விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் – அப்ரீடியின் டுவிட்டர் பதிவினால் சர்ச்சை ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிர…
-
- 0 replies
- 368 views
-
-
2021 டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. 2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார். 7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது, டி-20 உலக க…
-
- 0 replies
- 467 views
-
-
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;- “இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளத…
-
- 1 reply
- 652 views
-
-
இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆவதும் இறுதியானதுமான டி- 20 ஓவர் போட்டி குஜராத், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம் வழங்கப்படாததன் காரணத்தினால் ரோகித் சர்மாவுடன், அணித் தலைவர் விராட் கோலி தொடக்க வீரா…
-
- 3 replies
- 865 views
-
-
ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த கவலைகள் காரணமாக இந்த கோடையில் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எந்த சர்வதேச ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுப்பட்டுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்களிடம், சர்வதேச ரசிகர்கள் நாட்டிற்கு நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவது மிகவும் சாத்தியமில்லை என்று கூறினார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்டிகள் ஜூலை 23 ஆம் திகதியும் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன. ஜப்பான் மற்றும் பல நாடுகளில் "சவாலான" கொவிட் -19 நிலைமை, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் …
-
- 0 replies
- 467 views
-
-
திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/102169
-
- 4 replies
- 1k views
-
-
கோலியும் அனுஷ்காவும் ஆர். அபிலாஷ் இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீ…
-
- 2 replies
- 1.2k views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும். புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைக…
-
- 0 replies
- 665 views
-
-
கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டியில் காரைதீவு இளைஞர் தெரிவு! NO COMMENTS ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர். ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உ…
-
- 1 reply
- 499 views
-
-
2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ. 2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும். உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்த…
-
- 13 replies
- 964 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டி நடராஜன் விளையாடுவது சந்தேகம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. பதிவு: மார்ச் 10, 2021 09:08 AM அகமதாபாத், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜன், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பய…
-
- 0 replies
- 667 views
-
-
பெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச் உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கும் 33 வயதான ஜோகோவிச் 2011-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி முதல்முறையாக தரவரிசையில் நம்பர் ஒன் …
-
- 0 replies
- 421 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்…
-
- 5 replies
- 839 views
- 1 follower
-
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் மு…
-
- 7 replies
- 869 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது. அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களை உள்வாங்காமல் இந்த கோடையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு இம் மாதத்திற்குள் எடுக்கப்படவுள்ளதுடன், இப் பிரச்சினை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஜப்பானிய அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது. கொரோனா வைரஸ்…
-
- 0 replies
- 530 views
-
-
கத்தார் ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி வெற்றி தோகா: கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுலோவேனியா வீராங்கனை ஆந்ரேஜா கிளெபக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-4, 6-7 (5-7), 10-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லுட்மைலா கிச்செனோக்- நாடியா கிட்செனோக் இணையை போராடி தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தனர். இந்த ஆட்டம் 1 மணி 38 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றில் சிக்கிய சானியா மிர்சா அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து புதிய சீசனை வெற்றியோடு தொடங்கி இருப்பது குறிப்பிடத…
-
- 0 replies
- 622 views
-
-
-
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஸ்வின் புதிய சாதனை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-3-720x450.jpg இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார். அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந…
-
- 0 replies
- 555 views
-
-
இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…
-
- 2 replies
- 772 views
-
-
முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்ற…
-
- 0 replies
- 565 views
-
-
கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ…
-
- 1 reply
- 613 views
-
-
9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச். இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையு…
-
- 0 replies
- 509 views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய விராட் கோலி – காரணம் இதுதான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப…
-
- 0 replies
- 594 views
-
-
இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! மின்னம்பலம் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 15) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இன்று (பி…
-
- 3 replies
- 643 views
-
-
66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !! இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து…
-
- 0 replies
- 866 views
-