விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
பத்து ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் புறப்பட தயாராகும் சங்கக்கார Published by J Anojan on 2019-10-23 11:41:01 லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.சி.சி.யின் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை. இந் நிலையில் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வ…
-
- 0 replies
- 445 views
-
-
’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நட…
-
- 0 replies
- 447 views
-
-
சீனாவில் நடைபெறும் உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளியான தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் 7 ஆவது உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ள இதில், 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு, 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக கலந்துகொண்ட தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன், 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் கடந்த 2018…
-
- 0 replies
- 489 views
-
-
162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர…
-
- 1 reply
- 411 views
-
-
ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே Published by J Anojan on 2019-10-22 11:44:57 ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்த…
-
- 0 replies
- 478 views
-
-
14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால் Published by J Anojan on 2019-10-21 11:40:05 பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார். பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த இவர், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் மேரி பெரேல்லா என்ற தனது பாடசாலை தோழியை காதலித்து வந்தார். நடால் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மேரி பெரேல்லா. இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மே மாதம் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஸ்பெயினில் நடந்த இந்த திரு…
-
- 1 reply
- 582 views
-
-
ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட் Published by J Anojan on 2019-10-21 13:48:21 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தத…
-
- 0 replies
- 340 views
-
-
குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019 தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8…
-
- 1 reply
- 677 views
-
-
பாக்கிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவர் மற்றும் ரி 20 அணித்தலைவர் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் சர்பராஸ் அகமட்டை நீக்கியுள்ளதாக பாக்கிஸ்தானின் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாக்கிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அசார் அலி தலைமை தாங்குவார் என தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரி2அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் எனவும் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பாக்கிஸ்தான் சந்தித்த மோசமான தோல்விகளை தொடர்ந்தே தெரிவுக்குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாக்கிஸ்தான் ஏழாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ரி20 ப…
-
- 2 replies
- 545 views
-
-
அந்த்ரே ரஸல் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு…
-
- 0 replies
- 389 views
-
-
ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு - 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஷ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான, மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1st T20I, at Adelaide, Oct 27 2019 2nd T20I, (N) at Brisbane, Oct 30 2019 3rd T20I, (N) at …
-
- 0 replies
- 485 views
-
-
`எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும் தமிழர் என்ற உணர்வுதான் தமிழர்களுக்கான தனி அடையாளமாக இருக்கும்' என்பதை தனது ட்விட்டர் பதிவு மூலம் நிரூபித்துள்ளார் இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்றதுமே நினைவுக்கு வரும் முதன்மையான முகங்களில் மிதாலி ராஜும் ஒருவர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே பெண். 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற, மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதற்காக…
-
- 2 replies
- 815 views
-
-
தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை Oct 15, 20190 முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் http://www.samakalam.com/செய்திகள்/தேசியமட்ட-பளுத்-தூக்கும்/
-
- 1 reply
- 504 views
-
-
இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், …
-
- 0 replies
- 726 views
-
-
உலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி.! 2019 உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஓவரும் டையானால் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 2019 உலக கோப்பை இறுதி போட்டி மாதிரியான, உச்சகட்ட பரபரப்பான ஒரு நாக் அவுட் போட்டியை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என உறுதியாக கூறலாம். அந்தளவிற்கு மிகவும் பரபரப்பான போட்டி அது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சீட் நுனியில் அமரவைத்த போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் …
-
- 1 reply
- 495 views
-
-
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…
-
- 0 replies
- 395 views
-
-
முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர் 42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் …
-
- 4 replies
- 767 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டத்தையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டத்தையும் எடுத்தனர். விராட் கோலி 254 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ஓட்ட…
-
- 0 replies
- 862 views
-
-
-
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா 58 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திர…
-
- 0 replies
- 401 views
-
-
படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். அவரது பெயர் செனூரன் முத்துசாமி. என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா? ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். தமிழ் தெரியாது 25 வயதாகும் செனூரனின…
-
- 6 replies
- 1.6k views
-
-
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது. இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே தமது முன்களவீரர் போலோ டிபாலா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், இன்டர் மிலனின் மத்தியகளவீரர் நிக்கொலோ பரெல்லாவின் உதையானது ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட்டின் கையில் பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமநிலைப்படுத்தியது. இவ்வாறாக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில், இரண்டா…
-
- 1 reply
- 714 views
-
-
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…
-
- 1 reply
- 525 views
-
-
முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். 33 வயதான ஆஃப்-ஸ்பின்னர் கடைசியாக 2018 டிசம்பரில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் விளையாடும் லெவன் போட்டியை தவறிவிட்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த…
-
- 0 replies
- 713 views
-