விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள் இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது. டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு…
-
- 0 replies
- 491 views
-
-
பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார். புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட…
-
- 0 replies
- 639 views
-
-
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய…
-
- 0 replies
- 434 views
-
-
பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்க…
-
- 1 reply
- 701 views
-
-
உலகில் உள்ள பெரும்பான்மையான உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில், பல ஆண்டுகள் கோலோச்சும் வீரர்கள் கூட 35, 40 வயதில் ஓய்வு அறிவித்துவிடுவார்கள். அந்த வீரர்கள் விளையாடும்போது எவ்வளவு கட்டுமஸ்தாக இருந்திருந்தாலும் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் அதீத விடுப்பினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ருக்மணி தேவி, 64 வயதிலும் தடகளப் போட்டிகளில் கலக்கி வருகிறார். அடுத்ததாக ‘மாஸ்டர்ஸ் வேர்ல்டு மீட்' என்று சொல்லப்படும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாராகி வரும் ருக்மணி தேவியை, பயிற்சி எடுக்கும் இடத்திற்கே சென்று சந்தித்தோம். ஜாவ்லின் த்ரோ, ஹாம்மர் த்ரோ, லா…
-
- 0 replies
- 668 views
-
-
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சாதனைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை என அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உங்களது சாதனைகள் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு மத்தியுஸ் நேர்மையாக பதில் அளிப்பது என்றால் நான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். நான் என்னால் முடிந்ததை விட குறைவாகவே சாதித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். 2013 முதல் 2016 வரை நான் அதிகளவு போட்டிகளில் விளையாடினேன் அது எனது உடலிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் நான் காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டேன் 2016 முதல் 2018 வரை அணியில் முழுமை…
-
- 0 replies
- 332 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குபட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை ஈட்டியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. https://www.virakesari.lk/article/64786
-
- 0 replies
- 419 views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..! தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிக இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளதாகவும், இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக, தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுவிற்பாளராக செயற்பட்டு வருகின்றார். 2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த…
-
- 1 reply
- 402 views
-
-
இலங்கை அணியினை, இலக்கு வைத்து.. மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்? இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அ…
-
- 1 reply
- 645 views
-
-
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது. இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43) பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள…
-
- 2 replies
- 658 views
-
-
இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர். …
-
- 1 reply
- 533 views
-
-
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018ஆம் ஆண்டு இவர் தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக், தற்போது மாமாவோடு (தாயின் தம்பி) வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ஒரு தம்பியும் இருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, க…
-
- 0 replies
- 494 views
-
-
இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் தக்கவைத்துக் கொண்டது. மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 301 ரன்கள் சே ர்த்தது. இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால்,197 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி…
-
- 0 replies
- 705 views
-
-
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார். நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1…
-
- 0 replies
- 455 views
-
-
Canada, Ontario, Mississaugaஐச் சேர்ந்த 19 வயது Bianca Andreescu மகளிருக்கான US Open Tennis போட்டியில், தனிநபர் Grand Slam பட்டத்தை வென்ற முதல் கனேடியராகியுள்ளார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் முதல்தர மற்றும் அதிகூடிய 39 Grand Slam பட்டங்களை வென்ற, 37 வயதான Serena Williamsஐ, 6-3, 7-5 என்ற செட்களில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், WTA தரவரிசையில் 15வது இடத்தில் இருந்த Bianca, 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் US$3.85million பரிசுப் பணமும் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த Bianca, இந்த நிமிடத்துக்காகவே காத்திருந்ததாகவும், வார்த்தைகளால் விபரிக்க முடியாவிட்டாலும், தனது கனவு நனவான நாள் …
-
- 0 replies
- 892 views
-
-
புதிய மகுடம் சூடிய, செரீனா வில்லியம்ஸ்.. அமெரிக்க ஓபனில் 100 வெற்றிகளை எட்டினார்! அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தார். மேலும், தன் நூறாவது வெற்றி மூலம், 2019 அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.சீனாவின் வாங் கியாங்-கை கால் இறுதி சுற்றில் சந்தித்தார் செரீனா வில்லியம்ஸ். செரீனாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவர் 44வது நிமிடத்திலேயே தோல்வி அடைந்தார். 6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இந்த வெற்றி மூலம் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கிறார். இது வரை மூன்று சீன வீரர் அல்ல…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் தனுஸ்க குணதிலக்க அதிகூடுதலாக 30 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 24 ஓட்டங்களையும், லஹிரு மதுசாங்க 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. போட்டியில் இலங்கை அணியின் இருபதுக்கு 20…
-
- 2 replies
- 515 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் சதத்தைப் பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஹமத் ஷா நிகழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே ரஹ்மத் ஷா ஆப்கானிஸ்தானின் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்தாடியது. அதன்பிறகு தனது இரண்டாவது போட்டியாக தற்போது பங்களாதேஷ் அணியுடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றது. பங்களாதேஷில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதி…
-
- 0 replies
- 399 views
-
-
பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் கஹ் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் தெரிவுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188848/
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்…
-
- 0 replies
- 525 views
-
-
குணசேகரன் சுரேன் 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, பி.ப. 06:14 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றே சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 36, டினோசன் 30, சங்கீர்த்தனன் 29, வினோஜன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவ…
-
- 0 replies
- 570 views
-
-
அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் மாலிங்க நியூசிலாந்து அணியுடன் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றையதினம் (01) இரவு நேர போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும், இசுறு உதான ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரிம் செளதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கமைய, ச…
-
- 1 reply
- 540 views
-
-
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா. https://www.virakesari.lk/article/63873
-
- 0 replies
- 464 views
-
-
உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை…
-
- 0 replies
- 710 views
-
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 666 views
-