Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். கொரோனாவிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

  2. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்போருக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான “playbooks” என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வருகை தரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஜப்பானில் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் சோதிக்கப்படுவார்கள். டோக்கியோவை அடைந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு மற்ற விளையாட்டு அதிகாரிகளுடன் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (‍IOC) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்ட…

  3. 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 188 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்போது, இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். அதன்படி, திமுத் கருணாரத்ன 106 ஓட்டங்களுடன் லஹிரு திரிமான்ன 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 12 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த திமுத்! (adaderana.lk)

    • 0 replies
    • 796 views
  4. டி நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன். இடது கை பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக, நெட் பவுலராக சென்று, அதன்பின் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி முத்திரை படைத்தார். இங்கிலாந்து தொடரின்போது காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அணியில் இணைந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். …

    • 1 reply
    • 930 views
  5. ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெறவிருந்த 142 வது கிரிக்கட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் குறித்த போட்டி இடம்பெறவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. ரோயல் - தோமஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு (adaderana.lk)

    • 0 replies
    • 504 views
  6. இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம்: ஐ.பி.எல். தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள்! இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இதன்படி டெல்லி கெபிடல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஸ்வின், நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இதேபோல றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த அவுஸ்ரேலிய வீரர்களான ஆடம் செம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய வீரரான ஹென்ரிவ் டை த…

  7. இலங்கை ரீ-20 அணியில் இடம் பிடித்த யாழ். மைந்தன் வியாஸ்காந்த்! இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மைந்தன் வியாஸ்காந்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இலங்கை ஜாம்பவான்கள் அணிக்கும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான காட்சி கிரிக்கெட் போட்டி வரும் மே-04ஆம் திகதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த காட்சி போட்டிக்கான இலங்கை ரீ-20 கிரிக்கெட் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்திருந்த எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சர்வதேச வீரர்களுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியதன ;மூலம் அனைவரது கவனத்தையும் விஜயகாந்த் வியா…

  8. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் (adaderana.lk)

    • 0 replies
    • 539 views
  9. ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்­பா­வில் உள்ள அனைத்து முன்­னணி அணி­களும் சேர்ந்து அவர்­க­ளுக்­கென அமை­க்கப்படும் ஒரு லீக் போட்­டி­தான் ஐரோப்­பிய சூப்­பர் லீக். இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் யுனை­டெட், லிவர்­பூல், மான்­செஸ்­டர் சிட்டி, ஆர்­சேனல், டாட்­டன்­ஹாம், செல்சியா ஆகிய குழுக்­களும் ஸ்பெ­யி­…

  10. கோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2 ஆவது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68 ஆவது மற்றும் 72 ஆவது நி…

  11. மாங்குளத்தில் சிறப்புற இடம்பெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி! 8 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பானது, வடக்கு கிழக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்வாங்கி தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரது வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு…

  12. முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். …

  13. (எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…

  14. IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…

  15. ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் – அப்ரீடியின் டுவிட்டர் பதிவினால் சர்ச்சை ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிர…

    • 0 replies
    • 367 views
  16. ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா? செய்திப்பிரிவு ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை. ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வ…

  17. 2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. 2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார். 7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது, டி-20 உலக க…

  18. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;- “இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளத…

  19. இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆவதும் இறுதியானதுமான டி- 20 ஓவர் போட்டி குஜராத், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம் வழங்கப்படாததன் காரணத்தினால் ரோகித் சர்மாவுடன், அணித் தலைவர் விராட் கோலி தொடக்க வீரா…

  20. ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக இந்த கோடையில் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எந்த சர்வதேச ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுப்பட்டுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்களிடம், சர்வதேச ரசிகர்கள் நாட்டிற்கு நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்று கூறினார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன. ஜப்பான் மற்றும் பல நாடுகளில் "சவாலான" கொவிட் -19 நிலைமை, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் …

  21. திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/102169

    • 4 replies
    • 1k views
  22. கோலியும் அனுஷ்காவும் ஆர். அபிலாஷ் இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீ…

  23. டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும். புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைக…

  24. கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டியில் காரைதீவு இளைஞர் தெரிவு! NO COMMENTS ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர். ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.