Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. (நெவில் அன்தனி) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின. வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானர…

    • 0 replies
    • 329 views
  2. இலங்கை அரங்குகளுக்கு ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் By Mohamed Shibly - இலங்கையின் ஓய்வு பெற்ற ஐந்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது. இதேநேரம், பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட…

    • 0 replies
    • 431 views
  3. மீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார் Published by J Anojan on 2019-10-25 13:32:47 (பதுளையிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார். பதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார், இவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் …

    • 0 replies
    • 553 views
  4. மெஸ்ஸியின் சாதனை கோலுடன் பார்சிலோனா வெற்றி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்றன. குறித்த போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் ஸ்லாவியா ப்ரகுவே லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல் மூலம் செக் குடியரசின் ஸ்லாவியா ப்ரகுவே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கோல் பெற்றதன் மூலம் 15 சம்பியன்ஸ் லீக்கில் பருவங்களில் தொடர்ச்சியாக கோல் பெற்ற வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதன்போது மன்செஸ்டர் யுனைடட் முன்னாள் வீரர் …

    • 0 replies
    • 466 views
  5. SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு By Mohamed Azarudeen - தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) இந்த ஆண்டு (2019) 13ஆவது தடவையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவில் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கெடுக்கும் நாடுகள் (இளையோர் கிரிக்கெட் அணிகள்) இடையே T20 கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த T20 கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்…

    • 0 replies
    • 492 views
  6. பத்து ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் புறப்பட தயாராகும் சங்கக்கார Published by J Anojan on 2019-10-23 11:41:01 லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.சி.சி.யின் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை. இந் நிலையில் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வ…

    • 0 replies
    • 443 views
  7. ’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நட…

    • 0 replies
    • 436 views
  8. சீனாவில் நடைபெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7 ஆவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் கடந்த 2018…

    • 0 replies
    • 477 views
  9. 162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர…

  10. ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே Published by J Anojan on 2019-10-22 11:44:57 ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்த…

    • 0 replies
    • 458 views
  11. 14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால் Published by J Anojan on 2019-10-21 11:40:05 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா. இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஸ்பெயினில் நடந்த இந்த திரு…

    • 1 reply
    • 578 views
  12. ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட் Published by J Anojan on 2019-10-21 13:48:21 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தத…

    • 0 replies
    • 330 views
  13. குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019 தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8…

  14. பாக்கிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவர் மற்றும் ரி 20 அணித்தலைவர் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் சர்பராஸ் அகமட்டை நீக்கியுள்ளதாக பாக்கிஸ்தானின் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாக்கிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அசார் அலி தலைமை தாங்குவார் என தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரி2அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் எனவும் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பாக்கிஸ்தான் சந்தித்த மோசமான தோல்விகளை தொடர்ந்தே தெரிவுக்குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாக்கிஸ்தான் ஏழாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ரி20 ப…

    • 2 replies
    • 536 views
  15. அந்த்ரே ரஸல் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு…

    • 0 replies
    • 379 views
  16. ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஷ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான, மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1st T20I, at Adelaide, Oct 27 2019 2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019 3rd T20I, (N) at …

    • 0 replies
    • 478 views
  17. `எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும் தமிழர் என்ற உணர்வுதான் தமிழர்களுக்கான தனி அடையாளமாக இருக்கும்' என்பதை தனது ட்விட்டர் பதிவு மூலம் நிரூபித்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்றதுமே நினைவுக்கு வரும் முதன்மையான முகங்களில் மிதாலி ராஜும் ஒருவர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே பெண். 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற, மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதற்காக…

  18. தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை Oct 15, 20190 முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் http://www.samakalam.com/செய்திகள்/தேசியமட்ட-பளுத்-தூக்கும்/

  19. இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், …

    • 0 replies
    • 724 views
  20. உலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி.! 2019 உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஓவரும் டையானால் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 2019 உலக கோப்பை இறுதி போட்டி மாதிரியான, உச்சகட்ட பரபரப்பான ஒரு நாக் அவுட் போட்டியை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என உறுதியாக கூறலாம். அந்தளவிற்கு மிகவும் பரபரப்பான போட்டி அது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சீட் நுனியில் அமரவைத்த போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் …

  21. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…

    • 0 replies
    • 387 views
  22. முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர் 42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் …

    • 4 replies
    • 755 views
  23. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டத்தையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டத்தையும் எடுத்தனர். விராட் கோலி 254 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ஓட்ட…

    • 0 replies
    • 861 views
  24. முதலாவது தகுதி ஆட்டம் : Qualifier #1

    • 2 replies
    • 595 views
  25. பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.