Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக்தியில் யுவராஜ் சிங் இந்திய அணியில் இனி தான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூடிய வாய்ப்பிருப்பதாக விரக்தியடைந்துள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். இந்திய அணியில் தனது வாய்ப்புகள் பற்றி அவர் கூறும்போது, “இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே எனது இலக்கு. அணியில் தேர்வு செய்யப்படாத போது ஏமாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எனது ஆட்டமும் சீராக இல்லை. ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. மாற்றங்கள் வரலாம். நான் மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில் வாழ்க்கை வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும். என்னால் …

  2. கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய…

  3. 'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…

  4. உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்.| ஏ.பி. டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். …

  5. ஐ.பி.எல்., சூதாட்டம்: மவுனம் கலைத்தார் தோனி ஜனவரி 25, 2015. சிட்னி: ‘‘ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீ…

  6. 04 OCT, 2023 | 10:25 AM ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/166031

  7. பிலெண்டர் தெரிவில் சர்ச்சை; மறுக்கிறது தென்னாபிரிக்கா உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் பதினொருவரில் இன அடிப்படையிலான தெரிவாகவே வெரோன் பிலெண்டர் உள்ளடக்கப்பட்டதாக பரவிவரும் கருத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிறிஸ் நென்ஸானி மறுத்துள்ளார். அவரது கருத்தையே அணியின் பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவும், அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்சும் வழிமொழிந்துள்ளனர். இனவெறிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சர்வதேச விளையாட்டுக்களிலிருந்து தடைசெய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்து, பல வருடங்களுக்குப் பின்னரே மறுபடியும் சர்வதேச விளையாட்டுத் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரான தென்னாபிரிக்க அரசின் அவதானமான நடவடிக்கைகள் விளையாட்டுத…

  8. இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று! இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமைத் தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282103

  9. சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …

  10. ட்விட்டரில் ட்ரென்ட் ஆன செரினாவின் அட்டகாச போஸ்! பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், கறுப்பாக இருந்தாலும் களையானவர். விளையாட போகும் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி ஆடை அணிந்து, ஃபேஷன் விழாக்களில் பங்கேற்பது செரினாவின் பொழுது போக்கு. இந்தியாவுக்கு ஒரு முறை வந்த போது பெங்களுருவில் நடந்த ஃபேஷன் விழாவில் செரினாவும், வீனசும் சேலை கட்டி வலம் வந்தது குபீர் சிரிப்பை வரவழைத்தது. டென்னிசில் 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா, விளையாட்டுலகில் கனக்கச்சிதமான உடல் அமைப்பை கொண்ட வீராங்கனைதான். சில சமயங்களில் அவர் கொடுக்கும் போஸ்கள் உலகையே அதிர வைக்கும். அந்த வகையில் 'நியூயார்க் மேகசின்' இதழுக்காக அவர் கொடுத்த போஸ்தான் இப்பேது ட்விட்டரில் ட்ரென்ட் ஆகியுள்ளது. ட…

  11. இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லின் சூப்பர் கேட்ச் (வீடியோ) இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 299 ரன் அடித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் அற்புதமான முறையில் பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.லியாம் பிளங்கெட் அடித்த பந்து சிச்சராக மாற இருந்தது. இந்த சமயத்தில் அந்தரத்தில் பாய்ந்து சென்று மேக்ஸ்வெல் அற்புமாக கேட்ச் செய்து அவரை அவுட் செய்தார். http://www.vikatan.com/news/article.php…

  12. உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா ( வீடியோ) கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 42-வது ஓவரை வீசிய இந்திய பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கென் ரூதர்போர்ட், இயார்ன் ஸ்மித், இவான் சார்ட்பீல்ட் அகியோரின் விக்கெட்டுகளை கிளீன் போல்டு முறையில் வீழ்த்தி அசத்தினார் சேத்தன் சர்மா. இதன் மூலம் உலகக் கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் சேத்தன் பெற்றார். http://www.vikatan.com/news/article.php?a…

  13. சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற லபுகலையை சேர்ந்த ராஜ்குமாருக்கும் ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வெலிஓயாவைச் சேர்ந்த சன்முகேஸ்வரனுக்கும் தனி வீடுகளை நிர்மாணித்து கொடுக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த ராஜகுமாரன் மற்றும் சன்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ராஜகுமார் மிஸ்டர் மலையகம் என்றும் சன்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் எனப்படும் மலையக குதிரை …

  14.  பொக்ஸிங் டே கொண்டாட்டம்: நாளை நான்கு போட்டிகள் கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாளான 'பொக்ஸிங் டே"இல், கிரிக்கெட் போட்டிகளும் களைகட்டவுள்ளன. நான்கு போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்தை, அந்நாட்டில் வைத்துச் சந்திப்பதால், வெற்றிபெறுவதற்கு, அதிகமாகப் போராடி வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால…

  15. அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா : யாழ். மாணவன் புதிய சாதனை (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவக்கச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் புதிய போட்டி சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் முதலாவது நாளான நேற்றைய தினம் புவிதரனின் சாதனையுடன் மேலும் 3 சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று காலை நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழா வைபவத்தின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்…

  16. தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா! தமிழகத்தின் சங்கருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா லைசென்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கால்பந்து விளையாட்டில் திண்டுக்கல் வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ருபாதேவி தற்போது பிஃபா நடுவராக தேர்வாகியுள்ளார். தற்போது 25 வயதான ரூபாதேவி , பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்புகளை படித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். தமிழக மற்றும் இ…

  17. களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..! இந்திய அணி வென்ற மிகச் சிறந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் என பட்டியலிட்டால், அதில் பல போட்டிகளில் துருப்புச்சீட்டாக யுவராஜ் சிங் கண்டிப்பாக இருந்திருப்பார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்திய அணி, அயல்மண்ணில் இறுதி போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சமயம் அது. 2002 -ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில், இந்தியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. ஷேவாக், கங்குலி, டெண்டுல்கர், மோங்கியா, டிராவிட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழக்க, 24 ஓவர…

  18. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை எதிர்த்து சு.சுவாமி மனு- சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்பு டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு(சிஎஸ்கே) 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணி சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பல வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது பெரும் புயலைக் கிளப்பியது இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்தது. இதனடிப்படையி…

  19. சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி By Mohamed Azarudeen - பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான் சுல்டான்ஸ் மற்றும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இடையிலான கண்காட்சி T20 போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது. சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தான் மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் பாகிஸ்தான் சென்றுள்ள, குமார் சங்கக்கார தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அங்கே மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தவக…

  20. 27 Aug, 2025 | 11:02 AM இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்…

  21. பிரேஸில் கால்பந்தாட்டப் பயிற்றுநர் பதவியிலிருந்து டுங்கா நீக்கம்! 2016-06-16 10:56:03 ஐக்­கிய அமெ­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் கோபா அமெ­ரிக்க நூற்­றாண்டு கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் முதல் சுற்­றுடன் பிரேஸில் வெளி­யே­றி­யதை அடுத்து அதன் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து டுங்­காவை பிரேஸில் நீக்­கி­யுள்­ளது. ரௌல் ரூடி­யாஸின் கை மூலம் போடப்­பட்­ட­தாகக் கரு­தப்­படும் கோலின் உத­வி­யுடன் பிரேஸில் அணிக்கு எதி­ரான போட்­டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்­ப­டையில் பிரேஸில் வெற்­றி­பெற்­றது. இந்த தோல்­வியை அடுத்து முதல் சுற்­றுடன் பிரேஸில் வெளி­யே­றி­யது. அப் போட்­டியில் தோல்வி அடைந்­ததால் டுங்­கா…

  22. புதிய வடிவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லீக்; ஐ.சி.சி. ஆலோசிக்கிறது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய லீக் முறையை அறி­மு­கப்­ப­டுத்த சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆலோ­சித்து வரு­கின்­றது. 50 ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு பொருத்­த­மான புது வடிவம் கொடுக்கும் வகையில் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் 13 இடங்­களை வகிக்கும் அணி­களைக் கொண்டு புதிய லீக் போட்­டி­களை நடத்த பேரவை திட்­ட­மிட்­டுள்­ளது. இந்தப் புதிய லீக் போட்­டியில் டெஸ்ட் விளை­யாடும் பத்து நாடுகள், சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் இணை உறுப்பு நாடு­க­ளான ஆப்­கா­னிஸ்தான், அயர்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் மற்­று­மொரு இணை உறுப்பு நாடு இந…

  23. மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…

  24. 2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார். இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும். ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் 1/9 Light on ஒரு நாள் பந்து வீச்சில்…

  25. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக் கலை கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தமிழர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இவர்கள் சிலம்பக் கலையை கற்பது ஏன்? என்ன சொல்கிறார்கள்?

    • 0 replies
    • 705 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.