Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ‘கெட்ட பையனா’ இஷாந்த் சர்மா புதுடில்லி: ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை இஷாந்த் சர்மா உணராதவராக இருக்கிறார். களத்தில் இவரது ஆக்ரோஷம் எல்லை மீறுவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 28. களத்தில் இவரை சீண்டி விட்டால் போதும், மோதலில் இறங்கி விடுவார். கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கம்ரான் அக்மலுக்கு இவர் பவுலிங் செய்தார். அப்போது கம்ரான் ஏதோ கூற, உடனடியாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் சமீபத்தில் நடந்த பிரிஸ்பேன் டெஸ்டில், ஸ்மித்தை தகாத வார்த்தைகளால் திட்டிய இஷாந்த் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இலங்கை மண்ணில் அளவுக்கு அதிகமாக …

  2. 200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆ­ஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…

  3. சகல துறை வீரர்களின் தர வரிசையில் அஸ்வின் முதலிடம் December 09, 2015 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் சகல துறை வீரர்களின் தர வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 3–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிவின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தர வரிசைப்பட்டியலில் ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), க…

  4. ஐ.சி.சி. விருது : ஸ்டீவன் ஸ்மித், டி வில்லியர்ஸ் கைப்பற்றினர் ! இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கவுரவமிக்க கேரி சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்டீவன் ஸ்மித்துக்குதான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார். ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்க…

  5. $100 மில்லியன் பரிசு பெறப்போகும் முதல் வீரர் யார் December 27, 2015 டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பணம் பரிசாக பெறும் வீரர்களில் முதல் இரண்டு இடங்களுக்கு சுவிஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெடரர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 17 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள பெடரர் இதுவரை பரிசு மூலம் 97.3 மில்லியன் டொலர் பணம் சம்பாதித்துள்ளார். அதே போல், கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிக், 94 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். இந் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியின் வெற்றிய…

  6. [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் 81 இந்திய வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட கிடையாது. தமிழக விளையாட்டுத்துறை தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்கிறது. நம்மிடம் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சியாளர்களுக்கும் குறைவில்லை. இருந்தும் விளையாட்டில் எப்போதும் நமக்கு கடைசி ரேங்க்தான்! மிகச்சிறிய மாநிலமான மணிப்பூர் கூட தன் பங்குக்கு 6 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருக்கிறது. நம் அருகாமை மாநிலமான கர்நாடகவிலிருந்து 9பேர் ஆந்திராவிலிருந்து 8பேர் என அசத்துகின்றனர். ஆனால் நாமோ ஒரே ஒரு வீரரை கூட இந்தியா சார்பாக அனுப்பவில்லை. ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து ரெஞ்சித் மகேஸ்வரி,ருஷ்மி சக்ரவர்த்தி,ஸ்ரீஜேஸ் என மூன்று பேர் சென்று இ…

  7. வணக்கம் உறவுகளே கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பாத்து இருக்கும் 20 ஓவர் உலக கிண்ண‌ கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை இலங்கையில் நடை பெற உள்ளது....போட்டி அட்டவனையை இங்கோ இணைக்கிறேன்... உங்கள் கிரிக்கெட் அபிபிராயத்தை கீழ எழுதலாம்

    • 877 replies
    • 34.8k views
  8. கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான் By Mohammed Rishad கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழ…

    • 0 replies
    • 513 views
  9. Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித…

  10. இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

  11. பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்! டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுடனான மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. ம…

  12. உலகக் கிண்ணப் போட்­டி­களில் 48 நாடுகள்; பீபா வாக்­கெ­டுப்பு இன்று இன்னும் ஒன்­பது வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 48ஆக உயர்த்த சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்­களின் சங்கம் (பீபா FIFA) திட்­ட­மிட்­டுள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் நாடு­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­ப­தற்கு பீபா தலைவர் ஜியானி இன்­பன்­டீனொ பெரும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிர­தி­நி­திகள் அணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதா என்­பது குறித்து நடத்­தப்­படும் வாக்­கெ­டுப்பில் கலந…

  13. “சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…

  14. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;- “இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளத…

  15. இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையை சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. இலங்கையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகளும், திசரா பெரேரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த தடுமாற்றம் கடைசிவரை நீடித்தது…

  16. தோனி இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? #VikatanSurveyResults சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக உள்ளே வருவதற்கான சிக்னல்கள் கிடைத்துவிட்டன. இரண்டு ஆண்டுகளாக சி.எஸ்.கே இல்லாததால் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் உள்ள அணிக்கு ஆதரவை அளித்துவந்தார்கள் ரசிகர்கள். அடுத்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறியவே, இந்த #VikatanSurvey. விகடன்.காம் வாசகர்களிடம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக இப்படியொரு சர்வேவை எடுத்திருந்தோம். தோனிக்கு இதில் மிகப்பெரிய அளவில் ஆதரவு குவிந்துள்ளது. ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 1. சி.எஸ்.கே-வுக்கு யார் கேப்டனாகப் பொறுப்பேற்க வேண்டும்? முதல் கேள்விக்கே…

  17. ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா! நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை் போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ரொனால்டோ மட்டுமே அவுட்..…

  18. 3 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கராட்டி வீரர் தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் சௌந்தரராஜா பாலுராஜ் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைவென்று சாதனை படைத்துள்ளார். கல்முனை, பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஷ்ட பிரிவு காட்டாப்போட்டியில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனைபடைத்தார். இறுதியாக இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொர…

  19. ரஃபேல் நடால் 21 டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வென்று உலக சாதனை - ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TPN/GETTY IMAGES ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோருக்கு இடையே நடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ரஃபேல் நடால். மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்றார் நடால். இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால். அமெரிக்காவின் டென்னிஸ் …

  20. உதைபந்தாட்டமும் மத்தியஸ்த்தமும் விதிமுறைகள் புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்து உதைபந்தாட்ட வீரர்களுக்கும் இளையோர்களுக்கும் மற்றும் கால்பந்தாட்ட விசிறிகளுக்கும் உதவும் வகையில் என்னாலான ஒரு முயற்சி. விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் அதன் விதிமுறைகளை சரியாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். விளையாட்டு வீரர்களுக்கிடையிலும், மத்தியஸ்த்தருக்கும் விளையாடுபவர்களுக்கும் இடையிலும் ஏற்படும் பிணக்குகளுக்கும் சச்சரவுகளுக்கும் விதிமுறைகளைப் பற்றிய போதிய விளக்கம் இல்லாமையும் ஒரு காரணமாகின்றது. உலக உதைபந்தாட்ட்ச் சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை என் அறிவிற்கேற்ப் தமிழில் தர முயற்சிக்கின்றேன்.சில விதிமுறைகள் நாடுகளுகேற்ப சிறிய வித்தியாசங்களைக் கொண்டிருக்கும். …

  21. பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள் பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் …

  22. றியல், அத்லெட்டிகோ வென்றன ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன. றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில் மலாகாவை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கஸேமீரோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ மட்ரிட், 5-0 என்ற கோல் கணக்கில், லெவன்டேயை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், கெவின் கமெய்ரோ ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. தோற்றது பெயார்ண் மியூனிச் …

  23. இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன. டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி இந்த புதிய சாத­னையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த இரண்டு மணித்­தி­யா­லயம் 40 நிமிடம் 7 வினா­டி­களில் அடைந்த பந்­தயத் தூரத்தை, தற்­போது ஹிருணி விஜே­ரத்ன இரண்டு மணித்­தி­யா­லயம் 36 நிமி­டங்கள் 35 வினா­டிகளில் கடந்து இலங்­கையின் தேசிய சாத­னையை புதுப்­பித்­துள்ளார். இந்த தேசிய சாத­னை­யுடன் எதிர்­வரும் ஏப்ரல் மா…

  24. கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…

  25. இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஓய்வு பெற்றதன் பின்னர் இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்தார். ஒரு நாள் அரங்கில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இரட்டை சகோதர்களான சங்கக்கார, ஜயவர்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய இரு தூண்கள் ஆவர். ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஓய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.