விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…
-
- 0 replies
- 518 views
-
-
ஊன்றுகோல் உதவியுடன் அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா! இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும். கடந்த …
-
- 1 reply
- 518 views
-
-
பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…
-
- 0 replies
- 518 views
-
-
தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் பேசியதன் அர்த்தம் என்ன? டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு! இன்னமும் ரோஜர் ஃபெடரர் களத்தில்தான் உள்ளார். நடாலும் உள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவது குறித்து 30 வயது ஜோகோவிச் சூசகமாகப் பேசியுள்ளதாக டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். உலகின் 7-ஆம் நிலை வீரரான ஆஸ்தீரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக, இருவருக்கும் இடையே விற…
-
- 1 reply
- 518 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014 08:44 0 COMMENTS ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மாட்ரிட் கழக வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜன் ரொபன், ஜேர்மனி வீரர் மனுஎல் நெயுர் ஆகியோருடன் போட்டியிட்டு ரொனால்டோ இந்த விருதை தனதாக்கியுள்ளார். இந்த விருதை பெறும் நான்காவது வீரர் இவர். இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் பிரான்க் ரிபேரி, ஸ்பெயின் வீரர் அன்றேஸ் இனியஸ்டா, ஆர்ஜன்டீன வீரர் லியனொல் மெஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளனர். மெஸ்ஸி அவரின் பார்சில்னோ கழகத்திற்காக விருதைப் பெற்றுக் கொண்டார். ஊடகவியலாளர்களினால் வாக்களித்து தெரி…
-
- 1 reply
- 518 views
-
-
பேட்டிங் தடுமாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காவிட்டால் அயல்நாடுகளில் நாம் தொடரை ஒரு போதும் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் த…
-
- 4 replies
- 518 views
-
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …
-
- 0 replies
- 518 views
-
-
பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங…
-
- 0 replies
- 518 views
-
-
பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில் புதிய வேகப்பந்துவீச்சாளர் டாகெட், பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 518 views
-
-
“இலங்கை கிரிக்கெட் விருதுகள்-2016”;உங்களுக்கு பிடித்த வீரர் யார்?:நாளை வாக்களிப்பு ஆரம்பம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் அரங்குகளில் நிலைநாட்டப்படும் மிகவுயர்ந்த சாதனைகளுக்கான விருதாக திகழும் “ டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2016 ” நிகழ்வு அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெப்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ட…
-
- 0 replies
- 518 views
-
-
மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த மெத்தியூஸ் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து தனது இராஜினாமாவை அறிவித்தார். பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார். …
-
- 0 replies
- 517 views
-
-
டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். அவரைப்பற்றிய சில தகவல்கள் சென்னையை பூர்வீகம…
-
- 0 replies
- 517 views
-
-
உலகக் கோப்பையை வென்றால் 1 மில்லியன் டாலர்கள் போனஸ்; இலங்கை அரசு அறிவிப்பு உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார். 1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங…
-
- 1 reply
- 517 views
-
-
உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி சாதனை படைத்தார் க்ளோஸ். 1990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு …
-
- 0 replies
- 517 views
-
-
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…
-
- 1 reply
- 517 views
-
-
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையின் முன்னணி கபடி வீராங்கனை By Mohammed Rishad - ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மனோரி ஜயசிங்கவுக்கு இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நான்கு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட A மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட டியுரடிக் என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூ…
-
- 0 replies
- 517 views
-
-
இந்தியாவின் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் இதெல்லாம் நடந்தது! #OnThisDay 1974ஆம் ஆண்டு. அப்போது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்த நாடுகள் மொத்தம் ஆறுதான். அவற்றுள் ஐந்து நாடுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டன. இப்போதைக்கு ஓவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் தலைமையகமாகக் கருதப்படும் இந்தியாதான், அப்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் ஆடாத அந்த ஆறாவது நாடு. 1974ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதிதான் அவர்கள் முதன்முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்கள். முதல் போட்டியிலேயே அப்போதைய அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையைச் செய்தது இந்திய அணி. ஆனால், இந்தப் போட்டிக்குப் பின்னால், பல அரசியல் …
-
- 0 replies
- 517 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். அதன்படி டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் நவம்பர் 17 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடரில் இருந்து முன்னாள் இந்திய அணித் தலைவர் டிராவிட் அணியின் தலைமைப் பயிறச்சியாளராக பொறுப்பேற்பார். தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடந்துகொண்டிருக்கும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ணத்துடன் முடிந்தவுடன் முடிவடைகிறது. திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்.பி. சிங் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக ராகுல் டிரா…
-
- 1 reply
- 517 views
-
-
ராஞ்சியில் 3-வது டெஸ்ட்: பிட்ச் தயாரிப்பில் அக்கறை காட்டும் தோனி தோனி. | படம்.| பிடிஐ. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னாள் கேப்டன் தோனி அக்கறை காட்டுவதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் நடைபெறுவதால் அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி தீவிர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் தெரிவித்ததாவது: தோனி பிட்ச் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் அக்கறை காட்…
-
- 0 replies
- 517 views
-
-
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கோல்கீப்பர் சென்ஸோ மெயீவா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற ஊரில் அவரது வீட்டில் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த 2 மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைய ஒருவர் வீட்டு வாசலில் காவலுக்கு நின்றார். துப்பாக்கியால் மெயீவாவை சுட்டுக் கொன்ற பிறகு 3 பேரும் தப்பிச் சென்றனர். கொலையாளிகள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தால் 14,000 டாலர்கள் அளிக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க கேப்டனும், கோல் கீப்பருமான சென்ஸோ மெயீவா வீட்டில் கொலையாளிகள் 7 பேர் இருந்ததாக போலீஸ் தரப்பினர் த…
-
- 0 replies
- 516 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சாதனை (நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3.25 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே நிகழ்ச்சியில் பங்குபற்றிய அளவெட்டி, அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி (2.80 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காம் நாளான இன்றைய தினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீப்பிகா நிலைநாட்டிய புதிய சாதனையுடன் மேலும் 4 சாத…
-
- 0 replies
- 516 views
-
-
1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா! பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார். பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர். கராச்சி கிங்ஸ் அணி …
-
- 1 reply
- 516 views
-
-
'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…
-
- 1 reply
- 516 views
-
-
மெஸ்ஸியின் கடைசி நேர கோலால் பார்சிலோனா மீண்டும் முதலிடத்தில் By Mohamed Arshad - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் சரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருவமாறு, பார்சிலோனா எதிர் அட்லடிகோ மெட்ரிட் லியோனல் மெஸ்ஸி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 1-0 என வெற்றியீட்டி லா லிகா புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இன்னும் நான்கு நிமிடங்களே இருக்கும்போது பெனால்டி பெட…
-
- 2 replies
- 516 views
-
-
வென்றால் பீபாவைப் பிளவுபடுத்துவேன் இவ்வருடம் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் (பீபா) தேர்தலில் வெற்றிபெற்றால், அச்சம்மேளனத்தை இரண்டாகப் பிளவுபடுத்தவுள்ளதாக, ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்-காலிபா தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகள் காரணமாக, பலத்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பீபா, தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை, பெப்ரவரியில் நடாத்தவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, ஷேக் சல்மானே கருதப்படுகிறார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்காக, பீபாவை இரண்டாகப் பிளவுபடுத்துவதே தனது நோக்கம் எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 516 views
-