விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
கேரளாவில் சச்சின் பெயரில் கிரிக்கெட் ஸ்டேடியம்! கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சச்சின் தெண்டுல்கர் பெயர் சூட்டப்படவுள்ளது. இது குறித்து கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் மேத்யூ கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், வீரர்கள் பெவிலியனுக்கு ஏற்கனவே சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது வயநாட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மைதானத்திற்கோ அல்லது கேரள கிரிக்கெட் சங்கத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள புதிய ஸ்டேடியத்துக்கோ சச்சின் பெயர் சூட்டப்படும் . இது தொடர்பாக சச்சினிடமும் பேசி முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். வயநாட்டில் இயற்கை எழில் …
-
- 0 replies
- 358 views
-
-
எந்த அணியையும் எங்கு வேண்டுமானாலும் எதிர்கொள்ள இந்திய டி20 அணி தயார்: தோனி தோனி. | பிடிஐ. கடந்த 10 டி20 போட்டிகளில் இலங்கையுடன் ஏற்பட்ட புனே தோல்வி நீங்கலாக மீதி போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி எந்த நாட்டில் எந்த அணியை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக கேப்டன் தோனி பெருமிதமாக தெரிவித்தார். நேற்று ஆசியக் கோப்பையில் யு.ஏ.இ. அணியை வீழ்த்திய பிறகு தோனி கூறும்போது, “எந்த அணியையும் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கத் தயார்” என்றார். “இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்த இந்திய அணி எந்த ஒரு சூழ்நிலைகளிலும் விளையாட தயாரான அணியாகவே உள்ளது. நாம் 50 ஓவர் கிரிக்கெட் பற்றி இப்போது பேச வேண்டாம். இந்த டி20 அணியைக் கொண்டு உலகில் எங்க…
-
- 0 replies
- 315 views
-
-
விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ) மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக் கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங், தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் எகெங் (26). இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார். மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக் ஆனால் …
-
- 0 replies
- 665 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு …
-
- 0 replies
- 680 views
-
-
தன் பந்துவீச்சில் கடுமையாகக் காயப்படுத்த விரும்பிய வீரர் யார்? ஷோயப் அக்தர் ருசிகரம் அக்தர். - கோப்புப் படம். | வி.வி.கிருஷ்ணன். ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்து வீச்சுக் காலக்கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளில் காயப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் ஸ்லேட்டர், பாண்டிங், டேமியன் மார்டின், கங்குலி, கயீஃப், லஷ்மண் உட்பட பல வீரர்களை தன் பந்து வீச்சில் காயமடையச் செய்துள்ளார் ஷோயப் அக்தர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 பேட்ஸ்மென்களை காயப்படு…
-
- 0 replies
- 279 views
-
-
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்க…
-
- 0 replies
- 295 views
-
-
காலிறுதிக்குள் நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி அணி சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அணிகளைத் தெரிவு செய்யும் ஆட்டமொன்றில் (Pre-Quarter Finals) ஜா-எல கிறிஸ்துவரசர் கல்லூரியினை யாழ். மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றது. தீர்மானமிக்க 50 ஓவர்களினைக் கொண்ட இந்தப் போட்டியானது இன்று (21) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கிறிஸ்துவரசர் கல்லூரியின் தலைவர் தனன்ஞய பெர்னாந்து முதலில் …
-
- 0 replies
- 321 views
-
-
104 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு…
-
- 0 replies
- 616 views
-
-
கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போகின்றேன்- ஹேரத் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை வெல்வதும் அந்த அணியுடனான தொடரை வெல்வதும் சிறப்பான விடயம் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ள ஹே…
-
- 0 replies
- 244 views
-
-
வவுனியாவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாகப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தமது அலுவலகத்தை மூடிவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும்இ தமது உறுப்பினர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு வரவில்லையெனத் தெரிவித்திருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினர் ஒமர்சன்இ வவுனியாவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார். உரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இன்னமும் ஓரிரு தினங்களில் அவர்கள் வவுனியா அலுவலகத்துக்குத் திரும்பி விடுவார்கள் எனவும் தொபினுர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். செய்தி: சங்கதி.கொம்
-
- 0 replies
- 918 views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் கப்டன் வோகன் கூறுகிறார் ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கும் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணிக் கப்டன் மைக்கேல் வோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். சாம்பியன் கிண்ணப் போட்டிக்கு முன் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கி முறையே 2 மற்றும் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட இருவருக்கும் மேன்முறையீட்டின் மூலம் தடை நீக்கப்பட்டது. ஆனால், இருவரும் உலகக் கிண்ணப் போட்டியில் ஊக்க மருந்து சோதன…
-
- 0 replies
- 773 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பாலக்காட்டு மாதவன்'.... கிருஷ்ண சந்திரனின் பிளாஷ்பேக்! சென்னை: தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் பள்ளி கல்வி பயின்ற மலையாளத்து கிருஷ்ண சந்திரன், இன்று ஐக்கிய அரபு எமிரேட்டின் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் கிருஷ்ண சந்திரன் விளையாடும்போது அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இவருக்காகவும் கைத்தட்டல் ஒலிக்கப்போகிறது. ஐக்கிய அரபு எமிரேட் இந்த உலக கோப்பையில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அந்த அணியின் ஒரு வீரரின் பெயரை பார்த்ததும் இந்தியர்களுக்கு.. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். இது.. நம்மூர்காரர் பெயர் மாதிரி உள்ளதே என்பதுதான் அந்த சந்தேகம். அந்த பெயருக்கு சொந…
-
- 0 replies
- 659 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. சென்சூரியனில் பொக்ஸிங்டே அன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 6…
-
- 0 replies
- 648 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…
-
- 0 replies
- 677 views
-
-
நியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம். யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின. https://newuthayan.com/story/16/நவிண்டில்-கலைமதி-சாதனை.html
-
- 0 replies
- 706 views
-
-
37 வருடங்களின் பின்னர் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பிரித்தானியா தகுதி க்ளாஸ்கோ, எமிரேட்ஸ் எரினா டென்னிஸ் அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஓர் இரட்டையர் ஆட்டத்திலும் அண்டி மறே வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலியாவை 3 – 2 என்ற ஆட்டக் கணக்கில் பெரிய பிரித்தானியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியின்மூலம் டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு 37 வருடங்களின் பின்னர் பெரிய பிரித்தானியா தகுதிபெற்றுக் கொண்டது. ஞாயிறன்று நடைபெற்ற முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் 7– 5, 6– 3, 6– 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் பேர்னார்ட…
-
- 0 replies
- 240 views
-
-
மும்பை : 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியாளர் பவுண்டரி எண்ணிக்கையை வைத்து தேர்வு செய்யப்பட்டது தவறு என பலரும் கூறி வரும் நிலையில், சச்சின் தன் கருத்தை கூறி இருக்கிறார். இரண்டு முறை டை ஆன, அந்த நேரத்தில் என்ன செய்திருக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் ஐசிசி விதிக்கு மாற்றாக தன் யோசனையை முன் வைத்துள்ளார். மேலும், விளையாட்டில் கூடுதல் நேரம் கொடுப்பதை விட வேறு எதுவுமே முக்கியமல்ல என சுட்டிக் காட்டி ஐசிசிக்கு குட்டு வைத்துள்ளார். இதுவரை எந்த கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் நடக்காத அதிசயங்கள் 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடந்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரு …
-
- 0 replies
- 682 views
-
-
அடுத்த உலகக் கோப்பை வரை தோனி கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும்: சேவாக் விருப்பம் தோனி நல்ல இதயம் படைத்தவர். மூத்த வீரர்களான நாங்கள் அவரை மதித்தோம் என்கிறார் சேவாக். | படம்: ஏ.பி. அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் வரை கேப்டன் பொறுப்பில் தோனியே நீடிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். தோனி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த சேவாக் கூறியதாவது: "தோனி அடுத்த உலகக் கோப்பை வரை கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நல்ல உலகக்கோப்பை அணியை அவர் ஏற்படுத்துவார். அவர் ஓய்வு பெற்றால் 5,6 அல்லத் 7-வது நிலையில் யாரைக் களமிறக்குவது என்பது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்றாகிவிடும், தோனி இருக்கும் போதே அந்த நிலைகளுக்கு யாரை இறக்குவத…
-
- 0 replies
- 295 views
-
-
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சென்னை, கோவா அணி பலப்பரீட்சை ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா, சென்னை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ஃபடோர்டா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக விருந்து படைத்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2-வது சீசனின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. 8 அணிகள் பங்கேற்று, இந்தியாவின் 8 நகரங்களில் களைகட்டிய இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதில் கோவா, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. முன்னதாக, அரையிறுதி ஆட்டங்களில் டெல…
-
- 0 replies
- 579 views
-
-
மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக , இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில், இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும்…
-
- 0 replies
- 404 views
-
-
அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா: அதி சிறந்த வீரர் சங்கக்கார, அதி சிறந்த வீராங்கனை நிமாலி 2016-05-20 10:23:42 அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது (2015) விழா வில் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரர் விருதை இலங்கையின் முன்னாள் கிரிக்ெகட் வீரர் குமார் சங்கக்காரவும் அதி சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை மெய்வல்லுநர் நிமாலி லியனஆராச்சியும் வென்றெடுத்தனர். இவ் விருதுவிழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. வருடத்தின் விளையாட்டுத்துறையில் அதி சிறந்த ஆளுமை மிக்கவருக்கான விருது சர…
-
- 0 replies
- 280 views
-
-
ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல் அதிக மெடல்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட் மற்றும் சிமோன் பைல்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியன்று, ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றன. 16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் நடந்த விளையாட்டுப் போட்டிகள், இதன் மூலம் முடிவுக்கு வந்தன. 207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது; வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங…
-
- 0 replies
- 679 views
-
-
அப்ரிடியை மிரட்டினாரா தாவூத் இப்ராஹிம் சம்பந்திக்காக தலையிட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடியை தாவூத் இப்ராஹிம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு கடந்த உலகக் கிண்ணத்துடன் முழுக்கு போட்ட அப்ரிடி, இ–20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 285 views
-
-
பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள். சில்வர்ஸ்டோன் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில…
-
- 0 replies
- 349 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ்: கம்ரன் அக்மல் கடும் சாடல் கம்ரன் அக்மல், வக்கார் யூனிஸ் - படம் | ஏ.பி. வக்கார் யூனிஸ் ஒரு பயிற்சியாளராக தோல்வி அடைந்தவர், அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் குட்டிச்சுவராகிவிட்டது என்று விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் கடுமையாகச் சாடினார். ஜியோ சூப்பர் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம், பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார். சில வீரர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்தது.…
-
- 0 replies
- 648 views
-