விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
ஐ.சி.சி. யின் டெஸ்ட் அணித் தலைவராக மெத்தியூஸ் நடப்பாண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி.யின் தலைமையகத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ளே இதனை தெரிவித்தார். அந்தவகையில் டெஸ்ட் அணித் தலைவராக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ{ம் ஒருநாள் அணித் தலைவராக இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித் தலைவர் உட்பட குமார் சங்கக்கார, ரங்கன ஹேரத் ஆகிய மூவர் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன் ஒருநாள் அணியில் அஜந்த மெண்டிஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 7 முறை ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியில…
-
- 0 replies
- 432 views
-
-
பேர்த்தில் கிரிக்கட்டில் கலக்கும் நம்மவர்கள்! (படங்கள்) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் ASSeTTS என்னும் அரச சார்பற்ற நிறுவனத்துக்காக கிரிகட் விளையாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தமிழ் இளைஞர்களின் முயற்சியால் முதல் முறையாக கிரிகட் அணி- ASSeTTS CRICKET CLUB- – உருவாக்கப்பட்டுள்ளது. இக்கிரிக்கட் அணியின் நிருவுனராக கபில் தேவ் இருந்ததோடு , அவரே தற்போதைய அணியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் தற்போது LAST MAN STAND என்னும் சர்வதேச ரீதியிலான சுற்று போட்டி ஒன்றில் விளையாடி வருகிறார்கள். தற்போது மேற்கு…
-
- 3 replies
- 706 views
-
-
சர்வதேச கால்பந்து தரவரிசை பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தில் [20 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதலிடத்திலுள்ளது. கோபா- அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி 6 மாதத்துக்குப் பின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜன்ரீனா 2 ஆம் இடத்திலும் இத்தாலி 3 ஆம் இடத்திலுமுள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரை மாலைதீவு அணி முதலிடத்திலுள்ளது. இதற்கடுத்ததாக இலங்கை அணி உள்ளது. இந்த உலகத் தரவரிசையில் ஓரிடம் பின்னடைவு பெற்று 162 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய…
-
- 0 replies
- 938 views
-
-
ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி! சரித்திர டெஸ்ட் தொடரை வென்ற கையோடு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, இத்தொடரை கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், சமநிலைப் பெற்றிருந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில், இன்றைய தினம் மெல்பேர்ன் மைதானத்தில் இரு அணிகளும் களம் கண்டன. அவுஸ்ரேலியா மைதானங்களை பொறுத்தவரை, வெற்றியை தீர்மானிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நாணய சுழற்சியே. ஆகையால் இப்போட்டியில் முதல…
-
- 0 replies
- 798 views
-
-
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை 12 MAR, 2024 | 11:47 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று …
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
60 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய அணி: சுவையான தகவல்கள் இலங்கை அணியை அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்த இந்திய அணி. | படம்: ஏ.எஃப்.பி. உலகக் கோப்பை 2015-ன் போது எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் (அரையிறுதி நீங்கலாக) இந்திய அணியினர் வீழ்த்தியது போல் தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியை 6 முறை ஆல் அவுட் செய்து 60 விக்கெட்டுகளை இந்திய அணியினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றி 22 ஆண்டுகளூக்குப் பிறகு இலங்கை மண்ணில் சாதனை புரிந்துள்ளது, இந்த தொடர் சார்ந்த முக்கிய புள்ளி விவரங்கள் வருமாறு: 1988-89 நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா அந…
-
- 0 replies
- 321 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் பந்துகள் போதிய வெளிச்சமில்லாதபோதும் போட்டிகளைத் தொடரும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளில் பச்சை கலந்த மஞ்சள் நிறப் பந்தை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (17) அபுதாபியில் முடிவடைந்த இங்கிலாந்து, பாகிஸ்தான அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது 25 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்டிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மேற்படி மைதானத்தில் மின்னொளி வசதிகள் இருந்தபோதும் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லையென தனதுஆதங்கத்தைத் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்ட்டீர் குக் தெரிவித்தையடுத்தே மேற்படி கருத்துக்…
-
- 0 replies
- 241 views
-
-
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் கஹ் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188848/
-
- 0 replies
- 371 views
-
-
தோனி, கில்கிறிஸ்ரின் கையுறைகள் புதிய சர்ச்சை [01 - March - 2008] அவுஸ்திரேலிய தொடரில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கப்டன் தோனி மற்றும் கில்கிறிஸ்ரின் `கிளவுஸ்' தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. முக்கோணத் தொடரின் 10 ஆவது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக `டைவ்' அடித்து `கட்ச்' பிடித்தார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் அவுஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, தோனியின் `கிளவுஸ்' பெரிதாக உள்ளதாக புகார் கூறினார். பொதுவாக விக்கெட் கீப்பரின் `கிளவுஸில்' கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் `கிளவுஸில்' இடைவெளி இல்லாமல…
-
- 0 replies
- 890 views
-
-
ட்வைன் பிராவோ கவலை அதிகபடியான அரசியல் அழுத்தங்களே, மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் விளையாட்டுத் துறையை சீரழிப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் வீரர் ட்வைன் ப்ராவோ இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு மேற்கிந்திய …
-
- 0 replies
- 719 views
-
-
அந்த்ரே ரஸல் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு…
-
- 0 replies
- 379 views
-
-
தலைசிறந்த கேப்டனை இழந்தது நியூசி : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மெக்குல்லம்! முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர். 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர். இவரது பேட்டில் பட்ட பந்துகள் புல்லட் ரயில்களின் வேகத்துக்கு நிகரானவை என வர்ணிக்கப்படுபவர் மெக்கல்லம் . அவரை இனிமேல் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடியாது ஆம் இன்று நடைபெற்ற போட்டிதான் அவரது கடைசி போட்டி. முதலில் பெற செய்த நியூஸிலாந்தின் துவக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம். பட்டாசை வெடிக்க துவங்கினார் 27 பந்துகளில் 47 ரன்களை குவித்து தெறி மாஸ் காட்டினார். அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே கா…
-
- 0 replies
- 724 views
-
-
2016 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? ஆசியா உட்பட உலக நாடுகளிடையே போட்டி [07 - June - 2008] 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. சீனாவில் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டில் (824) நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டி, 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டியை நடத்துவதற்கு உலக நாடுகள் பல போட்டியிட்டு வருகின்றன. இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிடையில்தான் கடும் போட்டி இருக்குமெனத் தெரிகிறது. இதற்கிடையே போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள், தங்களது சாதகமான அம்சங்களைத் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத…
-
- 1 reply
- 1.3k views
-
-
நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார். நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/72572
-
- 0 replies
- 362 views
-
-
பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை! கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப…
-
- 0 replies
- 555 views
-
-
2.2 ஓவர்களில் ஓட்டமெதுவுமின்றி 6 விக்கெட்களை வீழ்த்திய வீரர் 2016-04-12 09:55:25 இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு சாதனைகளையும் மைல்கல்களையும் அண்மைக்காலமாக நிலைநாட்டி வருகின்றனர். ஊட்டி ஜே எஸ் எஸ் இன்டர்நெஷனல் ஸ்கூலை சேர்ந்த சன்க்ருத் ஸ்ரீராம் என்ற மாணவன் 2014 ஆம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் 486 ஓட்டங்களைக் குவித்து சாதனை புரிந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மும்பை கே சி காந்தி பாடசாலை மாணவனான பிரனவ் தனவாடே ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைப் பெற்று சாதனை நிலைநாட்டினார். இ…
-
- 0 replies
- 405 views
-
-
சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…
-
- 0 replies
- 456 views
-
-
இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும…
-
- 0 replies
- 492 views
-
-
இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது. கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது. 2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம…
-
-
- 41 replies
- 1.8k views
- 1 follower
-
-
நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொல…
-
- 16 replies
- 1.1k views
-
-
மழையால் இந்தியா-மே.இ.தீவுகள் டெஸ்ட் டிரா: நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை டிரா செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி. | படம்: ஏ.பி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனதை அடுத்து இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றாலும் டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் நம்பர் 1 நிலைக்கு முதன் முறையாக முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 2-2 என்று டிரா செய்த பாகிஸ்தான் கடந்த வாரம் 2-ம் நிலையில் இருந்தது, இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் பாகிஸ்தான் அதிலேயே நீடித்திருக்கும், ஆனால் மழை இந்தியாவின் முதல் நிலையைத் தக்கவைப்பில் புகுந்து விளையாடி விட்டது. மே.இ.தீவுகளுக்கு எதிரா…
-
- 0 replies
- 230 views
-
-
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார். ஹோபர்ட்: கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வ…
-
- 0 replies
- 312 views
-
-
விளையாட்டாய் சில கதைகள்: செஸ் பாதி பாக்ஸிங் பாதி செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம். வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் …
-
- 0 replies
- 551 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 ஆவது தடைவையாகவும் பெலென்டோ விருதினை சுவீகரி்த்துக் கொண்டார் போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவ்வாண்டுக்கான பெலென்டோ விருதுக்கு பாத்திரமானார். இவர் இந்த விருதினை வென்றுள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த பெலென்டோ விருது வழங்கும் விழா ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நேற்று (12) நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பலரது எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் வருடத்தின் திறமையான கால்பந்தாட்ட வீரருக்கான விருதினை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்று…
-
- 1 reply
- 597 views
-
-
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…
-
- 1 reply
- 983 views
-