Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம் இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய அணித் தலைவர் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில…

    • 3 replies
    • 1.2k views
  2. சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…

  3. ஆண்கள் ஒற்றையர் விம்பில்டன் ரெனிஸ் சம்பியன்சிப் 77 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரிட்டனிடம் வந்துள்ளது. கடைசியாக 1936 இல் Fred Perry என்பவரால் இந்த தலைப்பு வெல்லப்பட்டிருந்தது. இன்று வெம்பில்டனில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் முதல் தர வீரரான Novak Djokovic ஐ 6-4 7-5 6-4 என்ற செற்களில் தோற்கடித்து ஆன்டி மொரே (Andy Murray) (இவர் ஒரு ஸ்கொட்லாண்ட் வீரர் ஆவார். ஸ்கொட்லாண்ட் 2014 இல் பிரிட்டனில் இருந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கான வாக்களிப்பை நடத்த உள்ளது) 77 ஆண்டுகள் நீண்ட காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டு வந்து இந்த வெற்றியை.. பெற்றுக் கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள் ஆன்டி மொரே. http://www.bbc.co.uk/sport/0/tennis/23217393 https://www.youtube.com/watch?v=…

    • 1 reply
    • 859 views
  4. தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…

  5. 44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். …

  6. இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்…

  7. கிரிக்கெட் வீரர்களை காவிமயமாக்கிய உத்திரபிரதேச யோகி அரசு இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி கிரிக்கெட் வீரர்களுக்கு காவி துண்டு அணிவித்து, யோகி ஆதித்யநாத் அரசு வரவேற்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டீ20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கொரு முறை வெற்றி பெற்றதால் தொடர் சம நிலையில் உள்ளது. இதனால் 3 வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 2 ஒரு நாள் தொடர் முடிந்து 3-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கான்பூர் மைதானத்துக்கு வந்தடைந்தது. அங்கு வந்த வீரர்கள் தீபாவளி முடிந்து வந்ததால், அவர்க…

  8. 4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு Image courtesy - AFP ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார். ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும் ஐரோப்பிய விளையாட்டு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் சங்கங்களினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற இவ்விருது வழங்கும் விழா நேற்று (24) பார்சிலோனாவில் நடைபெற்றது. 2016ஆம் மற்றும் 2017ஆம் பருவகாலத்தில் லாலிகா உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய கால்பந்து போட…

  9. டெல்லியில் இனிமேல் போட்டி நடத்துகையில் காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும்: பி.சி.சி.ஐ இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித…

  10. 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…

  11. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம் அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. ஹராரே: வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது…

  12. தலைகுனிவுதான் அதற்காக ஓடி ஒளியவா முடியும்?- இங்கிலாந்து சரிவு குறித்து கிரஹாம் தோர்ப் கிரஹாம் தோர்ப். - படம். | கெட்டி இமேஜஸ். ஒரு அணி ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென ஒரு அருமையான பந்து வீச்சு அல்லது பொறுப்பற்ற பேட்டிங் ஆகியவற்றினால் சிறுமை ஏற்படும் என்பது கிரிக்கெட் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் தவிர்க்க முடியாததே என்பதாக சூசகமாகத் தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப், 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணிக்காக வாதாடுகிறார். ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் 17 பந்துகள் வீசிய பிறகு மழை காரணமாக தொடர முடியாமல் கைவிடப்பட்டு…

  13. பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற…

  14. ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம் இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் நேற்று (12) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான 10, 000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆகியோர் வெற்றிகளைப் பதிவு செய்தனர். இதில், ஆண்களுக்கான கோல…

  15. பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் லா லிகா உதைப்பந்தாட்ட போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. ஸ்பானிஷ் லீக் தொடரில், "கிளஸ்சிக்' மோதல் என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே, பிரேசிலைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், ரியல் மெட்ரிட் பின்கள வீரர்களை ஏமாற்றி அழகாக கோல் அடித்தார். ஆனால், ஜெரார்டு பீக்கே எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபட ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. இதை எந்தத் தவறும் செய்யாமல் கோலாக மாற்றினார் ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டிய…

  16. முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…

  17. பிரேசில் ‘பார்முலா–1’: ராஸ்பர்க் சாம்பியன் நவம்பர் 10, 2014 , சாவ் பாலோ: பிரேசிலில் நடந்த ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயத்தில், ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரேசிலில் உள்ள சாவ் பாலோ நகரில், நடப்பு ஆண்டின் 18வது சுற்று ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 32 நிமிடம், 58.710 வினாடிகளில் கடந்த ‘மெர்சிடஸ்’ அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் வென்ற 5வது பட்டம். பந்தய துாரத்தை கடக்க, ராஸ்பர்க்கை விட 1.4 வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்ட ‘மெர்சிடஸ்’ அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ…

  18. 1000 ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து இங்­கி­லாந்து அணி 1000ஆவது டெஸ்டில் கள­மி­றங்கக் காத்­தி­ருக்­கின்­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் டெஸ்டில் இச் சாத­னையை எட்­ட­வுள்­ளது. இங்­கி­லாந்து கிரிக்கெட் அணிக்கு 1877ஆம் ஆண்டு டெஸ்ட் அந்­தஸ்து கிடைத்­தது. அதே ஆண்டில் முதல் டெஸ்டில் கள­மி­றங்­கி­யது இங்­கி­லாந்து. அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இப்­போட்டி மெல்­போர்னில் நடை­பெற்­றது. இது­வரை 999 டெஸ்ட் போட் டிகளில் இங்கிலாந்து பங்­கேற்­றுள்­ளது. இதில் 357 போட்­டி­களில் வெற் றியும் (35.73 சத­வீதம்) 297 போட்­டி­களில் தோல்வியும் கண்ட இங்­கி­லாந்து 345 போட்­டி­களை சம­நி­லையில் முடித்­துள்­ளது. …

  19. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…

  20. டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 …

  21. நடுவரைத் திட்டிய ஷேன்வோர்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன். இவர் தற்போது கவுன்டி போட்டிகளில் ஹாம்ப்ஷையருக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் கென்டர்பரியில், கென்ற் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுத்தார். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த வோர்ன் களத்திலேயே சிறிது நேரம் இருந்தார். பின்னர் `பெவிலியன்' திரும்பும்போது தகாத வார்த்தைகளால் நடுவரை வசை பாடினார். இச்சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இவருக்கு 6 அபராத புள்ளிகளை கிரிக்கெட் சபை விதித்தது. இப்புள்ளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவரது கணக்கிலிருக்க…

    • 0 replies
    • 984 views
  22. 24 NOV, 2023 | 05:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை ப…

  23. நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிப்பது எங்கள் வரம்பில் இல்லை: பிசிசிஐ கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுப்பு Published : 03 Mar 2019 14:43 IST Updated : 03 Mar 2019 14:48 IST துபை பிரதிநிதித்துவப் படம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. …

  24. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆஷஸ் தொடர்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டோன்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஆஷஸ் மற்றும் சர்வதேச ஒருநாள் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எலிஸ் பெரி 78 ஓட்டங்களையும் அலெக்ஸாண்ட்ரா பிளக்வெல் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் நான்காவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இங்கிலாந்து மகளிர் பந்துவீச்சில் கத்தரின் ப்ரன்ட் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலு…

  25. சம்பியன்ஸ் லீக் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகளின் முடிவுகள்! ஐரோப்பிய உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில், நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி இரண்டாவது லெக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ஆரம்பமான காலிறுதி இரண்டாவது லெக்கில், இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முழுமையான முடிவுகளை தற்போது பார்க்கலாம், ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், மென்செஸ்டர் யுனைடெட் அணியும், பார்சிலோனா அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய முதலாவது லெக் போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆகையால் இப்போட்டியில், இரு அணிகளுமே மிகப்பெரிய வெற்றியினை நோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.