விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். https:/…
-
- 3 replies
- 629 views
- 1 follower
-
-
2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. அதைத் தொடர்ந்து 8 ஆவது இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து உயர்வடைந்து செல்கின்றமையினால் தகுதி சுற்ற…
-
- 0 replies
- 623 views
-
-
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு Editorial / 2020 மார்ச் 24 , மு.ப. 08:39 - 0 - 23 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஒலமபக-படடகள-ஒததவபப/44-247383
-
- 1 reply
- 562 views
-
-
கொரோனா என்ற கொடிய நோய்த் தாக்கம் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் (ஐ.ஓ.சி.) உலக மெய்வல்லுநர் சங்கம் (வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ்) வேண்டுகோள் விடுத்துள்ளது. முழு உலகமே கொடிய நோய்த் தாக்கத்தினால் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை திட்டமிட்டவாறு ஜூலை, ஆகஸ்ட் காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானதோ விரும்பத்தக்கதோ அல்லவென சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் உலக மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் செபெஸ்டியன் கோ குறிப்பிட்டுள்ளார். 'விளையாட்டு விழாவை பிற்போடுமாறு கடிதம் மூலம் தங்களைக் கோருகின்றேன்' என கோ அனுப்பியுள்ள கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.&…
-
- 1 reply
- 451 views
-
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய 11ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சமபோஷ கிண்ண (14 வயதின் கீழ்) கால்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியும் கிண்ணியா மத்திய கல்லூரியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலய அணியை 4 - 3 என்ற பெனல்டி அடிப்படையில் மகாஜனா அணி வெற்றிகொண்டு சம்பினானது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து சம்பியன் அணி பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 827 views
- 1 follower
-
-
உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்? by : Anojkiyan உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை. அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்…
-
- 1 reply
- 713 views
- 1 follower
-
-
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் இரத்து By Mohamed Azarudeen - கொரோனா வைரஸ் பீதியானது உலகினை அச்சுறுத்தி வரும் நிலையில், அது கிரிக்கெட் விளையாட்டினையும் தொடர்ந்து பாதித்து வருகின்றது. அந்தவகையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகில் பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தினையும் மறு அறிவித்தல் ஒன்று வரும் வரையில் இடை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது. …
-
- 0 replies
- 595 views
-
-
சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ By Mohamed Shibly பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ கைதிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் ஒன்றில் விளையாடி தனது அணி கிண்ணத்தை வெல்ல உதவியுள்ளார். 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்த 39 வயதுடைய ரொனால்டினோ மோசடி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக தற்போது பரகுவே தலைநகருக்கு வெளியில் இருக்கும் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்ட சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (13) சிறைக்குள் நடைபெற்…
-
- 0 replies
- 626 views
-
-
தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம் By Mohammed Rishad விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடுசெய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதல் தடவையாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகவர்ல ஓட்டப் போட்டிகள் இன்று (15) காலை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. எனினும், கடந்த மாதம் …
-
- 0 replies
- 552 views
-
-
வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…
-
- 0 replies
- 443 views
-
-
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 13ம் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி வரும் 15ல் லக்னோவிலும், மூன்றாவது போட்டி வரும் 18ம் தேதி கோல்கட்டாவிலும் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த இரு போட்டிகளையும் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. தற்போது புதிய திருப்பமாக இத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 29ல் துவங்க இரு…
-
- 0 replies
- 449 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்திற்குள் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்தி;ற்குள் நடத்துவது குறித்து சிந்தித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள கடும் நடவடிக்கைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்பிரல் 15 ம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் வர்த்தக வ…
-
- 7 replies
- 817 views
-
-
கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான் By Mohammed Rishad கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழ…
-
- 0 replies
- 543 views
-
-
கொரானா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு, முதல் முறையாக பார்வையாளர்களின்றி நடைபெற்றது. 2020 டோக்யோ ஒலிம்பிக்கிற்கான ஜோதி ஏற்றும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடைபெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற கீரீஸ் வீராங்கனை அன்னா கோராகாக்கிமுதல் நபராக ஒலிம்பிக் ஜோதியை கையிலேந்தினார். இதன் மூலம் முதலாவதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். https://www.polimernews.com/dnews/103498/முதல்-முறையாகபார்வையாளர்களின்றிஏற்றப்பட்ட-ஒலிம்பிக்-ஜோதி
-
- 1 reply
- 543 views
-
-
லிப்சிக், அடலாண்டா அணிகள் சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேற்றம் By Mohamed Shibly - <a target='_blank' href='https://flow.aquaplatform.com/ck.php?n=31e28fe'><img border='0' alt='' src='https://flow.aquaplatform.com/avw.php?zoneid=2124&amp;n=31e28fe' /></a> ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்றன. இதில் RB லிப்சிக் மற்றும் அடலாண்டா அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, …
-
- 0 replies
- 502 views
-
-
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு by : Anojkiyan இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற 5 பேர் கொண்ட அணியிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். எனினும், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவ…
-
- 0 replies
- 425 views
-
-
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி By Mohamed Azarudeen இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துட…
-
- 0 replies
- 538 views
-
-
பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு By Mohamed Shibly கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்கான, அடுத்துவரும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) இணங்கியுள்ளன. ஆசியாவின் உறுப்பு நாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2020 மார்ச் 23-31 மற்றும் 2020 ஜூன் 1-9 காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும்…
-
- 0 replies
- 384 views
-
-
ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது! இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் போட்டிகளானது ஒத்தி வைக்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் நிறுவன தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 13 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்…
-
- 0 replies
- 752 views
-
-
35 வருடத்திற்கு அப்புறம் இப்படி.. இந்த மாதிரி நடந்தா கௌரவம் போயிடும்.. மேயரை புலம்ப விட்ட கொரோனா! 2020 ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது. ஊடகங்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி.35 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க உள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு உரிய கௌரவம் பறிபோய்விடும் என ஒலிம்பியா மேயர் கடிதம் எழுதி உள்ளார்.2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் பாதிப்படைந்து இருக்கும் நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி …
-
- 0 replies
- 460 views
-
-
சத்திர சிகிச்சையின் பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய ஹார்டிக் பாண்டியா By Akeel Shihab - சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய குழாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியானது கடந்த வருடம் (2019) செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாட…
-
- 0 replies
- 321 views
-
-
பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு By Mohamed Azarudeen இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்” (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீ…
-
- 0 replies
- 790 views
-
-
ரியல் மெட்ரிட் அடுத்தடுத்து தோல்வி: சிட்டியை வீழ்த்தியது யுனைடட் Mohamed Shibly இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ரியல் பெடிஸ்டா ரியல் பெடிஸ்டா அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த ரியல் மெட்ரிட் அணி லா லிகா தொடரில் பார்சிலோனாவிடம் முதலிடத்தை இழந்தது. முன்னாள் பார்சிலோனா முன்கள வீரரான கிறிஸ்டியன் டெல்லோ கடைசி நேரத்…
-
- 0 replies
- 366 views
-
-
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இரு அணிகளும் மோதியபோது, இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். ஜெமிமா, மந்தனா, கேப்டன் ஹர்மான்பிரீத் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தால் ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கலாம். அதே சமயம், மெக் லான்னிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில…
-
- 1 reply
- 474 views
-
-
வடக்கின் போர் இன்று ஆரம்பம் ! சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான 114ஆவது வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்:லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 3ஆவது பழைமை வாய்ந்த போட்டியாக வடக்கின் போர் அமைகின்றது. அத்துடன் 3 நாட்கள் விளையாடப்படும் மூன்றாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியாகவும் இது அமைகின்றது. இவ்வாண்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில்சென் ஜோன்ஸ் அணி பல சவால்களை சந்தித்துள்ளதுடன் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத அண…
-
- 5 replies
- 956 views
-