விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைத்தது இலங்கை! உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 50 – 88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெற்று வருகின்றது. இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா மற்றும் வட அயர்லாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்த…
-
- 0 replies
- 593 views
-
-
உலக தடகளப் போட்டியில் சம்பியனான கோல்மன்! உலக தடகளப் போட்டியில் அமெரிக்க வீரர் கோல்மன் தங்கப் பதக்கம் வென்று சம்பியனானதுடன், உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்றார். 17 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. 8 வீரர்கள் கலந்துகொண்டிருந்த இறுதிச் சுற்றில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன், 9.76 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் இந்த வெற்றிமூலம் 23 வயதான கிறிஸ்டியன் கோல்மன் உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்ற…
-
- 0 replies
- 361 views
-
-
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள். இவர்களிடமிருந்து 25 மொபைல…
-
- 0 replies
- 688 views
-
-
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: பிசிசிஐ விருதுக்கு தேர்வு சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: படம்: ஏ.பி. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு. | படம்: வி.வி.சுப்பிரமணியம். டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதால…
-
- 0 replies
- 691 views
-
-
எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…
-
- 0 replies
- 334 views
-
-
கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்ப்டுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார். அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். அதேபோல் பயிற்சியாள…
-
- 0 replies
- 456 views
-
-
வடமாகான பாடசாலைகளுக்கு இடையிலான 19வயதின் கீழ் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி சம்பியனானது யாழ்இந்துக்கல்லூரியை இறுதி போட்டியில் சந்தித்த யாழ்மத்தி 51-60 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முகநூல் யாழ் மத்திய கல்லூரி
-
- 0 replies
- 423 views
-
-
இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன் எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது… “எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும் கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம். விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல். கிடைத்த வாய்ப்புக்களி…
-
- 0 replies
- 788 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 450 views
-
-
ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 54 ரன்னுக்கு ஆல் அவுட்! ஆஃப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-2 என இரண்டு அணிகளும் சமமாக இருந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய வந்தபோது மழை பெய்யவே, போட்டி தடைப்பட்டது. இதையடுத்து, டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 161 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வேக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 13.5 ஓவர்களில் 54 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே. 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 எனத் தொடரை வென்றது ஆஃப்…
-
- 0 replies
- 308 views
-
-
2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தா…
-
- 0 replies
- 383 views
-
-
2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம் Image Courtesy - EPA ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வி…
-
- 0 replies
- 617 views
-
-
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ? By VISHNU 06 OCT, 2022 | 11:48 AM (என்.வீ.ஏ.) அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,விவேக் ஆனந்த் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்; ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடி…
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது: விராட் கோலி இந்தியாவிற்கு எதிரான தொடரில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்து வீசாத மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா பேட்டிங்கில் திணறும். ஆனால், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை சீர்குலைப்பார்கள். இதனால் ஆஸ்திரேலியா…
-
- 0 replies
- 586 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு: முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார். ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கத…
-
- 0 replies
- 271 views
-
-
யாரென்று தெரிகிறதா இவர் ‘தீ’ என்று புரிகிறதா...! இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்த தோனி சமீப காலமாக தடுமாறினார். உடனே ‘டுவென்டி–20’, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இவரை துாக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை கேட்டு ‘கூலா’க இருந்த தோனி, நேற்று ‘பேட்’ மூலம் பதிலடி தந்தார். 126 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை, தனது அசத்தலான பேட்டிங்கினால் மீட்டு எடுத்தார். எதிரணிக்கு ‘நெருப்பாக’ மாறிய இவர், 86 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி சேர்த்து 92 ரன்கள் குவித்தார். அதிகமான விமர்சனங்கள் காரணமாக வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தனது ‘கேட்ச்’ மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட்டான போதெல்லாம் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த…
-
- 0 replies
- 369 views
-
-
'Tournament-ல ஜெயிச்சிதான் நல்ல ஷூ வாங்குனேன்' - Arjuna Award பெற்ற Thulasimathi Murugesan தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'அர்ஜுனா விருது' துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
கெய்லின் சாதனை முறியடிப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டிரினிடாட் டொபாகோவில் அந்நாட்டு கிரிக் கெட் நிறுவகம் சார்பில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான இ–20 போட்டி நடத்தப்படுகிறது. இதில்,நடந்த போட்டியில் ஸ்கார் போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பைசைட் அணி 152 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸ்கார்போரோக் அணியின் 23 வயதான தோமஸ், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசித் தள்ள…
-
- 0 replies
- 637 views
-
-
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணியினர் தனது முதல் இன்னிங்ஸில் 276 ஒட்டங்களை பெற்றது. மேற்கிந்திய தீவுகள் ஏ அணி சார்பில் விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை ஏ அணியினர் 386 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலங்கை ஏ அணி சார்பில் கருணாரத்ன 131 ஓட்டங்களையும் குசல் பெரேரா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 110 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் த…
-
- 0 replies
- 442 views
-
-
மைதானத்தில் துடுப்பாட்ட மட்டையுடன் நடனம் ; இங்கிலாந்து வீரர் அசத்தல் (கணொளி இணைப்பு) விசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. துடுப்பாட்ட மட்டையை சுழற்றி சுழற்றி நடனமாடியவாறு துடுப்பாட்டத்தை மேற்கொண்ட இவர் நான்கு ஓட்டங்களை பெற்றமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேவேளை இவரது இந்த துடுப்பாட்டத்தை பார்த்த சக வீரர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். காணொளி இதோ... http://www.virakesari.lk/article/13032
-
- 0 replies
- 293 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்காவின் மறுமுகம் : அதிர்ச்சிக்குள்ளான சகவீரர்கள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் கராச்சி மற்றும் பேஸ்வர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் குவேட்டா கிலேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் கராச்சி அணியின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரவின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு புதுமையளித்தது. நேற்றைய போட்டியில் பேஸ்வர் சல்மி அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது 10 ஓவர் நி…
-
- 0 replies
- 255 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்ப…
-
- 0 replies
- 263 views
-
-
உடற் தகுதியை நிரூபித்து காட்டிய நுவன் குலசேகர, லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பயிற்சிக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 20 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதல் இடங்களை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றுள்ளனர். சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. ஐ.சி.…
-
- 0 replies
- 204 views
-