விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளைாயடியுள்ளார். ஸ்மித் 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1560 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 61 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதேவேளை 33 இருபதுக்கு-20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17298
-
- 0 replies
- 314 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து: டைட்டிலை நெருங்குகிறது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி 2016-17 சீசனின் டைட்டிலை கைப்பற்ற நெருங்கி வந்துள்ளது. தற்போது 84 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி 20 கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான பிரமீயர் லீக் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 ஆட்டங்களில் எந்த…
-
- 0 replies
- 384 views
-
-
கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், திடீர் என்று சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நாட்டிற்கு வர மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தற்பொழுது இலங்கை கிரிக்கெட்டில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்க – விளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், தற்பொழுது கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளமையானது இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதைய…
-
- 2 replies
- 526 views
-
-
வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார். ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். அதன்படி இன்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர். இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 m உயரம்வர…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நி…
-
- 0 replies
- 394 views
-
-
அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள் பிராட், ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது; ஆஸி. 3-1 என்று வெல்லும்: ஸ்டீவ் வாஹ் கருத்து இங்கிலாந்தால் ஆஷஸை வெல்ல முடியாது என்கிறார் ஸ்டீவ் வாஹ். - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது: பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது எ…
-
- 110 replies
- 6.4k views
-
-
இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா தனஞ்ஜெயா டி சில்வா - PTI இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூட…
-
- 0 replies
- 433 views
-
-
`18 ஆண்டுகள் ஆகிவிட்டன'- 2019 க்குப் பிறகு ஓய்வை அறிவிக்கிறார் யுவராஜ் சிங் ``2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன்'' என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 2011ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது பெற்று அசத்திய இவர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுஇருக்கிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் அவரது ஹோம்டவுன் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்து இந்திய…
-
- 0 replies
- 429 views
-
-
சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ? இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோண்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இது இம்மா…
-
- 7 replies
- 791 views
-
-
பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER படக்குறிப்பு, “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.” - இது தான் தனது தாரக மந்திரம் என்கிறார் பவானி தேவி. 2 மணி நேரங்களுக்கு முன்னர் “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்” தான் சோர்வடையும் போதெல்லாம் இந்த சொற்களை உச்சரித்து உற்சாகமடைவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். வாள்வீச்சு விளையாட்டில் இந்தியாவின் பெயரை, பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவர் தற்போத…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
Swiss Jura தேசிய மாநில Ice Hockey கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் 9-17. Feb. Canada Bantiam Granby யில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey U 14 பிரிவு போட்டியில் Team Swiss அணி பந்து காப்பாளராக விளையாடியுள்ளார். இதில் Swiss team champions கிண்ணத்தையும் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்று அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார். அஸ்வின் team Swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அஸ்வின் Swiss இல் முன்னணி கழகங்களின் ஒன்றான EHC Bienne (LNA) mini top வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். …
-
- 6 replies
- 591 views
-
-
ஸ்டோக்ஸ், ரூட், பட்லர் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து லார்ட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆடம் லித், உட் (இங்கிலாந்து), மாட் ஹென்றி (நியூசிலாந்து) அறிமுக வாய்ப்பு பெற்றனர். குக் ஏமாற்றம்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், ஆடம் லித் துவக்கம் கொடுத்தனர். நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தீ, பவுல்ட், ஹென்றி இணைந்த…
-
- 24 replies
- 966 views
-
-
விம்பிள்டன் வின்னர் ‘யார்’ லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர். லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில…
-
- 28 replies
- 4.5k views
-
-
Published By: RAJEEBAN 16 MAY, 2024 | 04:35 PM 18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம்…
-
- 0 replies
- 667 views
- 1 follower
-
-
நாட்வெஸ்ட் தொடருக்கு வரவேற்பு இல்லை... ஐ.பி.எல். பாணியில் இங்கிலாந்தில் டி20 தொடர் ! ஐ.பி.எல். போல இங்கிலாந்தில் 8 நகரங்களை மையமாக வைத்து புதிய டி 20 கிரிக்கெட் தொடரை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போல வேறு எந்த டி20 தொடரும் உலகம் முழுவதும் பிரபலமாகவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடர், தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் டி20 தொடரையெல்லாம் விட, ஐ.பி.எல். தொடருக்குதான் வரவேற்பு அதிகம். எனவே ஐ.பி.எல். தொடரை போல நகரங்களை மையமாக கொண்டு ஒரு டி20 தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ், ஓவல், பிரிம்மிங்ஹாம், லீட்ஸ், நாட்டிங்ஹாம…
-
- 0 replies
- 209 views
-
-
பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் ஆனார்! கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் வீடியோகிராபரான பெட்ரோ லஸ்லா என்பவரால் ஒசமாக அகமது என்ற அகதி காலை இடறி கீழே விழ வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த பெண் நிருபரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிருபர் பெட்ரோ லஸ்லாவை அவர் வேலை பார்த்து வந்த நிறுவனமும் பணியை விட்டு நீக்கியது. பெண் நிருபரால் தாக்கப்பட்ட சிரிய அகதி ஒசமா அப்துல் சிரிய நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து அணிகளுக்கு…
-
- 4 replies
- 445 views
-
-
செய்தித் துளிகள் - கருத்து தெரிவிக்க மறுத்த கங்குலி கங்குலி. | கோப்புப் படம். துருக்கியின் அக்ரி நகரில் நடைபெற்று வரும் அக்ரி கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா வின் சாகேத் மைனேனி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முதல் சுற்றில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் மதிஜா பெகோட்டிக்கை தோற் கடித்தார். ------------------------------------------------- சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் (பிஃபா) முன்னாள் தலை வரான ஜேக் வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச விளையாட்டு நெறிமுறை தீர்ப்பாயம். வார்னர் இனிமேல் கால்பந்து தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபட முடியாது. ------------------------------------------------- பிசிசிஐயின் தலைவராக வரவுள்ள சஷ…
-
- 0 replies
- 312 views
-
-
Afghanistan v West Indies - ICC Cricket World Cup 2019 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய குல்பதின், தனது தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற்றுத்தர முடியாமல் தமது அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ஏமாற்றமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அனைத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்தது. மேலும், குல்பதின் நயிப்புக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆஸ்கர் ஆஃப்கானை அனைத்து மூன்று தரப்பு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையில் 9 போட்டிகளில் விளையாடிய …
-
- 0 replies
- 437 views
-
-
இலங்கையில் உருவாகும் ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன். சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல்.
-
- 2 replies
- 1.1k views
-
-
மெஸ்ஸியின் சாதனை கோலுடன் பார்சிலோனா வெற்றி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்றன. குறித்த போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் ஸ்லாவியா ப்ரகுவே லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல் மூலம் செக் குடியரசின் ஸ்லாவியா ப்ரகுவே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கோல் பெற்றதன் மூலம் 15 சம்பியன்ஸ் லீக்கில் பருவங்களில் தொடர்ச்சியாக கோல் பெற்ற வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதன்போது மன்செஸ்டர் யுனைடட் முன்னாள் வீரர் …
-
- 0 replies
- 463 views
-
-
'கே ' நடுவருக்கு லைசென்ஸ் ரத்து : துருக்கு கால்பந்து சங்கத்துக்கு அபராதம் தன்னை ஹோமோசெக்சுவல் என்று அறிவித்த, கால்பந்து நடுவரின் லைசென்சை ரத்து செய்த துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 5.32 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துருக்கி கால்பந்து நடுவரான ஹலிப் இப்ராஹிம் கடந்த 2009ஆம் ஆண்டு தன்னை' ஹோமோசெக்சுவல்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி கால்பந்து சங்கம் அவரது நடுவர் லைசென்சை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஹலில் இப்ராஹிம் இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் துருக்கி லிரா தர வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.நீதிமன்ற விவாதத்தின் போது, துருக்கியில்…
-
- 0 replies
- 456 views
-
-
-
- 3 replies
- 909 views
-
-
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பிரோட்டுக்கு அபராதம் January 07, 2016 தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவார்ட் பிரோட்டுக்கு போட்டிச் சம்பளத்தில் 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சக வீரர் பேஸ்ட்டோ, எதிரணி வீரர் பவுமாவின் பிடியெடுப்பை தவறவிட்டதால் பிரோட் ஆடுகளத்தை காலால் உதைத்து சேதப்படுத்தினார். இது குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக்கிடம் போட்டி நடுவர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த பிரோட் ‘ …
-
- 0 replies
- 489 views
-
-
விராட் கோலி சதத்தை விமர்சித்த மேக்ஸ்வெல்: ஸ்மித், பிஞ்ச் ஆதரிக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் சதமெடுப்பதற்காக தனது அதிரடி வழியிலிருந்து திசைதிரும்புகிறார் என்று ஆஸ்திரேலிய வீர்ர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல் கருத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஏரோன் பிஞ்ச்சும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மேக்ஸ்வெல், ‘இந்திய பேட்ஸ்மென்கள் சதம் என்ற மைல்கல்லை மட்டுமே குறிவைத்து ஆடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். சிலர் மைல்கல்லை நோக்கி ஆடுகின்றனர், சிலர் அப்படி ஆடுவதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்…
-
- 0 replies
- 471 views
-
-
இலகு வெற்றியை பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி By A.Pradhap இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் 3 கிரிக்கெட் தொடரில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. செட்டிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்ட…
-
- 0 replies
- 646 views
-