விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
அணியைவிட்டு விலக விரும்பும் நட்சத்திரங்களுக்கு பயிற்றுநர் எச்சரிக்கை இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாகத் தெரிவான லெய்செஸ்டர் சிற்றி அணியின் நட்சத்திரங்கள், அவ்வணியிலிருந்து விலகுவது குறித்து, அவ்வணியின் பயிற்றுநர் கிளாடியோ றைனேரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது, இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புகளில் 5,000-1 என்ற மிகக்குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்த லெய்செஸ்டர் அணி, அனைவரும் எதிர்பாராத விதமாகச் சிறப்பாக விளையாடி, கழகத்தின் 132 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதன்முறையாக, சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தது. சம்பியன்களாக அவ்வணியை உருவாக்கியமையில், இத்தாலியைச் சேர்ந்த அவ்வ…
-
- 0 replies
- 299 views
-
-
அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆனது - வரலாற்று சாதனை அஷ்ஃபாக் அஹ்மத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கேப்டன் யஷ் துல் அண்டர்-19 (U19) உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த நாடும் படைத்திராத சாதனையை இந்தியா பதிவு செய்திருக்கிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது. U19 உலகக்கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோ…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களிடம் உடல் தகுதி சோதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. இந்நிலையில் இருபதுக்கு 20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எட…
-
- 0 replies
- 360 views
-
-
அதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 2015 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைகிறார் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே. இவரின் முதல் உலகக் கோப்பைப் போட்டி 1999. பாகிஸ்தானின் சயீத் அப்ரிடிக்கும் இது 5-வது உலகக் கோப்பைத் தொடர். இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல் உலகக் கோப்பைத் தொடர். அதிக உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் முதலில் பெற்றார். கடந்த 1975-ம் ஆண்டு தொடரில் அறிமுகமான மியான்தத், முதல் 6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று, அதிக உலகக்கோப்பைத் தொ…
-
- 0 replies
- 553 views
-
-
உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை…
-
- 0 replies
- 715 views
-
-
அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…
-
- 5 replies
- 880 views
- 1 follower
-
-
அதிக சிக்சர்கள்; கெய்ல், தோனி கிளப்பில் இணைந்தார் டிவில்லியர்ஸ்: சுவையான தகவல்கள் வங்கதேசத்துக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் விளாசி மைதானம் நெடுக வங்கதேச பீல்டர்களை அலைய வைத்த டிவில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் பட்டியலில் உயர்மட்ட கிளப்பில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க, ஜெயசூரியா 270, கெய்ல் 252, தோனி 213, டிவில்லியர்ஸ் 201 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் நே…
-
- 0 replies
- 419 views
-
-
அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம் 24 முறை டக்அவுட் முறையில் வெளியேறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், அதிக டக் அவுட் ஆன வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கிப்ஸ், தில்ஷன் 23 முறை அவுட்டாகியிருந்தனர். 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல். அதிரடியாக விளையாடும் அவர் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூ…
-
- 0 replies
- 389 views
-
-
அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக். நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்…
-
- 0 replies
- 326 views
-
-
அதிக தடவை எல்.பி.டபிள்யூ.வில் வீழ்ந்த சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில், எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்த 10000-ஆவது வீரர் என்கிற பதிவு தென்னாபிரிக்க வீரர் அம்லாவுக்குக் கிடைத்துள்ளது. இவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவன் பிரதீப்பிடம் 48 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்து கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து எல்.பி.டபிள்யூ. தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு முக்கிய புள்ளிவிவரங்களில் இரு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவை எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 296 தடவை ஆ…
-
- 0 replies
- 352 views
-
-
அதிக பந்துகள்... ஆனால் ரன் எடுக்காமல் அவுட்: விசித்திர சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆனால் 1 ரன் கூட எடுக்காமல் 0-வில் ஆட்டமிழந்த சில வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் அத்தகைய விசித்திர சாதனைகள் செய்த வீரர்கள்: 1 ரன் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் டக் அவுட் ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர். நியூசி. வீரர் ஜெஃப் ஆலட். இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபமாக இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். அட! இந்தியாவுக்கு எதிராகவும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிக ரன்கள் குவித்ததில் அசாருதீனை முந்திய டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் அசாருதீனை முந்திய டோனி 4-வது இடத்தை பெற்றார். அவர் 294 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9442 ரன் எடுத்துள்ளார். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்கு வகித்தார். அவர் 35 வயதிலும் 78 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 15-வது ரன்னை எடுத்த போது டோனி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் அசாருதீனை முந்தினார். தெண்டுல்க…
-
- 0 replies
- 432 views
-
-
அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத் அ-அ+ வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.…
-
- 1 reply
- 204 views
-
-
அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297
-
- 0 replies
- 427 views
-
-
அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள் கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம். ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு, 1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல், 2018) பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ க…
-
- 0 replies
- 336 views
-
-
அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…
-
- 0 replies
- 456 views
-
-
அதிசிறந்த காற்பந்தாட்ட வீரர் தெரிவுக்கு போட்டியிடும் மூவர் உலக காற்பந்தாட்ட சம்மேளனம் , இந்த வருடத்துக்கான அதி சிறந்த காற்பந்தாட்ட வீரரைத் தெரிவு செய்ய மூவரைப் பொறுக்கி இருக்கின்றது . இந்தத் தெரிவு விபரம் , கடந்த வெள்ளியன்று FIFA வினால் இலண்டனிலிருந்து அறிவிக்கப்பட்டது . இந்த மூவர் பெயர்ப் பட்டியலில் 25 வயதான பிரேசில் சுப்பர் ஸ்டார் நெய்மர், 32 வயதான போத்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ , 30 வயதான ஆர்ஜென்டீனிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள் . பார்சலோனா கழகத்துக்காக விளையாடிய நெய்மர் , காற்பந்தாட்ட சரித்திரத்தில் சாதனை படைக்கும் 266 மில்லியன் டொலர் தொகைக்கு , பாரிஸ் கழகமொன்றினால் …
-
- 0 replies
- 377 views
-
-
அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி Published By: VISHNU 28 FEB, 2023 | 05:20 PM (நெவில் அன்தனி) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெ…
-
- 0 replies
- 593 views
- 1 follower
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…
-
- 0 replies
- 374 views
-
-
அதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார் September 24, 2019 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதை ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார். சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் சிறந்து விளையாடிய கால்பந்தாட்ட வீரர்களை கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது. இதன்போது ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகள…
-
- 0 replies
- 553 views
-
-
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர…
-
- 0 replies
- 260 views
-
-
அதிபார குத்துச்சண்டையில் விளாடிமிர் கிளிட்ஷ்கோவை வீழ்த்தி புதிய உலக சம்பியனானார் டைசன் ஃபியூரி அதிபாரப் பிரிவு குத்துச்சண்டை போட்டிக்கான புதிய உலக சம்பியன் பட்டங்களை பிரித்தானிய டைசன் ஃபியூரி சுவீகரித்துக்கொண்டார். டஸ்ல்டோர்வ் எஸ்ப்ரிட் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபாரப் பிரிவுக்கான உலக சம்பயின் பட்டத்திற்கான குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு உலக சம்பியனான யுக்ரைனிய வீரர் விளாடிமிர் கிளிட்ஷ்கோவை 115–112, 115–112, 116–111 என்ற மூன்று மத்தியஸ்தர்களின் புள்ளிகளின் அடிப்படையில் 27 வயதான டைசன் ஃபியூரி வெற்றிகொண்டார். பொப் ஃபிட்சிமன்ஸ்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=Uiuad61vkzk இந்த 'கோல்' ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம், அன்னை இயற்கை செய்த கோலம்
-
- 1 reply
- 711 views
-
-
அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…
-
- 0 replies
- 373 views
-
-
அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…
-
- 0 replies
- 1.2k views
-