விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
திமுத் கருணாரத்ன கைது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரல்லை கிங்ஸி ஹோர்டன் ஒழுங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவை இன்று பொலிஸில் தடுத்து வைத்திருந்து நாளை (01) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர் செலுத்திய மோட்டார் கார் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதியதனால் முச்சக்கர வண்டியின் சாரதி சிறுகாயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
-
- 0 replies
- 451 views
-
-
20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அ…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது. சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் வி…
-
- 0 replies
- 384 views
-
-
முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் July 14, 2019 இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன. கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் …
-
- 0 replies
- 288 views
-
-
நியூஸி. வெற்றி!ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது! சனி, 23 பிப்ரவரி 2008( 14:44 IST ) கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசீலாந்து அணி வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3- 1 என்று கைப்பற்றியது. பூவா தலையா வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பந்துகள் மெதுவாக பேட்டிற்கு வரும் ஆட்டக் களத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். பின் கள வீரர்களான லூக் ரைட் மற்றும் மஸ்கேரந்காஸ் கடைசியில் அடித்து ஆடியதால் மரியாதைக்குறிய 242 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை இங்கிலாந்து எட்டியது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் மில்ஸ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்…
-
- 0 replies
- 662 views
-
-
டோக்கியோ விமான நிலையத்தில் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்ட ரிவர்பிளேட் ரசிகர்கள் (வீடியோ) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர்பிளேட் அணி மோதியது. பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரிவர்பிளேட் ரசிகர்கள் யோகஹாமா நகருக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததையடுத்து நேற்று பார்சிலோனா அணி டோக்கியோவில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டது. இதற்கான டோக்கியோ விமான நிலையத்துக்கு பார்சிலோனா அணி வீரர்கள் நேற்று இரவு வந்தனர். அப்போது விமான நிலையத்தில…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். …
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி திசர பெரேரா இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பெரேரா கஜாபா படையணியில் ஒரு மேஜர் பதவியில் பணியாற்றுவார். முன்னாள் தேசிய கிரிக்கெட் கப்டன் தினேஷ் சந்திமலும் இந்த ஆண்டு இலங்கை இராணுவ தன்னார்வப் தொண்டர் படையணியில் இணைந்து இராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/72086
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்திய அணியால் அப்ரிடி நடந்த கொடுமை! பாகிஸ்தான் டி20 அணி தலைவர் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாம். அவரை பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்ரிடியின் செயல்பாடுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியததிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அது ரசிக்கவில்லையாம். மேலும் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், எனது அணி வீரர்களுக்கும் பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிக அன்பு கிடைப்பதாக அப்ரிடி கூறியதையும் பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம்…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் விளையாடும் மிகவும் உயரமான தமிழ் இளைஞி தர்ஷினி சிவலிங்கம். 02 THARJINI WITH MANY HIGHS IN HER LIFE Add comments [size=4]I can’t travel in busses; my head hits the roof of the bus:[/size] [size=4]I can’t walk in the streets, boys make jokes but I won life because of my height:[/size] Tharjini who rules the netball court just like Murali who ruled the cricket grounds: Like Murali, Tharjini Sivalingam too is a Tamil. Murali used to take wickets after wickets. Today, Tharjini is winning goal after goal. Tharjini who is six feet ten inches is a threat to her opposition team and helps to keep Sri …
-
- 3 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/இலங்கை-தேசிய-கூடைப்பந்தா/
-
- 1 reply
- 334 views
-
-
சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது) 7 பிப்ரவரி 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. 2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. இந்த டி20…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார். | படம்: கெட்டி இமேஜஸ். ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் …
-
- 0 replies
- 366 views
-
-
சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்…
-
- 0 replies
- 359 views
-
-
போல்வால்ட்டில் பிரேசில் வீரர் சாதனை போல்வால்ட் பந்தயத்தில் சாதனை படைத்த பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா. படம்: ராய்ட்டர்ஸ். ஆடவருக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாகவும் இருந்து வந்தது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் …
-
- 0 replies
- 315 views
-
-
யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…
-
- 5 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 637 views
-
-
உலக சாதனை படைத்தார் பென்தெக்கி சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, பெல்ஜியம் அணியின் கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே, இச்சாதனையை அவர் படைத்தார். உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியாக அமைந்த இப்போட்டியில், போட்டி ஆரம்பித்து 8.1 செக்கன்களில், தனது கோலை, பென்தெக்கி பெற்றுக் கொண்டார். இது, இதற்கு முன்னர் காணப்பட்ட சாதனையான 8.3 செக்கன்களை முறிடித்தது. அந்தச் சாதனையை, 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் பொட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக சான் மரினோவின் டேவி…
-
- 1 reply
- 324 views
-
-
சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங்கைவிட கோஹ்லி பெஸ்ட். இதோ ஆதாரம்..! #WhyKohliIsBest? #HBDKohli கோஹ்லி இதுவரை 168 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அவரோடு ஒப்பிடும் போது சச்சின், ஜெயசூர்யா, பாண்டிங் ஆகியோர் முதல் 168 இன்னிங்ஸ் வரை எந்தளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார்கள் என்பதை அலசும் கட்டுரை இது. தலைமுறைகள் கடந்த ஒரு வீரரை, இன்னொரு வீரரின் ஆட்டத்தோடு ஒப்பிடுவது சரியில்ல. பிட்ச், வீரர்கள், காலநிலை, எதிரணியின் நிலை, தான் சார்ந்தஅணியின் சூழ்நிலை, பயம், பதற்றம், மேட்சின் நிலை, விக்கெட் வீழ்ச்சி, எதிரே நிற்கும் வீரர், ஆகியவற்றை பொருத்து ஒரு வீரரின் ஆட்டமுறை வேறுபடும்.தவிர, கிரிக்கெட்டில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஆட்டபாணியில் பெரியளவிலான மாற்றங்கள் நடந்து வரு…
-
- 1 reply
- 794 views
-
-
மெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்திய…
-
- 0 replies
- 368 views
-
-
கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டி…
-
- 0 replies
- 311 views
-
-
என் துணிகளை விற்று தோனியை வாங்குவேன், ஷாருக் கான் ஆவல் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக தோனியை வாங்க என் உடைகளைகூட விற்கத் தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பொழுதுபோக்கே முதல் குறிக்கோள். இப்பொழுதுபோக்கில் தோனியை ரசிக்காதவர்கள் மிகக் குறைவே! இதில் ஷாருக் கானும் விதிவிலக்கல்ல. காரணம் தனது சமீபத்திய பேட்டியில் தோனியை தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டி அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில்,'தோனி போன்ற ஒரு சிறந்த வீரரை எங்கள் அணிக்காக வாங்குவதற்கு, எனது பைஜாமா உடைகளைக்கூட நான் விற்க தயார். ஆனால் அவர்…
-
- 1 reply
- 626 views
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
இலங்கையை சிம்பாப்வே வீழ்த்தியதற்கான காரணத்தை கூறுகிறார் அஷ்வின் சிம்பாப்வே அணி இலங்கையை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறியதாவது: சிம்பாப்வே அணி இலங்கையை வீழ்த்தியதைப் பற்றிக் கூற வேண்டுமெனில், யார் வேண்டுமானாலும் வெல்லலாம், யார் வேண்டுமானாலும் தோற்கலாம் இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்றுகிறது. நாளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெறலாம். அப்படித்தான் ஒரு விளையாட்டு செல்ல வேண்டும். இது விளையாட்டுக்கு ஆரோக்கி…
-
- 0 replies
- 325 views
-