ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மனித வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது ஜதார்த்தமே. இவ்வாறான நிலைகள் மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல பிரதேசங்களிலும் வாழ நிர்ப்பந்தித்திருந்தது. இவற்றினால் இன்று பல கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி அழிவடைந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது. வவுனியா அல்நாட்டியகுளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. வட மாகாணத்தின் தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லைக்கிராமமாகவும் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகவும் உள்ள கல்நாட்டியகுளம் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 குடும்பங்கள் செல்வ செழிப்போடு வறுமையும் இடப்பெயர்வும் எதுவென்று தெரியாத வகையில் வாழ…
-
- 0 replies
- 448 views
-
-
16 சு.க. எம்.பி. க்களும் கூட்டு எதிரணியுடன் இணைவர்? (ரொபட் அன்டனி) தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப் பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் உள்வாங்கிக்கொள்வதற்கான நகர்வுகளும் பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற அமர் வின் போது இந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர்வதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களை கூட்டு எதிரணிப்பக்கமே அன்றைய தினம் அமரவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு குறித்த 16 எம்.பி.க்களுடனும் …
-
- 1 reply
- 310 views
-
-
ஊடக செய்தி- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். வணக்கம், தென்சூடான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் வழங்கிய கருத்துரையை இங்கு இணைத்துள்ளோம். இதனை காணொளியாக இணைத்துள்ளோம். My link உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையின் வறிய மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தொழில் வாய்ப்புக்களை ஹேலீஸ்அக்ரிகல்ச்சர் நிறுவனம் வழங்கி வருகின்றது. ஹேலீஸ் கூட்டுநிறுவனங்களின் வேளாண் வணிக அங்கமான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனம் (Hayleys Agriculture Holdings Limited) அண்மையில் மன்னார்க் கடற்களப்பில் கடற்பாசி வளர்ப்பை தொடங்கியுள்ளது. இலங்கையின் வடமேற்குக் கரையோரத்தில் தொடங்கியுள்ள இச்செற்திட்டத்தினால் மீனவ குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும். ஏனெனில் உலகளவில் கடற்பாசியிலிருந்து உற்பத்தியாகும் உணவுப்பொருள்களுக்கு விலைமதிப்பு ஏறுமுகமாக உள்ளது. குறிப்பிட்டவகைக் கடற்பாசியை இயற்கையாக வளர்த்து அறுவடை செய்வத…
-
- 1 reply
- 456 views
-
-
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு எழுதுகிறேன் - ஜீரீஎன்னிற்காக சுனந்ததேசப்பிரிய:- அன்புள்ள மகேந்திரன், இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். உங்களுக்கு கிடைத்தாலும் சிங்களத்தில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எப்படி வாசிக்க போகிறீர்கள்?. சிறையில் இருக்கும் உங்களுக்கு இறுதியாக கடிதம் வந்த நாள் எதுவும் உண்டா?. அப்படி கடிதம் எதுவும் வராமலும் இருந்திருக்கலாம். அப்படி கடிதம் எழுத எவராவது இருந்திருந்தால், 18 வருடங்கள் வழக்குகள் இன்றி, உலகில் உன்னதமான நாட்டின் சிறைச்சாலையில் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியும்?. அதனை அறிந்தும் உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதவில்லை. அது எனக்காவும் இ…
-
- 0 replies
- 698 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஆதரவு! ஐரோ. ஒன்றியம் அறிவிப்பு! [Thursday 2014-09-25 23:00] இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்கு பெரும்பகுதியான நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித…
-
- 0 replies
- 308 views
-
-
தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! வடக்கு மாகாணத் தமிழர்கள் ஒரு சில தரப் பினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அரச தலைவர் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக வடக்கில் இடம் பெறுகின்ற போராட்டங்களின் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியதை எவ்வாறு ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் மீள்நிர்ணயம் - வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் 2011-01-30 11:55:59 வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் புதிய உயர்பாதுகாப்பு வலயம் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளை மீள நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. புதிய உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. யாழ்.நகரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோப்பாயில் நிரந்தர படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஞானம்ஸ் விடுதியில் இருந்த படைமுகாம் ஏற்கனவே அகற்றப்பட…
-
- 0 replies
- 479 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமை…
-
- 5 replies
- 860 views
-
-
அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்த…
-
- 0 replies
- 688 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்குமாறு பொதுபல நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடையை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இமானுவல் அருட்தந்தை கோரியுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரச் செயலாளர் பிலிப் ஹாமொன்டிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி, இரணைதீவுக்குப் பயணித்துள்ளனர். அங்கு தங்கியிருக்கும் மக்களின் குடிதண்ணீர் விநியோகத்துக்காக ஓர் இரு சக்கர உழவு இயந்திரத்தையும் மக்களுக்காக அவர்கய் வழங்கி வைக்கவுள்ளனர் . இரணை தீவுப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விட…
-
- 2 replies
- 458 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், உள்ளுராட்சிமன்ற தேர்தல் “உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரி…
-
- 2 replies
- 583 views
-
-
அன்ரன் பாலசிங்கம் எரிக் சொல்ஹெய்ம் லண்டனில் சந்திப்பு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள மதியுரைஞரின் வாசத்தலத்திற்கு, நேற்று நேரில் சென்ற நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்கள், மதியுரைஞரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். இதன்போது மதியுரைஞரின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும், பிரசன்னமாகியிருந்தார். தற்போது தமிழீழ தாயகத்தில் நிலவும் நெருக்கடியான மனிதநேயப் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமாதான முயற்சிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறி…
-
- 0 replies
- 998 views
-
-
வியாழக்கிழமை, 17, பிப்ரவரி 2011 (13:33 IST) இலங்கை தேசிய கொடியை எரித்தவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு மதுரையில் இலங்கை அரசின் தேசிய கொடியை எரித்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 106 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படை, இன்று மீண்டும் புதுச்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. இதில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்த…
-
- 0 replies
- 801 views
-
-
சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்சில் காயமடைந்த சிறுமியின் கருத்து https://www.facebook.com/video/video.php?v=720438168026762 https://www.facebook.com/video.php?v=720438168026762
-
- 0 replies
- 399 views
-
-
பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்த ஆன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான "போர் - அமைதி' (ரஹழ் ஹய்க் டங்ஹஸ்ரீங்) என்ற அத்தியாயத்தில் பாலசிங்கம் அமைதியின் ஃபேஸ"க இருந்திருக்கிறார். போர் முனை யுக்திகளைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் அதைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பாலசிங்கம் மரணம் அடைந்ததும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வாய்ஸ் ஆஃப் தி நேஷன்' என்று பாலசிங்கத்தை வர்ணித்துள்ளார் பிரபாகரன். இதில் "நேஷன்' என்று அவர் சொல்வது தனி ஈழத்தைக் குறிக்கும்! வெளி உலகத்திற்கு விடுதலைப்புலிகளின் "வாய்ஸ2க'வும், விடுதலைப் புலிகளுக்கு வெளி உல…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த கைது தொடர்பில் தம…
-
- 0 replies
- 254 views
-
-
வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடல்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்துவருகின்றனர். அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன் , நிபந்தனையற்று , உடனடியாக வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் யாழ். பண்ணைப்பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்…
-
- 12 replies
- 1.4k views
-
-
கொசோவா பிராந்தியத்தை சேர்பியாவை விட பலம்வாய்ந்த நாடாக உருவாக்கப் போகிறேன் என்று கூறிய கொசோவா ஜனாதிபதி இப்ரஹிம் ரகோவா இந்த வருடம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு இவர் புற்றுநோய் வாய்ப்பட்டு இருப்பதுபற்றி அவருடைய ஆதரவாளர்களாகிய பிரிவினைவாதிகள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இப்ரஹிம் ரகோவா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் கொசோவாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஆகும். இவ்வாறு இவர் கொசோவாவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியிலேயே ஆகும். ஆயினும், இந்த வருட ஆரம்பத்தில் அவர் புற்று நோயால் இறந்து விட்டார். கொசோவாவை சேர்பியாவை விட பலமான நாடாக ஆக்கப் போவதாக கூறிய அவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம் [Friday, 2011-03-11 03:51:15] தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஸ்ரீ விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்க…
-
- 2 replies
- 959 views
-
-
-எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களில் 30ஆம் திகதி வியாழக்கிழமை(30) இரவு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் மற்றும் திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலய என்பவற்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் சம்பவம் இடம்பெற்ற ஆலயங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/131554-2014-10-31-11-41-58.html
-
- 0 replies
- 416 views
-
-
அமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு… June 16, 2018 1 Min Read Jun 15, 2018 @ 22:02 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
"சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்ம…
-
- 6 replies
- 667 views
-