Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…

    • 4 replies
    • 1.1k views
  2. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா 58 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திர…

    • 0 replies
    • 392 views
  3. படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். அவரது பெயர் செனூரன் முத்துசாமி. என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா? ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். தமிழ் தெரியாது 25 வயதாகும் செனூரனின…

    • 6 replies
    • 1.6k views
  4. இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது. இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே தமது முன்களவீரர் போலோ டிபாலா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், இன்டர் மிலனின் மத்தியகளவீரர் நிக்கொலோ பரெல்லாவின் உதையானது ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட்டின் கையில் பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை இன்டர் மிலனின் முன்களவீரரான லொட்டரோ மார்ட்டின்ஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை இன்டர் மிலன் சமநிலைப்படுத்தியது. இவ்வாறாக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில், இரண்டா…

    • 1 reply
    • 703 views
  5. 35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…

    • 1 reply
    • 517 views
  6. முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். 33 வயதான ஆஃப்-ஸ்பின்னர் கடைசியாக 2018 டிசம்பரில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் விளையாடும் லெவன் போட்டியை தவறிவிட்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த…

    • 0 replies
    • 701 views
  7. தென்னபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 02 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் ஆர்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 215 ஓட்டம் எடுத்தார். ரோகித் சர்மா 176 ஓட்டம் எடுத்தார். இதன்பின்னர் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. எல்கர் 160 ஓட்டங்களையும், டீகொக் 111 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டுக்களை சாய்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 வ…

    • 0 replies
    • 432 views
  8. சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் …

    • 2 replies
    • 880 views
  9. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது - 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 …

    • 0 replies
    • 528 views
  10. இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான இரணடாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படது. இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந் நிலையில் மூன்றாவது ஒரு நாள்…

  11. இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (02) அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லாஹூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தினை அந்த அணியின் பயிற்றுவிப்பாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் இன்று (02) வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்டிருக்கும் T20I குழாத்தை பொருத்தவரை, இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் குழாத்திலிருந்து மூன…

    • 0 replies
    • 395 views
  12. எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை பொறுப்பேற்ற சங்கா லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார் சங்கக்கார, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மேரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது. அத்தோடு, சங்கக்கார இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்தும் உள்ளார். இன்று தனது பதவியை பொறு…

    • 1 reply
    • 512 views
  13. T20i தரவரிசையில் மிகப் பெரிய மாற்றங்கள் By Akeel Shihab - இந்தியா – தென்னாபிரிக்கா T20i தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண T20i தொடர் மற்றும் அயர்லாந்து முக்கோண T20i தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் பிரகாசித்த வீரர்களை உள்ளடக்கிய புதிய T20i வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை சமநிலையில் நிறைவுக்குவந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடை…

    • 0 replies
    • 685 views
  14. “நாடு தான் முக்கியம் தோனி அல்ல!” - காம்பீர் அதிரடி முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விஷயங்களையும் பற்றிய கேள்விக்கும் ஒளிவுமறைவில்லாமல் திறந்த மனதுடன் நேரடியாக பேசக்கூடிய சுபாவம் உள்ளவர். காம்பீரின் சக வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில் தோனியின் ஓய்வு பற்றி உங்கள் பார்வை என்ன? என்று கேட்கப்பட்டது. ஓய்வு முடிவு என்பது வீரரின் தனிப்பட்ட ஒன்று, அதுவரை அவர்கள் விளையாட எந்த தடையும் இல்லை, அதே நேரத்தில் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும். இருப்பினும் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோ…

  15. உலக தடகளப் போட்டியில் சம்பியனான கோல்மன்! உலக தடகளப் போட்டியில் அமெரிக்க வீரர் கோல்மன் தங்கப் பதக்கம் வென்று சம்பியனானதுடன், உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்றார். 17 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. 8 வீரர்கள் கலந்துகொண்டிருந்த இறுதிச் சுற்றில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன், 9.76 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் இந்த வெற்றிமூலம் 23 வயதான கிறிஸ்டியன் கோல்மன் உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தையும் பெற்ற…

  16. சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது. World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள். தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்த…

    • 0 replies
    • 672 views
  17. அதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார் September 24, 2019 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதை ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார். சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் சிறந்து விளையாடிய கால்பந்தாட்ட வீரர்களை கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது. இதன்போது ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகள…

  18. அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டத்தில் 34 சாதனைகள் முறியடிப்பு By Mohammed Rishad - 23/09/2019 கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரிவும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி அணியும், பெண்கள் பிரிவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தையும் வலல ஏ ரத்னாயக்க கல்லூரி அணியும் சுவீகரித்தன. இவ்விரண்டு பாடசாலைகளும், கடந்த வார இறுதியில் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரிலும் முற…

  19. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவி…

    • 0 replies
    • 507 views
  20. மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்…

    • 0 replies
    • 651 views
  21. ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து By Ravivarman - கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிவகுருநாதன் நினைவுக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தை தமதாக்கினர். வருடாந்தம் இடம்பெறும் இந்த போட்டியின் இவ்வருட மோதல் கடந்த சனிக்கிழமை (14) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் ஈரத்தன்மையின் காரணமாக இருபது ஓவர்களிற்கு மட்டுப்பட்டிருந்த இந்த போட்டியில் ஆனந்தா கல்லூரியினை வெற்றிபெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தினை…

    • 1 reply
    • 952 views
  22. ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள் இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது. டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு…

  23. பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார். புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட…

    • 0 replies
    • 646 views
  24. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய…

    • 0 replies
    • 454 views
  25. பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.