விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …
-
- 0 replies
- 274 views
-
-
இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…
-
- 0 replies
- 428 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், அபய் குமார் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டி…
-
- 5 replies
- 557 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
லண்டனில் விருது பெற்ற சங்கக்கார லண்டனில் இடம்பெற்ற 5 ஆவது ஆசிய விருது வழங்கும் விழாவில் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார விருது பெற்றுள்ளார். http://www.virakesari.lk/articles/2015/04/18/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0
-
- 2 replies
- 1k views
-
-
ஓய்வை அறிவித்தார் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்போது 20 ஓவர் அணிக்கு தலைவராக இருந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அப்ரிடி அடுத்த ஆண்டுடன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியுடன் 20 ஓவர் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்துடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்கிலாந்தில் கழ…
-
- 0 replies
- 705 views
-
-
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் சாருஜன். ஆனால் எல்லோரும் அவரை " Little Sanga" என்றுதான் அழைக்கிறார்கள். காரணத்தை நீங்களும் பாருங்கள் !
-
- 6 replies
- 562 views
-
-
வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஜூலை 23, 2007-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி விளாசுவதை பார்க்கிறார் தற்போது ஓய்வு அறிவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர். | கோப்புப் படம். குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இஷாந்த் சர்மா அபாரமாக வீச் இந்தியாவை வெற்றி பெறச் செய்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையல…
-
- 0 replies
- 312 views
-
-
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து! ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தவும் ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி. நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் முதன் முதலாக ரோஜா நிறத்திலான கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. விளக்குகளின் வெளிச்சத்தில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து தெள்ளத் தெளிவா தெரியும் என்பதால் பகலிரவு டெஸ்ட் போட்டிளில் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது. லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ஆரொன் பிஞ்ச் இன் சதத்தின் உதவியுடன் இலங்கை அணிக்கு கடின இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்ரேலிய அணி சார்பாக, ஆரொன் பிஞ்ச் 5 ஆறு ஓட்டங்கள், 15 நான்கு ஓட்டங்கள் உள்ள…
-
- 2 replies
- 967 views
-
-
2023 இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் எனகுமார் சங்கக்கார தெரிவித்துள்ளார் கல்ப்நியுசிற்கான தனது வாராந்த கட்டுரையில் குமார் சங்கக்கார இதனை தெரிவித்துள்ளார். 2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 2023 இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக த…
-
- 21 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கோப்புப் படம். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு…
-
- 0 replies
- 246 views
-
-
தண்டனையிலிருந்து தப்பினார் ஹைடன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார் [29 - February - 2008] ஹர்பஜன் சிங்கை விமர்சித்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் மத்யூ ஹைடனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அபராதம் மற்றும் தண்டனையிலிருந்து ஹைடன் தப்பிவிட்டார். இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களிடையே வாக்குவாதம் தொடர்கிறது. சிட்னி டெஸ்டின் போது அவுஸ்திரேலியாவின் சைமண்ட்சை நோக்கி ஹர்பஜன் `குரங்கு' என திட்டியதாக பிரச்சினை வெடித்தது. பின்னர் சிட்னியில் நடந்த முக்கோண ஒரு நாள் போட்டியின் போது இஷாந்த் - சைமன்ட்ஸ் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதேபோட்டியில் ஹர்பஜனைப் பார்த்து `முட்டாள் பையன்' என்று அடிக்கடி திட்டியதாக ஹைடன் மீது இந்திய அணியினர…
-
- 0 replies
- 918 views
-
-
அரை குறை ஆடை அணிந்து வந்தால் பேட்டியை மறுத்தார் அம்லா February 07, 2016 தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹசிம் அம்லா, தொகுப்பாளினி முறையாக ஆடை அணியாத காரணத்தினால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ஹசிம் அம்லா, இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இரு அணிகள் மோதிய 5வது ஒருநாள் போட்டியின் போது, இவரை பேட்டி எடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் Low Neck Top-யை அணிந்திருந்த காரணத்தினால், அம்லா பேட்டி கொடுக்க மறுத்து விட்டார். தொடர்ந்து பேட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெள…
-
- 0 replies
- 628 views
-
-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடைரை தனதாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் …
-
- 0 replies
- 389 views
-
-
வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் RB லீப்சிக் டிமோ வோர்னரின் பெனால்டி கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனி கழகமான லீப்சிக் 1-0 என வெற்றியீட்டியது. லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி டொட்டன்ஹம் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…
-
- 0 replies
- 507 views
-
-
பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் போட்டிகளில், டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றியுள்ளது. கடந்த பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து ஏறத்தாள வெளியேறும் நிலையிலிருந்த லெய்செஸ்டர் சிற்றி, இந்தப் பருவகாலத்தின் ஆரம்பத்தில், பிறீமியர் லீக் பட்டத்தை அவ்வணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு, 5,000-1 என்ற நிலையிலிருந்து தற்போது பிறீமியர் லீக் பட்டத்தை வென்றமையானது விளையாட்டு வரலாற்றின் சிறந்ததோறு தருணமாகக் கருதப்படுகி…
-
- 2 replies
- 522 views
-
-
பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 660 கோடி நஷ்டம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக…
-
- 0 replies
- 419 views
-
-
கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ. 12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன. பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இர…
-
- 0 replies
- 376 views
-
-
'உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்' இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போ…
-
- 0 replies
- 630 views
-
-
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை. http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art
-
- 0 replies
- 265 views
-
-
ஆஸி. கிரிக்கெட் விஜயத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் இல்லை; தரங்க அல்லது சந்திமால் அணித்தலைவராகலாம் 2017-02-06 09:55:38 (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இம் மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்கில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் அவசரமாக ஓட்டம் ஒன்றைப் பெற விளைந்தபோது மெத்யூஸ் உபாதைக்குள்ளானமை அனைவரும் அறிந்ததே. அவர் இன்னும் பூரண குணமடையாததால் அவுஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய…
-
- 0 replies
- 269 views
-
-
பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின. இரண்…
-
- 0 replies
- 326 views
-
-
ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்கள…
-
- 1 reply
- 455 views
-
-
எலி, முள்ளம்பன்றி, கார்.. விநோத காரணங்களுக்காக தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்! இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று மதியம் களத்தில் அதிக மாசு இருப்பதாகக் கூறி இலங்கை வீரர்கள் முகமுடி அணிந்து ஆடினர். லக்மல் உள்ளிட்ட சில இலங்கை வீரர்கள் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறி டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். இதனால், அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது. இதேபோல கிரிக்கெட் வரலாற்றில் பல விநோத காரணங்களுக்காக ஆட்டம் தடைபட்டிருக்கிறது. அதன் விவரம்... * 1957 ஜூலை: இங்கிலாந்தில் நடந்த கவுன்டி கிரிக்கெட் போட்டியின் இடையே முள்ளம்பன்றி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்…
-
- 0 replies
- 439 views
-