விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7843 topics in this forum
-
கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…
-
- 4 replies
- 558 views
-
-
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…
-
- 2 replies
- 520 views
-
-
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்தும் வாய்ப்பில்லை * ஐ.சி.சி. கூறுகிறது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையும் குறைந்த நாட்களில் நடத்த வாய்ப்பில்லை என்பதை ஐ.சி.சி. தலைமை நிர்வாகி விளக்கியுள்ளார். மேற்கிந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணப் போட்டி நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டு போவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடனும் உண்டு. அடுத்த உலகக் கிண்ணப் போட்டியையாவது குறைந்த காலத்தில் நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியதாவது; அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை (2011 ஆம் ஆண்…
-
- 0 replies
- 834 views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்…
-
- 0 replies
- 468 views
-
-
கனடா- ரொறொன்ரோவில் இடம்பெற இருக்கும் Pan Am மற்றும் Parapan American விளையாட்டுகளிற்கான பதக்கங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டன. எதிர்வரும் கோடைகாலத்தில் நடக்கும் இந்த விளையாட்டுகளில் 4,000ற்கும் மேற்பட்ட பதக்கங்கள் கையளிக்கப்படும். விளையாட்டு வீரர்கள் தாங்கள் என்னத்திற்காக போட்டியிடுகின்றார்கள் என்ற சிறந்த சிந்தனையை பெறக்கூடியதாக இருக்கும். அதிகார பூர்வமான மெட்டல் விநியோகஸ்தர்கள் பறிக் கோல்ட் நிறுவனத்தினர் ஆவர். கனடிய அரச கூட்டுத்தாபனமான றோயல் கனடியன் மின்ட் பதக்கங்களை வடிமைக்கும். Pan Am விளையாட்டுக்கள் எதிர்வரும் யூலை மாதம் 10-26 வரை நடைபெறும். Parapan American ஆகஸ்ட் மாதம் 7-14 வரை இடம்பெற உள்ளது. 41-நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 6,600 விளையாட்டு வீரர்கள் போட்டிகளி…
-
- 0 replies
- 407 views
-
-
முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி [09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது; "முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது…
-
- 9 replies
- 2.1k views
-
-
சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 9 replies
- 638 views
-
-
வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடை நீக்கம் மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வான்கடே மைதானத்திற்குள் நுழைய விதிக்கப் பட்டிருந்த 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று விலக்கியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை அங்கிருந்த காவலாளிகள் தடுத்தனர். இதனால், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதுகாவலர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் ஷாருக்கான். இதுகுறித்து ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு…
-
- 1 reply
- 320 views
-
-
சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 860 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்கக்கார 851 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கை விக்கெட் காப்பாளர் சந்திமால் (646 புள்ளிகள்) 23ஆவது இடத்திலும், திரிமான்ன 4 இடங்கள் முன்னேறி 78ஆவது இடத்தையும் பிடித்த…
-
- 0 replies
- 229 views
-
-
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/article.php?aid=52843
-
- 0 replies
- 310 views
-
-
2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன. மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. Rank Team Points 1 Australia 127 2 India 115 3 South Africa 110 4 New Zealand 109 5 Sri Lanka 103 6 England 100 7 Bangladesh 96 8 Pakistan 90 9 West Indies 88 10 Ireland 49 11 Zimbabwe 45 12 Afghanistan 41 http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017
-
- 1 reply
- 381 views
-
-
22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…
-
- 0 replies
- 310 views
-
-
எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தாதது ஏன்? இந்தியர்கள் ஏன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை. நமது காலத்தில் இதுதான் விளங்காத மர்மமாக இருக்கிறது. எப்போதாவது இந்திய அணி வெற்றி பெறுவதை நான் குறிப்பிடவில்லை. நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதைப் பற்றி கூறுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா கோலோச்சியது. அதுபோல் இந்திய அணியால் முடியாதது ஏன்?. உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் உள்ள நாடுதான் இந்தியா. அதனால் பணத்துக்குப் பிரச்சினையில்லை. பண விஷயத்தில் நாம் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறோம். மற்ற அணிகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் லாபகரமானதாக உள்ளன. ஆனால், இந்தியாவின் செல்வாக்கு …
-
- 0 replies
- 258 views
-
-
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் …
-
- 2 replies
- 875 views
-
-
ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்! இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார் ரிசாப் பன்ட். அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள். நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந…
-
- 0 replies
- 587 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 304 views
-
-
ரியோ ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் வியாழனன்று ஆரம்பம் ரியோ டி ஜெனெய்ரோவில் 2016 ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர், ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில் முன்றலில் வியாழனன்று வைபவரீதியாக ஏற்றப்படவுள்ளது. பண்டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பிராதயங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வைபவத்தின்போது ஹேரா என்ற பெண் கடவுளரின் பாத்திரத்தை ஏற்கவுள்ள கிரேக்க நடிகை கெத்தரினா லேஹூ தீபச் சுடரை ஏற்றவுள்ளார். இந்தச் சுடர் சூரிய கதிர்களிலிருந்து பரவளைய ஆடியைக் கொண்டு இயற்கையாக பற…
-
- 1 reply
- 566 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 544 views
-
-
இங்கிலாந்தின் தலைவியாக ஹீதர் நைட் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது. 2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55…
-
- 0 replies
- 439 views
-
-
இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்போபஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …
-
- 0 replies
- 406 views
-
-
ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் காலிறுதிப் போட்டியில் சிந்து | படம்: ஏஎப்பி உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக…
-
- 0 replies
- 355 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங் களில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிபெற்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018-ம் ஆண்டு நடை பெற உள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இதில் ஆம்ஸ் டர்டாம் நகரில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பிரான்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. பிரான்ஸ் அணிக்காக முன்னணி வீரர் பால் போக்பா கோல் அடித் தார். ‘ஹெச்’ பிரிவில் நடந்த போட் டியில் பெல்ஜியம் அணி 6-0 என்ற கோல்கணக்கில் கிப்ரா…
-
- 0 replies
- 195 views
-
-
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …
-
- 0 replies
- 398 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் - இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இ…
-
- 0 replies
- 322 views
-