கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
காயா ஷோபாசக்தி ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது. முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்…
-
- 17 replies
- 2.7k views
-
-
குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்க…
-
- 1 reply
- 2.8k views
-
-
முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா …
-
- 0 replies
- 1.7k views
-
-
இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை! இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும். “ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.” “உம்..” “அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.” “உம்..” “அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?” “மீனு.” “என்ன கலர் மீனு?” “வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.” “அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?” “ஆனை.” “யானை என்ன செஞ்சுது?” (துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்ச…
-
- 0 replies
- 992 views
-
-
....................பொதுவாக கணவனுடன் சந்தோஷமாக வாழாத மனைவிகள் எப்போதுமே குடும்பப் படம் கணவனுடன் சேர்ந்து எடுக்கும்போது பழி வேண்டுவதைப் பதிவு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது போல முகத்தை உம் என்று வைத்திருப்பார்கள் என்று பலமுறை கவனித்து இருக்கிறேன். சில பெண்கள் தற்காலிகமாக அந்த வாழ்வியல் அவலத்தை மறைத்து ஒரு புன்சிரிப்பைக் கொழுவிக்கொண்டு புத்திசாலித்தனமாக புன்னகைத்து மறைப்பார்கள். இந்தப் படத்தில அப்படி ஒரு வைக்கல் வண்டில் சாய்ஞ்சு விழ அதில மாட்டினவன் அப்பன் பெயரைக் கேட்ட கதைப்போல ஒரு சந்தேக நிழல் இருந்தது................... Naavuk Arasan ஒரு கேள்வி பல விடைகள் ... இது வரைக்கும் எழுதப்படாத ஒரு கதை, அல்லது பல கதைகள் சில மனிதர்களிடம் இன்னமும் விடை தெ…
-
- 0 replies
- 2.1k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் தூக்குடா `எத்தனை பேரை நாம தூக்கியிருப்போம்... இப்போ நம்மையேவா?' - மனசாட்சிகள் முணுமுணுத்தன. - பிரகாஷ்.T.A.C கடைசி ஆசை கடைசி ஆசையைக் கேட்டதற்கு, ``சீக்கிரம் தூக்குல போட்டுடுங்க'' என்றான் மரணதண்டனைக் கைதி. - கோ.பகவான் மரியாதை மிக மிக மரியாதையாக நடத்தப்பட்டார் அப்பா, சொத்து அவரிடம் இருந்தவரை. - பெ.பாண்டியன் பயம் பக்கத்து இருக்கை பயணி பிஸ்கட் நீட்டியதும் திடுக்கிட்டான், மயக்க பிஸ்கட் வைத்திருந்தவன். - சி.சாமிநாதன் ஞாபகம் வீட்டுக்கு வந்தும் குத்தாட்டம் போட்டார், கூவத்தூரிலிருந்து வந்த எம்.எல்.ஏ. - சி.சாமிநாதன் தலைமுறை நியூஸ் பேப்பரோடு அப்பா வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
குருபீடம் - சிறுகதை ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன் பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது. தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ…
-
- 0 replies
- 7.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: பார்வைகள் வீட்டுக்குள் ஏறி வந்த கணவன் முகுந்தனின் முகத்தைப் பார்த்ததுமே ஜோசியர் என்ன சொல்லியிருப்பார் என்று கல்யாணிக்குப் புரிந்தது. அவரே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தாள். ‘‘கல்யாணி! நம்ம காவ்யா ஜாதகமும் பையனோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்காம். ஒரு மாசத்துக்குள்ளே கல்யாணம் நடத்திடலாம்னு ஜோசியர் சொன்னார். ஆனால், எனக்கென்னவோ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு செய்யலாம்னு தோணுது. நம்ம ரோஷினிக்குச் செய்ததைவிட அம்பது சவரன் நகை அதிகம் போட்டு, ரெண்டு லட்சம் ரொக்கம் கொடுத்து, பெரிய கல்யாண மண்டபம் எடுத்து காவ்யாவை நல்லமாதிரி கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு தீர்மானிச்சிருக்கேன். அதுக்கு பணம் ஏற…
-
- 4 replies
- 958 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் டெக்னாலஜி... டெக்னாலஜி! `கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்! - பர்வீன் யூனுஸ் ஆட்டம்... அதிரடி! தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! - தினேஷ் சரவணன் திருடன் ``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்! - பெ.பாண்டியன் ஏட்டு சுரக்காய் ``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாக்கை சிறுகதை: பாஸ்கர் சக்தி ஓவியங்கள்: ஸ்யாம் குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ். அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸ…
-
- 1 reply
- 2.2k views
-
-
சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்! - சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``உலகத்துல இருக்கிற பூவுலேயே எதும்மா பெருசு?'' என, அடுப்படிக்குள் நுழைந்த ரம்யா கேட்டாள். முகத்தில் வெக்கை வீசக் கடுகைத் தாளித்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலான குரலில் சொன்னாள்... ``தாமரை.'' ``இல்லம்மா. `சூரியகாந்திப் பூ'னு கிருஷ்ணவேணி சொல்றா'' என்றாள் ரம்யா. ``அதுக்கு என்னடி இப்போ?'' எனச் சலிப்புடன் கேட்டாள் பார்வதி. ``ஏன்மா, சூரியன் பின்னாடியே சூரியகாந்திப் பூ போய்க்கிட்டே இருக்கு?'' ``அது சூரியனோட பொண்டாட்டி. அதான் பின்னாடியே போய்க்கிட்டு இருக்கு, போதுமா?'' என்றபடியே அடுப்பைத் தணித்தாள். அம்மாவின் சிடுசிடுத்த பதிலில் வருத்தம் அடைந்தவள்போல ர…
-
- 1 reply
- 3.9k views
-
-
ஒரு நிமிடக் கதை: வேண்டாம் இந்தப் பாதை அந்தத் தெருவில் பாதி தூரம் வந்த பிறகு, “நாம வேற தெரு வழியா போகலாம்” என்று சொன்ன கணேசன் மீது எனக்குச் சற்று கோபம் வந்தது. கடந்த ஒரு வாரமாக கணேசன் இப்படித்தான் நடந்து கொள்கிறான்! நேராக போகும் வழியை விட்டுவிட்டு சுற்றுப் பாதையில் அழைத்துப் போனான். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்துக்கு என்னையும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வைத்தான். “ஏன் கணேசா! நானும் ஒரு வாரமா பார்த்துட்டிருக்கேன். நேரா போகிற இடத்துக்கு சுத்து வழியாவே போறே. உனக்கு என்னதான் பிரச்சினை?” அவனிடம் கேட்டேன். “எல்லாம் கடன் பிரச்சினைதான்!” என் றான் கணேசன். “யார்…
-
- 1 reply
- 855 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ரேட்டிங் அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை. - எஸ்.ராமன் ரகசியம் `இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா. - கே.சதீஷ் பணம் ``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ். - சி.சாமிநாதன் தயவு ``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன். - டி.ஏ.சி.பிரகாஷ் ஹீரோயின் கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர். - பெ.பாண்டியன் எச்சரிக்கை ``அந்த ஆன்ட்டியோட மிய…
-
- 0 replies
- 676 views
-
-
இரண்டொழிய வேறில்லை “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள். இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?” உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம். “அன்பு பவளம்! இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்! பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும். ஆசை அத்தான்’ செந…
-
- 0 replies
- 925 views
-
-
முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நிமிடக் கதை- மனசு விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார். “இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார். “அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!” ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார். ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஒரு நிமிடக் கதை - படிப்பு “இந்தாங்க நம்ம மோகனுக்கு புராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. கையெழுத்துப் போட்டு கொடுங்க!” மனைவி ரேணுகா நீட்டிய ரிப்போர்ட் கார்டை வாங்கிப் பார்த்த கோபாலுக்கு கோபம் தலைக்கேறியது. “எந்தப் பாடத்துலயும் 60 மார்க் தாண்டல! தன்னோட மகன் ஆனந்த் 90 மார்க் வாங்கியிருக்கிறதா பக்கத்து வீட்டு கணேசன் பெருமையா சொல்லிட்டுப் போறார். உன் பிள்ளை மோகன் படிக்கிற லட்சணத்தைப் பார்த்தியா? எங்கே அவன்? உட்கார்ந்து படிக் கிறதை விட்டுட்டு விளையாட போய்ட்டானா? எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்…” கோபத்தில் கத்தினார் கோபால். “நல்லா படிக்கலைன்னா அவன் என் பிள்ளையா? உங்க பிள்ளையும்தானே! அது சரி…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறுகதை - விடிவெள்ளி ப்ரியதர்ஷினி கணேசன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி “யேட்டியேஏஏய்…. பாத்து சூதானமா கொத்து… நாத்துல பட்டா நஞ்சு போய்டும்” - வேகமாக ஓடிவந்த தையமுத்து மூச்சிரைக்கக் கத்தினாள். “யக்கோவ்… நீ வெசனப்படாத… நானு பார்த்துக்குறேன். நீ இப்டி இரைக்க இரைக்க ஓடியாந்தினா பேச்சி அய்த்தான் எங்களைத்தான் வையும். புள்ளையை மடில வச்சுக்கிட்டு நீ அடங்க மாட்றியே” - அதட்டினாள் வள்ளிக்கண்ணு. “அடிப் போடி கூறுகெட்டவளே… பச்சையும் புள்ளையும் எனக்கு ஒண்ணுதான்… நீ ஒழுங்கா பாத்துக் கொத்து” - களைக்கொத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கதிர்க் கூட்டத்துக்குள் நுழைந்தாள் தையமுத்து. வாகாகக் கொத்தியைப் பிடித்துக் களையெடுக்கும் தையமுத்துவை அபூர்வமாகப் பார்ப்பதுபோல …
-
- 0 replies
- 3.3k views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 985 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் குறி ``பேருந்து எப்போ வரும்?'' எனக் கேட்டார், கிராமத்தில் குறி சொல்லும் பூசாரி. - அபிசேக் மியாவ் முன்னேற்றம் ஸ்கூட்டர் ஓட்டத் திணறும் அப்பா, கார் ஓட்டப் பழகினார் செல்போன் கேமில். - கோ.பகவான் சத்துணவு வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டுவந்திருந்தார் சத்துணவு ஆயா. - சி.சாமிநாதன் ஒற்றுமை ``வழிகாட்ட ஒரு தலைவனே இல்லாம, எப்படி உங்களுக்குள்ள போராட்டம் நடத்துற ஒற்றுமை வந்தது?'' என ஆச்சர்யமானார் சுதந்திரப் போராட்டத் தியாகி. - பெ.பாண்டியன் ஏமாற்றம் ``ஏ.டி.எம்-ல ஒரு பேய் சார்'' என இயக்குநர் சொன்னதும், ``ஏமாந்துபோயிருக்குமே!'' என்றார் புரொடியூஸர்.…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆசை முகம் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ரஞ்சிதா எந்த நம்பிக்கையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள் எனத் தெரியவில்லை. அவளைத் தோளில் தாங்கியிருந்த ராஜனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. காருக்குள் ஜன்னல் காற்று ஆவேசத்தோடு வீசியது. அவள் தலைமுடி அலைந்து, ராஜனின் முகத்தில் சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. காரின் கண்ணாடியைப் பாதி மூடி, காற்றைக் கட்டுப்படுத்தினான் ராஜன். அவனுடைய அசைவு அவளுடைய உறக்கத்தைக் கலைத்துவிடக் கூடாது என்ற யத்தனிப்பையும் மீறி, அவள் தன் கண்களை லேசாகத் திறந்து, அவனோடு மேலும் நெருங்கி அமர்ந்து புன்னகைத்தாள். துப்பட்டாவைப் போர்த்திக்கொள்ளும் சாக்கில் தோளில் மெள்ளக் கடித்தாள். காலையிலேயே கிளம்பியது, வழியில் சாப்பிட்ட வெண்பொங்…
-
- 1 reply
- 5.3k views
-
-
நிலமதி - சிறுகதை சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ஸ்யாம் நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம். கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக…
-
- 0 replies
- 2.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஸீட்! தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்! - கண்ணன் பணம் பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்! - கட்டுமாவடி கவி கண்மணி தமிழன்டா! சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!” - சுந்தரம் ராமசாமி திருட்டு! ``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொ…
-
- 0 replies
- 1.9k views
-
-
விசிறி வீடு: காலத்தின் வாசனை தஞ்சாவூர்க் கவிராயர் நாட்டு மருந்துகளும் பூஜை சாமான்களும் விற்கும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை ஓலை விசிறி என் கவனத்தை ஈர்த்தது. நான் அப்படியே ஐம்பது வருடங்கள் பின்னால் போய்விட்டேன். ஆசையாக அதைத் தொட்டேன். என் உடம்பு சிலிர்த்தது. பத்திரமாக அதை வீட்டுக்கு வாங்கி வந்தேன். ஓரத்தில் முக்கோணம் முக்கோணமாகப் பூ பின்னிய விசிறி. பச்சை ஓலை வாசனை இன்னும் விசிறியில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசிறும்போது ஆஹா.. முகத்தில் மோதும் அந்த பச்சை வாசனை! எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் கூட எடுத்து விசிறிப் பார்க்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை அல்லவா? வீட்டில் எங்கு பார்த்தாலும் மி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை - எடை ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன். எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது. ‘சே..’ என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். “மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது” என்றார் கடைக்காரர். அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம…
-
- 1 reply
- 1.3k views
-