விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…
-
- 0 replies
- 428 views
-
-
எனக்கு சாந்தியைத் தெரியாது! விஜய் விக்கி “தன் வீட்டில் தொலைக்காட்சி வசதி இல்லாத செளந்திரராஜன், ஊரில் வழக்கமாகத் தொலைக்காட்சி பார்க்கும் அந்த வீட்டின் வாசலில் மறுகியபடி நின்றிருந்தார். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அங்கு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வீட்டுக்காரரிடம் ‘எம்மக இன்னைக்கு ஓட்டப்பந்தயம் ஓடுறா, டிவி’ல காட்டுவாகளாம்… ஒரு அஞ்சு நிமிஷம் பாக்கனும்பா…’ என்றதும் சீரியல் பார்த்த பொதுஜனங்கள் கோபத்தில் சீறத்தொடங்கினார்கள். யாரோ ஒரு நல்ல மனிதரின் கரிசனத்தின் விளைவால், பலபேரின் ‘உச்’களுக்கு மத்தியில் விளையாட்டு சேனல் மாற்றப்பட்டது. சில நிமிடங்களில் தன் மகள் ஓடும் அந்தப் போட்டி திரையில் பளிச்சிட்டது. பல சாதனைகள் புரிந்த வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு மத்தியில் தன் மகள் கொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடை என் வாழ்க்கையை மாற்றியது- ஆன்ட்ரூ ரஸல் உருக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல்: கோப்புப் படம் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்ட விவகாரத்தில் எனக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடைதான் என்வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 11-வது ஐபிஎல் சீசனுக்கான 5-வது போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா…
-
- 0 replies
- 385 views
-
-
எனது இலக்கு தங்கம்..!' - சிந்து உற்சாகம் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்று ஆரம்பித்து வைத்த இந்தியாவின் பதக்கப்பட்டியலை, மேலும் அழகூட்ட இருக்கிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து. நேற்று நடந்த பேட்மிட்டன் போட்டியில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார் சிந்து. உலகின் நம்பர் ஒன் வீரரான கரோலினா மரினை, இன்று மாலை 6.55 மணிக்கு இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து. 49 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 21-19,21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் சிந்து. இரண்டாவது செட்டில் திடீரென பி.வி.சிந்து விஸ்வரூபம் எடுத்தார். 11-10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில், 21-10 என இரண்டாவது செட்டையும் …
-
- 1 reply
- 669 views
-
-
தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை…
-
-
- 5 replies
- 641 views
- 1 follower
-
-
எனது டெஸ்ட் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார்: கிளென் மெக்ரா இலங்கை வீரர் ஷமிந்தா எரங்காவை பவுல்டு செய்த ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ். தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான தனது சாதனையை எளிதில் முறியடிப்பார் என்று கிளென் மெக்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக கிளென் மெக்ரா 563 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். மே.இ.தீவுகளின் ‘லெஜண்ட்’ கார்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்த படியாக தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 451 விக்கெட்டுகளில் உள்ளார். இதனையடுத்து தனது 563 விக்கெட்ட…
-
- 0 replies
- 326 views
-
-
எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…
-
- 0 replies
- 408 views
-
-
எனது பங்கு பெரிதளவல்ல: மஹேல தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவ்வணியால் விதிக்கப்பட்ட 230 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவ்விலக்கை அடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறித்து மஹேல ஜெயவர்தன, சிறப்பான பாராட்டை வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்டுவரும் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து அணிக்கு அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அவ்வணியின் திறமைகள் என்பன பரந்தவை என்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதிலும், தனது பங்கு சிறியதே என அவர் குறிப்பிட்டார். 'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. திறமையுள்ள வீரர்கள் குழாமுடன் நீங்கள்…
-
- 0 replies
- 477 views
-
-
எனது பந்துவீச்சு முறை கடவுள் எனக்கு அளித்தது: இடது கை அதிசய ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் ஷிவில் கவுஷிக். | படம்: கே.வி.எஸ். கிரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமாதிரியான ஆக்சனுடன் வீசிய குஜராத் லயன்ஸ் இடது கை ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் என்பவரை பலரும் கண்டிருக்கக் கூடும். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு நேரடியாக நுழைந்தவர், இன்னமும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையை உயர்த்தி உடம்பை தாறுமாறாக வளைத்து பந்தை தனது ரிஸ்டின் உதறலுடன் சரியான லெந்தில் வீசி அசத்திய ஷிவில் கவுஷிக், அசப்பில் தென் ஆப்பிரிக்காவில் இதே போல் வீசிய பால் ஆடம்ஸ் என்ற இடது கை ஸ்பின்னரை நினைவு படுத்துகிறார். இடது கை லெக் ஸ்பின், கூக்ளி, என்று ப…
-
- 0 replies
- 373 views
-
-
எனது வெற்றிக்குக் காரணம் தன்னம்பிக்கைதான் – சங்கவி தன்னம்பிக்கையுடன் மெய்வல்லுனர் அரங்கில் சாதனை படைத்துவரும்யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் தங்க மங்கை சந்திரசேகரன்சங்கவியின் எதிர்பார்ப்பு. http://www.thepapare.com
-
- 0 replies
- 289 views
-
-
எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்கிறேன்: ரியோவில் சாக்ஷி மகிழ்ச்சி பதக்கத்துடன் சாக்ஷி மாலிக் | படம்: ஏஎஃப்பி '12 ஆண்டு உழைப்பின் பலன்' ரியோவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி "ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!" ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்…
-
- 1 reply
- 348 views
-
-
என் அணிக்கு இவர் கட்டாயம் வேண்டும்… அடம் பிடிக்கும் விராட் கோஹ்லி..! இந்திய அணியில் தற்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திற்கும் தலைமையேற்றுள்ளார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. டி 20 தொடரில் முதல் முறையாக தலைவர் பதவியை வகித்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் கோஹ்லி. இந்திய அணிக்கு தலைவராக உள்ள கோஹ்லி, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்படும் ஐபி…
-
- 0 replies
- 570 views
-
-
உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால் ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இ…
-
- 0 replies
- 588 views
-
-
என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன்: டுபிளெசிஸ் ஆறுதல் மெசேஜ் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ். - படம். | கெட்டி இமேஜஸ். 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானதுதான் என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ருந்துகிறேன். ஒருவருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால்தான் அவருக்காக குறுஞ்செய்தி அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன்…
-
- 0 replies
- 226 views
-
-
என் உடல், என் மனம், என் கிரிக்கெட்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: விராட் கோலி மும்பை விளம்பரதாரர் நிகழ்ச்சியில் விராட் கோலி. - படம். | விஜய் பேட். கிரிக்கெட் ஆட்டத்தில் பணிச்சுமை குறித்து பல நாட்டு வீரர்களும் தங்கள் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பணிச்சுமை கொஞ்சம் அவரது உடலையும் பதம்பார்த்து வருகிறது, எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் கூறும்போது, “உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்தன. அதனை தற்போது கடந்து வந்திருக்கிறேன். பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்…
-
- 0 replies
- 396 views
-
-
என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்: வெளிவராத புதிய தகவல்கள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அவரின் மனைவி கேண்டிஸ் வார்னர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 342 views
-
-
என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …
-
- 0 replies
- 287 views
-
-
என் கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்குண்டு: பும்ரா! தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, “நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்…
-
- 1 reply
- 713 views
-
-
என் கேப்டன் ஸ்டைலை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்: கோஹ்லி டெல்லி: அணியை வழிநடத்தும் தனது தலைமை குணத்தை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் கேட்டாலும் மாற்ற மாட்டேன் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கேப்டன் டோணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோஹ்லியை டோணி போன்று விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் கேட்டுக் கொண்டார். இது குறித்து கோஹ்லி கூறுகையில், மாட்டேன் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். யா…
-
- 0 replies
- 355 views
-
-
- என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் ஒழுங்கை கிரிக்கட் தெரியுமா? பன்னிரண்டு அடி அகலம் தான். பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் அத்தனையும் எடுபட்டு போய் சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதில் சுவர். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினால் சரிந்துவிழுந்துவிடும். ஒரு பக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டுக்கு கனவில் உங்களோடு சேர்ந்து டூயட் ஆடும் மதுபாலா! “ம்ஹூஹூம் அனுபவமோ” என்று நிச்சயம் இரண்டு நாளுக்கு ஒருவாட்டியாவது கனவில் வந்து செல்லமாக சிணுங்கியிருப்பாள்! வடிவான பெட்டை! அவளை ரூட்டு போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார…
-
- 2 replies
- 1.5k views
-
-
என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…
-
- 1 reply
- 627 views
-
-
என் மாமியார் கணித்துக் கூறிய புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் வெற்றி: கங்குலி ருசிகர பதிவு கொல்கத்தாவில் ஆஸி.அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் சவுரவ்கங்குலி, ஹர்பஜன் சிங் - படம் உதவி: கெட்டி இமேஜஸ் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மறக்க முடியாத, டெஸ்ட் போட்டி வெற்றியை முன்கூட்டியே எனது மாமியார் கணித்துக் கூறினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறந்திருக்க முடியாது. …
-
- 0 replies
- 402 views
-
-
என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார். மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட…
-
- 0 replies
- 343 views
-
-
என் முதல் டெஸ்ட்டில் உடைந்த என் பேட்டை ஒட்டிக் கொடுத்தவர் சச்சின்- கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி - படம் உதவி: ஏஎஃப்பி என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டி எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான…
-
- 0 replies
- 294 views
-
-
என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…
-
- 0 replies
- 343 views
-