Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 416/10 (துடுப்பாட்டம்: மர்னுஷ் லபுஷைன் 143, ட்ரெவிஸ் ஹெட் 39, டேவிட் வோணர் 43, ஸ்டீவ் ஸ்மித் 43, டிம் பெய்ன் 39, மிற்செல் ஸ்டார்க் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/92, டிம் செளதி 4/93, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/37, ஜீட் றாவல் 1/33) நியூசிலாந்து: 166/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 80, கேன் வில்லியம்சன் 34, கொலின் டி கிரான்ட்ஹொம் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/52, நேதன் லையன் 2/48, பற் க…

    • 0 replies
    • 393 views
  2. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது. ராஜ்கோட்: …

    • 0 replies
    • 404 views
  3. இறுதிப் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அவுஸ்ஹிரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா, நடப்புச் சம்பியன்கள் அவுஸ்திரேலியா ஆகியன தகுதிபெற்றுள்ளன. சிட்னியில் இன்று மழை காரணமாக இந்தியா, இங்கிலாதுக்கிடையேயான முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறாத நிலையில் குழுநிலையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் என குழு ஏயின் வெற்றியாளர்களாக இங்கிலாந்தை விட குழுநிலையில் மேம்பட்ட பெறுபேறுகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது…

    • 0 replies
    • 392 views
  4. 28 Sep, 2025 | 05:23 PM இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்…

  5. கடற்கரை கைபந்து விளையாடிய இந்திய அணி (வீடியோ இணைப்பு) மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றுள்ள இந்தியா அணி ஓய்வு வேளையில் கடற்கரை ஓரத்தில் கடற்கரை கைபந்து (Beach volleyBall ) விளையாடினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலியே தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த தொடர் வருகிற 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…

  6. சொந்த மண்ணில் இராமகிருஸ்ணா முதலிடம் -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. மேற்படி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 26கழகங்கள் பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகியிருந்தன. போட்டியின் வழமையான நேரத்தில் இரு அணிகளும் எவ்விதமான கோல்களையும் இடாத சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக பெனால்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டது. பெனால்டியில், இராமகிருஸ்ணா வெற்றி பெற்று …

  7. நான் இனியும் அணித்தலைவராக இல்லை: சமி இரண்டு தடவைகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உலக இருபதுக்கு-20 பட்டங்களை பெற்றுக் கொடுத்த டரன் சமி, தனது பேஸ்புக் கணக்கில் பிரசுரித்த காணொளியொன்றில், தான் இனியும் மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு-20 அணித்தலைவராக இல்லை எனத் தெரிவித்துள்ளார். இருபதுக்கு-20 அணியின் தலைமைத்துவத்தை மீளாய்வு செய்வதாவும் மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சமிக்கு இடமில்லை எனவும் அலைபேசி அழைப்பொன்றின் மூலம் தேர்வாளர்கள் குழுத் தலைவர் தனக்கு அறிவித்ததாக நேற்று வெள்ளிக்கிழமை (05) பதிவிடப்பட்ட காணொளியொன்றில் சமி தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு முதல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, 47, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தலைமை தா…

  8. இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் கோலி இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் விராட் கோலி. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்திய மண்ணில் விராட் கோலி மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், அவர் தென்ஆப்பிரிக்கா, இ…

  9. என்னால் அணிக்கு பங்களிப்பு இல்லையெனில் ஆடுவதில் பயனில்லை அவுஸ்திரேலியாவுக்கு எதி­ராக மெல்­போர்னில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு பற்றி யோசனை எழுந்­துள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரி­வித்­துள்ளார். சிட்னி டெஸ்ட்­டுக்கு முன்­ன­தா­கவே அவர் ஓய்வை அறி­விக்­கலாம் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யில்­லை­யெனில் இந்தத் தொடர் முடிந்து ஓய்வு பெறுவார் என்று தெரி­கி­றது. மெல்போர்ன் தோல்வி, தொடர் தோல்­வி­யா­ன­தை­ய­டுத்து பாகிஸ்­தானின் மிகச்­சி­றந்த வெற்றி தலைவரான மிஸ்பா கூறி­ய­தா­வது: ஓய்வு பெறு­வது குறித்து நான் முடி­வெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அணிக்கு பங்­க­ளிப்பு செய்ய முடி­யா­த­போது ஆடி என…

  10. 20 ஓவர் உலக கோப்பையில் டி.ஆர்.எஸ், ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர்: ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்துவது மற்றும் ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என்று ஐ.சி.சி.யின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு…

  11. என்னை விட்டுவிடுங்கள்: செரினா உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் செரினா வில்லியம்ஸ், ஆண்களுக்கான போட்டியில் பங்குபற்றினால், 700ஆவது இடத்துக்கு அருகிலேயே தரப்படுத்தப்பட்டிருப்பார் என, டென்னிஸ் ஜாம்பவானான ஜோன் மக்என்ரோ தெரிவித்த கருத்துகளுக்கு, செரினா, பதிலளித்துள்ளார். கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 7 பட்டங்களையும் இரட்டையர் பிரிவில் 9 பட்டங்களையும் வென்றவராவார். இந்நிலையில், தனது புதிய புத்தகத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காக, வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜோன், செரினாவை, “சிறந்த பெண் வீரர். எந்தவிதக் கேள்வியும் இல்லை” என்று குறிப்பிட்டார். ஆனால்…

  12. இங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நிர்ணயித்து ஆடும் "மேட்ச் பிக்ஸிங்" என்ற மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரித்துக்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போலிசார் ஆறு பேரைக் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் கால்பந்து விளையாட்டு வீரர்கள். ஆனால் இவர்களில் எவரும் தொழில்முறை கால்பந்து கிளப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்று பிபிசிக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் கவனம் ஒரு சர்வதேச சட்டவிரோத சூதாட்டக் குழுவினரே என்று போலிசார் கூறுகின்றனர். பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி டெலெகிராப்" பத்திரிகை ரகசியமாக நடத்திய புலன் விசாரணையினை அடுத்து இந்தக் கைதுகள் வருகின்றன. ஆசியாவில் இருந்து இயங்கும் இந்தப் பந்தயச் சூதாடிகள்…

    • 3 replies
    • 745 views
  13. 15 பந்துகளில் அரை சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர். - படம்: கே.பிச்சுமணி டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முன்னேறியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற…

  14. ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட் கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது. பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார…

  15. இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலி…

  16. எம்.எஸ். தோனி - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஆயிரம் வழிகள் சென்னை அணியின் தலைமையில் இருந்து தோனி விலகுகிறார் என்பதைக் கேட்க பலருக்கும் நம்ப முடியாமல் இருக்கிறது, ஆனால் இதை பலரும் எதிர்பார்த்திருந்தனர் தான், இருந்தாலும் அதை ‘நம்ப முடியவில்லை’. அடுத்தொரு ஆண்டு, அதற்குப் பிறகு மற்றொரு ஆண்டும், தோனி தலைமை தாங்கி இருந்தாலும் அவரால் மற்றொரு கோப்பையை சென்னைக்கு வாங்கிக் கொடுத்திருக்க முடியும் என அவர்கள் அறிவார்கள். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, ஆனாலும் வயதின் எதிர்பார்ப்புகளை மீறி தம்மை ஆச்சரியப்படுத்தும் திறன் படைத்தவரும் அல்லவா தோனி! கடைசியில், ஜடேஜா இனி தலைவராக இருந்தால் என்ன கீப்பராக இருந்து அவரை வழிநடத்துபவராக தோனி …

  17. காயத்தின் தீவிரம் என்னால் எழுந்து நடக்க முடியுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா - படம். | பிடிஐ நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அந்த அணி வீரர்கள் தேவையற்ற ஷாட்களை ஆடியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தன் சதம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தன் தீராத நேயம் ஆகியவை பற்றியும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “தனிப்பட்ட முறையில் இந்த நூறு எனக்கு முக்கியமானது. கிட்டத்தட்ட 500 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், அதனால் ரன்கள் ஸ்கோர் செய்ய முடிந்தது எனக்கு திருப்தியைத…

  18. 'சேப்பாக்கம் வரவேற்பை மிஸ் பண்ணப்போறேன்' -அஸ்வின் வேதனை இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு, ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கவுள்ளதை அடுத்து சென்னை ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். தோனி, ரெய்னா, ஜடேஜாவை RTM கார்டு சென்னை அணி தக்கவைக்க ஏலத்தின் மூலம் அஸ்வினை பஞ்சாப் வாங்கியது. அஸ்வின் இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணிக்காகக் களமிறங்காதது வருத்தம் அளிக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 10 வருடங்களாக சென்னை அணிக்கு விளையாடிய நிலையில் தற்போது விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. ஏலம் என்பது எதிர்பாராதது. நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் பௌலிங் செய்யும்ப…

  19. காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின் அர்ஜெண்டீனாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த இஸ்கோ. - படம். | ஏ.எஃப்.பி. மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது. ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருக…

  20. உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC 28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா? சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி அந்தச் சாதனையைப் படைக்குமா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்த நாள் அது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து, இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய 10-வது உலகக்கோப்பைத் தொடர், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி …

  21. ஒற்றை கையால் கேட்ச் செய்து வியக்க வைத்த கிறிஸ் கெயில் கனடாவில் நடந்த டி 20 தொடரில் கிறிஸ் கெயில் ஒரு கையில் அட்டகாசமாக கேட்ச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் - மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.4 ஓவர்களில் 145 ரன்களுக்…

  22. கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் லண்டன்: இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி. கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன் இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெ…

  23. தேசியக் கொடியின் நிறத்தில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சையில் டெண்டுல்கர் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் செய்யப்பட்ட கேக்கை வெட்டியதாக டெண்டுல்கர் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் சப்பல் சிரேஷ்ட வீரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சப்பல் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் சபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தப் பிரச்சினை ஓய்வதற்கு முன்பே டெண்டுல்கர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்காக மேற்கிந்தியா சென்ற போது டெண்டுல்கர் கேக் வெட்டியது சர்ச்சையாக கிளம்பியுள்ளது. அவர் கேக்…

  24. இங்கிலாந்து - பிரேசில் அணிகள் மோதிய பரபரப்பான சிநேகபூர்வ கால்பந்தாட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து - பிரேசில் அணிகளிடையே சிநேகபூர்வ சர்வதேச கால்பந்து போட்டி லண்டன் வெம்லே புதிய ஸ்ரேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முன்னாள் கப்டன் டேவிட் பெக்காம் களமிறங்கினார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் கப்டன் பதவியிலிருந்து விலகிய பெக்காம், 11 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக தனது சொந்த அணிக்காக ஆடினார். அவரது வருகை உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஸ்ரேடியத்தில் 88 ஆயிரத்து 745 ரசிகர்கள் குவிந்திருந்தனர். பிரேசில் அணியும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. தொடக்கம் முதல…

    • 3 replies
    • 1.2k views
  25. இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.