24 வார கர்ப்பத்தில் பிறந்த குழந்தையின் நிறை 600 கிராம் மட்டுமே காணப்பட்டதனால் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் டீபால் நவரட்ண தலைமையிலான மருத்துவக் குழுவி…

  20. (செ.தேன்மொழி) வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என்றும் , அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை தெளிவான தீர்மானமொன்றை எடுக்குமாறும் சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புறக்கோடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதன் தேசிய அமைப்பாளர் சானக்க பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு கீழேயே இயங்கிவருகின்றது. வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை , …

  21. (நா.தனுஜா) நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைப் பொருத்தவரையில், பிளவுபடாத நாட்டிற்குள் அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெறுவதற்கான செயற்முறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே, சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவத…

  22. (நேர்காணல் -ஆர்.யசி ) 30/1 பிரேரணையை நாம் ஏற்றுக்கொண்டால் யுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். ஐ.நா.பிரேரணையிலிருந்து விடுபட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் சார்பில் புதிய பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளது. ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்காது போகலாம். பொது இடங்களிலோ அல்லது பாராளுமன்றத்திலோ விடுதலைப்புலிகலையோ, பிரபாகரன் பற்றியோ பேச முடியாது என்ற சட்டம் விரைவில் எமது உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு இல்லை. இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தில் பொது மக்கள் இலக்குவைக்கப்படவில்லை. எனவே யுத்த குற்றங்கள் இடம்பெறவில்லை இன்னொரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்திற்கு ஒப்பான ஆயுத போரட்டத்தில் எதிரான போரா…

    • 2 replies
    • 445 views
  23. ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – 23ஆம் திகதி இலங்கை குறித்து விவாதம் A participants during the Human Rights Day Event. 6 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகின்ற நிலையில், நாளை மறுநாள் இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. அத்தோடு இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 23 ஆம் திகதி அல்லது 24ஆம் திகதி இலங்கை சார…

  24. அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து ‘தமிழ் தேசிய பேரவை’ உருவாக்க தீர்மானம் -சுரேஸ் பிரேமச்சந்திரன் 17 Views அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெராவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் த…

  25. ஆரம்பத் தீர்மானம் வருத்தம் அழிக்கிறது- காணாமல் போனவர்களின் உறவுகள் 23 Views யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அமைதியான ஆர்ப்பாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.